கடற்கரை நகரமான சென்னையின் பூர்வீகக் குடிகள் என்றால், அது மீனவர்களே! ஆனால், சிங்காரச் சென்னையின் பெயரால் மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்து கிறார்கள்! கடற்கரை லூப் சாலையின் மீன் கடைகளை அதிரடியாக அகற்றிய நடவடிக்கை சொல்ல வரும் செய்தி என்ன..?
சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதி முழுவதும் மீனவர் குப்பங்களாக ,அவர்கள் வாழ்விடமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த மீனவ குப்பங்களுக்கு மேற்கே விவசாய கிராமங்கள் இருந்தன.
தொழில் வளர்ச்சி என்பதன் பெயரால் சென்னை நகரத்தின் கடற்கரையை ஒட்டி தொழிற்சாலைகளும் ,துறைமுகங்களும் , அனல் மின்சார உற்பத்தி நிலையங்களும் வந்தன. குறிப்பாக வட சென்னையில் மிகப்பெரும் பாதிப்பை இதனால் மீனவ மக்கள் சந்தித்தனர். கொசஸ்தலை ஆறே காணாமல் போய்விடும் அளவில் அனல் மின் நிலையங்களும், தொழிற்சாலைகளும், காமராஜ் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகமும் மீனவ மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தை உண்டாக்கி விட்டது. அவர்கள் வாழ்விடங்களில் இருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வாழ்வதற்கான ஆதாரமே கடல்தான். கடலில் இருந்து அவர்கள் பிரிக்கப்பட்டனர். அந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதையும் எந்த அரசும் செய்யவில்லை.
அன்றைய தினம் ஆசிய வங்கி மிகப் பெரிய அளவில் நிதி உதவி செய்ய முன்வந்தது. அதற்கு முன் நிபந்தனையாக மெரினா கடற்கரையை அழகு படுத்தக் கூறியது. படகுகள், மீன் வலைகள் கடற்கரையின் அழகை கெடுக்கின்றனவாம். உண்மையில் மீன் வலைகளும் மீனவர்களின் படகுகளும் தான் கடற்கரையின் அழகுக்கு அழகு சேர்ப்பது. ஆனால், அன்றைய முதல்வாராக இருந்த எம்.ஜி.ஆர், ”சென்னையை சிங்கார சென்னையாக மாற்றப் போகிறேன்” என்றார்!
மீனவ நண்பனாக நடித்து தமிழ்நாட்டின் முதல்வராக ஆன எம் ஜி ஆர் ஒரு நாள் அதிரடியாக 10,000 கவல்துறையினரை களத்தில் இறக்கி. மெரினா கடற்கரையில் இருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் வலைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் கொதித்தெழுந்து போராடினர். ஒரு சிலர் இந்த அறிவிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டனர். நீதிமன்றங்களை நாடினர். இப்படி தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு அமைதியான முறையில் மீனவர்கள் போராட்டம் செய்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போராடடிக் கொண்டிருந்த மீனவ மக்கள் மேல் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி 1985ல் துப்பாக்கிச் சூடு நடத்தியது எம்ஜிஆர் அரசு. அதில் ஐந்து மீனவர்கள் இறந்தார்கள். 19 பேர் படுகாயமுற்றனர். இன்னும் கூட உயிர்கொடுத்து போராட மீனவ மக்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கண்டு மிரண்ட எம்.ஜி.அரசு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் அராஜகத்தை நிறுத்தி வைத்தது.
சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் அருகே ‘மூர் மார்க்கெட்’ என்ற ஒரு பிரம்மாண்ட சந்தை இயங்கி வந்தது. அங்கே பழங்காலத்து அரிய கலைப் பொருட்கள் தொடங்கி பழைய புத்தகங்கள் வரை கிடைக்கும். ‘கிடைக்காத பொருளே இல்லை’ எனச் சொல்லும் அளவுக்கு திகழ்ந்தது. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த மூர்மார்க்கெட் அருகே உள்ள நேரு ஸ்டேடியத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என திட்டமிட்ட நிலையில், அங்கே இருந்த மூர்மார்க்கெட் ஆதிக்க சக்திகளின் கண்களை உறுத்தியது. அவர்கள், எம்.ஜி.ஆர் அரசுக்கு தந்த நெருக்கடியால் வியாபாரம் செய்து வந்த ஏழை எளிய மக்களை அரசு அப்புறப்படுத்தி தூக்கி எறிய எத்தனித்தது. அப்போது நீதிமன்றத்தை நாடிய ஏழை, எளிய வியாபாரிகளுக்கு ஆதரவாக அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து உத்தரவு போட்டார் அன்றைய உயர் நீதிமன்ற நீதிபதி ஜே. கனகராஜ் !
