எதற்கிந்த கெடுபிடிகள்! தேவை இல்லாத பரிசோதனைகள். அத்தனை மக்களுக்கும் இது சாத்தியமா? இதனால் நேரவிரயமும், நெருக்கடிகளுமே கூடும். பெரும் மக்கள் திரளுடன் தேர்தல் பிரச்சார ஜனநாயகத் திருவிழா இத்தனை நாட்களாக நடந்தது தானே! அப்ப என்ன கொரோனா ஓய்வெடுக்கப் போனதா? நாளை அது வாக்குச் சாவடிகளுக்கு ‘ஸ்பெஷல் விசிட்’ செய்ய இருப்பதாக அதிகாரிகளுக்கு சொன்னதா..? வாக்குப் பதிவின் போது கொரானா நெருக்கடிகளை செய்வதன் உள்நோக்கம் என்ன? ஆறடி இடை வெளியிட்டு தான் நிற்க வேண்டும். முகக் கவசம் போட்டுத் தான் வர வேண்டும். சாணிடைசர் ...