இந்தச் சூழலில் தான் மே 30, 1985 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவு பழம் பெருமை வாய்ந்த மூர்மார்க்கெட் தீப்பற்றி கொழுந்துவிட்டு எறிந்தது. இது தீ விபத்தா? அல்லது சதிச் செயலா? என்பதற்கான உண்மையான காரணம் இன்று வரை கண்டறியப்படவில்லை.
கலங்கரை விளக்கிற்கும், பட்டினப்பாக்கத்திற்கும் இடையே கடற்கரையை ஒட்டி தற்போதிருக்கும் சாலை சமீப காலத்தில் உருவானது. சந்தோம் சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் போது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்காக மீனவத் தெருவாக இருந்தது சாலையாக மாற்றப்பட்டது. உண்மையில் தங்கள் குடியிருப்புகளை ஒட்டிய இந்த சாலையின் வாகனப் போக்குவரத்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் செய்த போதிலும். அவர்கள் சகித்துக் கொண்டனர். இச்சாலை பின்னர் கூடுதல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு சாலையும் விரிவுபடுத்தப்பட்டது.

இங்கே பன்னெடுங்காலமாக மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் கடைகளை வைத்திருந்தனர். ஆண்கள் கடலில் மீன் பிடித்து வந்தவுடன் அந்த மீன்கள் இந்த கடைகளில் பிரஷ்சாக விற்பனைக்கு வந்துவிடும். இது தென் சென்னை வாசிகள் தரமான மீன்களை வாங்கிக் செல்லும் இடமாக திகழ்கிறது.
ஒரு மரப் பெஞ்சு, ஒரு நாற்காலி! மேலே சிறிய துணிக் குடை! இவ்வளவே இவர்களது கடை! திறந்த வெளியில் வானமே கூரையாக அமர்ந்திருப்பார்கள்! அதாவது, இவர்களுக்கு வெயிலில் இருந்தும் மழையிலிருந்தும் எந்த பாதுகாப்பும் கிடையாது. இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில், இவர்களின் வாழ்வாதார ஜிவிதம் காலம்காலமாக நடந்தது!
இந்த மீன் கடைகள் அந்தக் கடற்கரை சாலைக்கு தற்போது ஆக்கிரமிப்பாகிவிட்டதாம். இந்த மீன் கடைகளும், மீனவப் பெண்களும் ஆக்கிரமிப்பாளர்களாம். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் , சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து அந்த சாலையில் பயணம் செய்வதற்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஒருவர் பொதுநல வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கைபோடுகிறார் சென்னை உயர் நீதிமன்றத்தில்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் எஸ். எஸ் .சுந்தர் மற்றும் ஆர்.பாலாஜி அமர்வு மேற் சொன்ன மீன் கடைகளை எந்த கால அவகாசமும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஏப்ரல் 11, 2023 அன்று உத்தரவிட்டது.
உத்தரவை நிறைவேற்றிய விபரத்தை 18 ஏப்ரல் 2023 அன்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதாபிமானமற்ற ஒரு உத்தரவை அளித்துள்ளது.

அரசின் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர் ரவீந்திரன் , அங்கே கடற்கரை சாலையை ஒட்டி மீன் அங்காடி ஒன்று ஆறு மாதங்களில் கட்டப்பட்டு விடும் என்றும் ,அதற்கு பின்னர் இந்த மீனவ பெண்கள் அங்கே மீன் வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் எடுத்துரைத்தார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்யும் இவர்கள் மேல் கருணை கொண்டு ஆறு மாதத்திற்கு மட்டும் இங்கே சாலை ஓரத்தில் மீன் வியாபாரம் தொடர அனுமதிக்க வேண்டினார். இந்த ஆறு மாத காலங்களில் அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்து சாலையை பராமரித்து போக்குவரத்திற்கு சிரமம் இல்லாமல் அப்பகுதியில் ஏற்பாடு செய்வதாகவும் எடுத்துரைத்தார்.
இந்த வாதங்களை செவிமடுக்க நீதி அரசர்கள் தயாராக இல்லை . மீன் கடைகளை நடத்தும் இந்த மீனவ பெண்கள் “ஆக்ரமிப்பாளர்கள்” என்று உறுதி பட கூறினார்கள். ஆறு மாதங்களோ அல்லது அதற்கு குறைந்த அளவிலான கால அவகாசமும் கூட இல்லாமல் ஒரு வாரத்தில் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பால் சிங்கார சென்னையின் அழகு கெட்டு விட்டதாக வேறு புலம்பித் தீர்த்தார்கள்.
எது அழகு என்பது அவரவர்கள் பார்வையில் மாறுபடும். கடற்கரை ஓரம் மீனவர்கள் வசிக்கும் குப்பத்திற்கு அருகில் சாலை போட்ட ஆக்கிரமிப்பாளர்கள் நாம்தான்.
கடந்த இரு நாட்களாக ஏழை மீனவ பெண்கள் நடத்தி வந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன! அசுர வேகத்தில் செயல்பட்டது அரசு. மறுபரிசீலனை மனுவோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்ற நிலையோ, ஏனோ அரசு எடுக்கவில்லை. சட்டங்களையும், விதிகளையும் மீறி கடற்கரையை ஒட்டி மிகப்பெரும் செல்வந்தர்கள் பங்களாக்கள் கட்டி வசித்து வருகின்றனர்; இதே போல பல தொழில் கூடங்களும் இயங்கி வருகின்றன. இவைகளையெல்லாம் அகற்ற நீதிமன்றம் முன் வருமா? நீதிமன்றம் முன் வந்தாலும் அரசு அந்த உத்தரவுகளை செயல்படுத்துமா? அதுவும் மின்னல் வேகத்தில் மீனவ மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது போல் செயல்படுத்துமா?
இதே சாலையில் சிறிது தூரம் பயணித்தால் நீதியரசர்கள் வசிக்கும் வீடுகளும், மந்திரிமார்கள் வசிக்கும் வீடுகளும் வரும். அந்தப் பகுதியையும் அடையாறு ஆலமரத்தை ஒட்டிய பகுதியையும் இணைத்து அடையாறு ஆற்றையும் கடக்கும் ஒரு அகலமான சாலையை போட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்று அரசு நினைத்தது. இதற்காக அரசின் இரண்டு ஏக்கர் நிலம் அங்குள்ள சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்தின் ஆளுகைக்குள் உள்ளது. அதனை திரும்ப அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் புதிய அகலமான சாலை அமைப்பதற்கு அந்த அரசின் நிலம் வேண்டும் என்றும் அரசு கோரியது. உடனடியாக சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் தடை கொடுத்தது. இதுவும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி தான்.
அடையாறு திரு வி க பாலத்தை நடந்தவுடன், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் இருப்பதை அப்பகுதி வழியாக செல்லும் அனைவரும் அறிவர். சத்யா ஸ்டுடியோவிற்கு தரப்பட்ட நீதி, மீனவப் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?
காங்கிரஸ்காரரும், வழக்குரைஞருமான பசுபதி தனராஜ் சட்டக்கல்லூரியில் மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது ,1970 ஆம் ஆண்டை ஒட்டிய காலத்தில் நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அவரை அமைந்தகரை பகுதியில் வேட்பாளராக நிற்குமாறு காமராஜர் கேட்டுக் கொண்டார். ”நான் நாமக்கல்லைச் சேர்ந்தவன் ஆயிற்றே, சென்னைவாசி இல்லையே” என பசுபதி தனராஜ் தெரிவித்தாராம். அப்போது காமராஜர் அவர்கள் அளித்த பதில், ”நம்மை போன்ற இங்குள்ள சென்னைவாசிகள் பெரும்பாலோர் வந்தேறிகள் தானே!” என்பதாகும். இந்த பதிலை காமராஜர் அவர்கள் அளித்தவுடன் தான் பசுபதி தனராஜ் அவர்கள் தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றார்.
Also read
வந்தேறிகளான நாம் சென்னையின் பூர்விக குடிகளான மீனவர்களையும், மீனவ குப்பங்களுக்கு அருகில் இருந்த விவசாயிகளையும் கணிசமான அளவில் அப்புறப்படுத்தி விட்டு தான் இந்த மிகப் பெரும் சென்னையை உருவாக்கி உள்ளோம். அனால், தற்போது அவர்களை முற்றிலும் புறக்கணிக்க துணிந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு என் நெஞ்சை உறுத்துகிறது. வசதிபடைத்தவர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இந்த உலகம் படைக்கப்படவில்லை.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
முன்னாள் நீதிபதி
அனைத்து
பெரு நகரங்களை யும்
அனைத்து தரப்பு மக்களுக்கான வாழ்விடமாக மாற்றுவது எப்படி?
தற்போது பெரு நகரங்களில் வசதி, அதிகாரம் , பணம் படைத்தோர் வாழ்தல் இனிது.
நடுத்தர வர்க்க மக்கள் அல்லல் படுதல் கொஞ்ச நஞ்சம் அல்ல.
ஏழை எளிய மக்களுக்கு இடமே இல்லை.
அவர்கள் காலம் காலமாக
வசித்துக் கொண்டிருந்த,
வசித்துக் கொண்டு இருக்கின்ற பகுதிகள்,
போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் தேவை காரணமாக அரசு கையகப் படுத்த,
அவர்கள் பெரு நகரங்களின் விளிம்புகள் பக்கம் தூக்கி வீசப் படுகின்றனர்.
இப்படி நடப்பது
சென்னையில்
மட்டும் அல்ல.
மும்பை,
கல்கத்தா,
தில்லி,
பெங்களூரு,
,
அனைத்து பெரு நகரங்களிலும் இந்த கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.
பெரு நகரங்களில் கட்டமைப்பு வசதிகளுக்காக
அதிக முதலீடு செய்வது,
வெகு சிலரைத் தவிர மற்ற அனைத்து மக்களுக்கும் ,
அன்றாட வாழ்க்கையை பெரும் சுமையாகவே மாற்றுகிறது.
மாறாக,
நாம் என்ன செய்ய முடியும்,
எங்கே தொடங்க வேண்டும் ?
முதலில்,
நம் பெரு நகரங்களில் கிடைக்கும்
வேலை வாய்ப்பு களை பரவலாக்க வேண்டும்.
நகரங்களை நரஹமாக்கும் மக்கள் தொகை அடர்த்தி குறைக்கப் பட வேண்டும்.
வசதி குறைந்த, ஏழை எளிய மக்கள் நகரங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் மாறி, வசதி படைத்தோர், நிரந்தர வருமானம் உடையோர், அரசு அதிகாரம் உடையோர், மாற்று இடங்களில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.
எப்படி?
இது நடைமுறை சாத்தியமா ?
ஒரு காட்சி;
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்!
இந்த செய்தியை நாம் அனைவரும் படித்து இருப்போம்.
தென் இந்திய மாநிலங்களுக்கு பொதுவாகத் தான் இந்த வேண்டுகோள் விடுக்கப் படுகிறது.
அவ்வகையில்,
இந்த கிளை நீதிமன்றம் தென்னகத்தின் மையப் பகுதியில் அமைவது நன்று.
ஏற்கெனவே பெங்களூரு மிக அதிக மக்கள் தொகை நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,
அடுத்த பொருத்தமான இடம் திருப்பதி.
கிட்டத்தட்ட அனைத்து தென் மாநிலங்களுக்கும் ஓரளவு சம தூரத்தில் அமைந்துள்ளது.
அருமையான சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.
*********
அது மட்டும் அல்ல.
மதுரையில்,
தற்போது சென்னை உயர் நீதிமன்ற கிளை உள்ளது.
மேலும் இரண்டு உயர் நீதி மன்ற கிளைகள்,
தமிழ் நாட்டின் கிழக்கு ( தஞ்சாவூர் ), மற்றும் மேற்கு ( சேலம் )
பகுதியில் அமைக்கப் பட்டால் ,
பொது
மக்களுக்கு
நீதித் துறையின்
சேவை கிட்ட
அதிக வாய்ப்பு உண்டு.
சென்னையில் 30 நீதிபதிகள்,
சேலம், தஞ்சாவூர், மதுரை தலா 15 நீதிபதிகள் சேவை செய்தால் ,
மிக வசதியாக இருக்கும்.
சென்னையில் கூட்டம் குறையும்.
மற்ற ஊர்களில் நீதித்துறை சார்ந்த சேவைகள், ஊடக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன மேம்படும்.
மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக , பிரிக்கும் போது பெரும்பாலும் வரவேற் கிறோம் .
ஆனால் மாநிலங்களை பிரிக்க சிந்தனை செய்வதை ஏன் சதி என்கிறோம் ?
ஏன் என்றால், அதிகார வீச்சு ,
ஆட்சிப் பரப்பு,
நிதி ஆதாரங்கள்
ஆளுவோர்க்கு குறையும்.
ஆனால், சிறு கட்சிகளுக்கு,
இது வரை ஆட்சிக்கு வராத,
மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே செல்வாக்கு உடைய கட்சிகள் ,
இந்த மாநில பகுப்புக்கு ஆதரவு தெரிவிககும்.
ஆகவே இந்த மாநில பகுப்பு செய்வது ஒரு மாநிலத்துக்கு மட்டுமே என்று செயல் பட்டால் எதிர்ப்பு, ஆதரவு இரண்டும் நிச்சயம் இருக்கும்.
எடுத்துக் காட்டாக,
பல ஆண்டுகாலம்
தெலுங்கானா மாநிலம் தேவை என்று ஒருங்கிணைந்த
ஆந்திர பிரதேச மாநிலத்தின் , ஹைதராபாத் பகுதி சார்ந்த அரசியல் வாதிகள் மற்றும்
குறிப்பிடத்தக்க அளவு பொது மக்களும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து ,
பல போராட்டங்கள் நடத்தியும்,
தெலுங்கானா, ஆந்திரா என்று பிரிக்கும் போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு, ஆதரவு என
போராட்டங்கள் நடந்தது நாம் அறிந்ததே.
ஆனால்,
உத்ராகண்ட்,
ஜார்கண்ட,
சட்டிஸ்கர்
ஆகிய மூன்று மாநிலங்கள் பிரிக்கும் போது, பெரிய அளவில் ஆதரவும்,
எதிர்ப்பு குறைவாகவும் இருந்ததும் நிதர்சனம்.
ஆகவே,
ஒரே சமயத்தில்,
நமது நாட்டில் உள்ள எல்லா பெரிய மாநிலங்களையும் பிரிப்பது என்று செயல்பட்டால் நல்லது…
உத்தர பிரதேசம். – 7…
மத்திய பிரதேசம் – 6
மஹாராஷ்டிரா – 5
தற்போதைய ஆந்திரா – 2
தெலுங்கானா – 2
மேற்கு வங்காளம் – 4
குஜராத் – 4
ராஜஸ்தான் – 4.
அஸ்ஸாம் – 4.
கர்நாடகா – 4
தமிழ்நாடு – 4
கேரளா – 3
பீஹார் – 3
அஸ்ஸாம் -3
ஒரிசா – 2
என பிரிப்பது பற்றி ஆலோசனைகள் நடத்த முடியும்.
ஆனால் மாநிலங்கள் பிரிப்பு செய்வதற்கு முன் உயர்நீதி மன்ற கிளைகள் ஆங்காங்கே அமைக்க வேண்டும்.
மத்திய, மாநில, அரசு அலுவலகங்கள் , மாநிலத் தலைநகர் களில் அமைந்துள்ள பெரும் தனியார் அலுவலகங்கள்,
இவற்றை ,
சுமார் 10 மாவட்டங்களுக்கு ஒரு வட்டார அலுவலகம் என
பிரித்து பரவலாக அமைத்திட வேண்டும்.
அத்துடன், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில
உள்ள
விமான நிலையங்கள்,
துறைமுகங்கள் ,
ரயில் நிலையங்கள்,
பேருந்து முனையங்கள,
மொத்த விற்பனை அங்காடிகள்
இன்ன பிறவும்
விரிவாக்கம் செய்ய முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
இதனுடைய நன்மைகளை அனுபவிக்கும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள.
இன்னும் ஒரு உதாரணம் :
சென்னைக்கு 2வது விமான நிலையத்துக்கு திட்டம்
பரந்தூர் பகுதியில்,
சென்னைக் கான 2வது விமான நிலையத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு ஜனநாயக நாட்டில் இது முற்றிலும் இயல்பானதே.
காய்தல், உவத்தல் இன்றி இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்வோம்.
தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது .
ஆகவே சென்னைக்கு அருகில் இன்னும் ஒரு புதிய பெரிய விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம் – இது ஆதரவுக் குரல்.
பரந் தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது எங்கள் வாழ்வினை நிர்மூலம் ஆக்கும் – இது எதிர்ப்புக் குரல்.
சென்னையை சுற்றி ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் உள்ளன : திருப்பதி, பாண்டிச்சேரி.
மூன்றாவது , வேலூரில் கிட்டத் தட்ட தயார்.
இந்த மூன்று விமான நிலையங்களும் சென்னைக்கு மாற்றாக அமைய முடியும். இங்கே நாம் குறைவான முதலீட்டில்,
விமான நிலையங்களை ,விரிவாக்க , மேம்படுத்த முடியும்.
விமானப் போக்குவரத்து தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இந்த மூன்று விமான நிலையங்கள் மட்டும் அல்ல.
சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அனைத்து விமான நிலையங்களையும் நாம் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஏன் ?
வெளி மாநிலங்களுக்கு,
வெளி நாடுகளுக்கு,
சென்னைக்கு வராமலேயே,
அவரவர் ஊர்களுக்கு அருகில் இருந்தே மக்கள் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
அப்போது சென்னைக்கு தேவையில்லாமல் மக்கள் வர வேண்டியது இல்லை.
இது போக்குவரத்துக்கு மட்டும் அல்ல
முக்கியமாக அனைத்து பகுதிகளும் வளம் பெறும்.
சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி குறையும்.
ஆனால் இதை நாம் தனித்து, விமானப் போக்குவரத்து கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
மற்றும்
நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய
சீரான, சமமான வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருத வேண்டும்.
.
கரோனா பெருந்தொற்று நம் நாட்டில் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையான விதத்தில் பாதித்து உள்ளது.
நாம் இரண்டாம் அலையை எதிர்கொண்டு உள்ளோம்.
மூன்றாம் அலை உண்டு என்ற கருத்தும் வலுப் பெற்று வருகிறது.
அது மட்டுமல்ல, நாம் நம்மை திருத்திக் கொள்ளா விட்டால்,
கரோனா பெருந் தொற்று போல , இன்னும் பல பெருந்தொற்றுகள் நம்மை துன்புறுத்த காத்துக் கொண்டு உள்ளன என்பது உறுதி.
இயற்கை வளங்களை சூறையாடுதல்,
சுற்றுச் சூழல் பாதிப்பு, காற்று, தண்ணீர் மாசுபடுத்தல்,
பொறுப்பற்ற முறையில் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றும் போக்கு, வீட்டுக் கழிவு மேலாண்மை கடைப்பிடிக்காமல் அலட்சியப் படுத்தல்,
வனங்கள் வளம் குன்றும் வேகம்,
வன விலங்குகள், செடிகொடிகள் தொடந்து அழிப்பு என நாமே நமக்கு கொள்ளி வைத்து கொண்டு இருக்கிறோம்.
சரி, இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும் ?
தனி மனிதராக, குடும்பமாக, சமூகமாக, ஊராக, மாநிலமாக , நாடாக நாம் செய்ய நிறைய உள்ளன.
சரியான திட்டம் இடுதலால்,
மக்களை செயல் ஊக்கத்துக்கு கொண்டு வர முடியும்.
தற்போது நம் நாட்டில் உடனடியாக செய்யக் கூடிய திட்டங்கள்.
குப்பை என்பது வீண் போவது இல்லை,
குப்பைகளை தரம் பிரித்து,
வகை ப் படுத்தி,
சேர்த்து,
சேமித்து,
மறு சுழற்சி செய்தால்.
உதாரணம் ,,;
பிளாஸ்டிக்.
கால்நடைத் தீவனம்..
இயற்கை உரம்.
எரி பொருள்.
தலை முடி.
காகிதப் பொருட்கள்.
அலுமினிய foils.
கயிறுகள்.
இது குப்பையை பிரித்து பயன் படுத்திய நாடுதான்.
தலை முடியை தனியாக எடுத்து வைத்தவர்கள் தான் நாம்.
காய்கறி கழிவுகள், வாழைப் பழ தோல், இவற்றையெல்லாம், பொறுப்பாக மாடு, ஆடுகளுக்கு உணவாக அளித்தவர்கள் தாம் நாம்.
சின்னச் சின்ன பிளாஸ்டிக் கவர் களை ஒரே ஒரு பெரிய பையில் போட்டு விட்டு, அதை தூய்மை காவலரிடம் கொடுத்தல் கோடி புண்ணியம்.
இந்த விழிப்புணர்வு, பொறுப்புணர்வு நம் மக்களுக்கு வந்தால், நம் வீட்டு மக்கும் குப்பை , இயற்கை உரமாகும்.
மக்காத குப்பை மறுசுழற்சி ஆகும்
நம் வீட்டுக் கழிவு எப்படி, எந்த அளவுக்கு,
மறு சுழற்சி முறையில் பயன் படுத்தப் படுகிறது,.
மறு சுழற்சி செய்யப் படாமல் நேரடியாக ஆற்றில், குளத்தில்,
குப்பைக்கு செல்கிறது என்பதை அறிய வேண்டும்.
இதனை நேர்மையான முறையில்,
நம் மன சாட்சிக்கு உண்மையாக,
நாம் சுயமதிப்பீடு செய்தால் மட்டுமே
முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இது போலத்தான்.
ஆறுகள் மாசு அடைவதற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு விதத்தில்,
ஒவ்வொரு அளவில்
காரணம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் நம்மால் முடிந்த மாசு குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, செயல்பட்டால் தான் ஆறுகள் மாசு குறைப்பு நடவடிக்கை வெற்றி பெறும்.
அரசாங்கம், அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பொறுப்பு, கடமை இருக்கிறது.
அதே சமயம், பொது மக்களும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, செயல் படவும் வேண்டும்.
ஆனால் ஒரே நாளில் வெற்றி கிடைக்காது.
மிக மிக மெதுவாகத் தான் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
l
மரங்களை நடுவது நன்று.
மரங்களை வெட்டாமல் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய முயற்சி எடுப்பது அதனினும் நன்று.
கொட்டான்குச்சிகள் collection ஒரு எளிய ஆரம்பம்.
விறகுக்கு பதிலாக , சூரிய ஒளி வெப்பம்
Boilerகளில் பயன்படுத்தப் பட்டால், காசு மாற்று குறையும்.
மரங்களும் காக்கப் படும்.
தொழில் வளர்ச்சி ஏற்படும்.
где купить справку
I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to know where u got this from. cheers
Asking questions are in fact good thing if you are not understanding anything fully, but this piece of writing provides nice understanding even.
Greetings from Los angeles! I’m bored to death at work so I decided to check out your website on my iphone during lunch break. I enjoy the info you present here and can’t wait to take a look when I get home. I’m amazed at how quick your blog loaded on my mobile .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, superb site!
Greetings! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a marvellous job!
What’s up Dear, are you really visiting this web site daily, if so then you will absolutely get nice experience.
I like the valuable information you provide in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am quite certain I will learn lots of new stuff right here! Good luck for the next!
Nice blog here! Also your site loads up fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my website loaded up as fast as yours lol
Hi friends, good piece of writing and nice arguments commented here, I am truly enjoying by these.
Highly energetic article, I liked that a lot. Will there be a part 2?
I am extremely impressed with your writing skills and also with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays.
I read this post fully concerning the resemblance of most recent and previous technologies, it’s awesome article.
Simply wish to say your article is as amazing. The clearness in your post is simply nice and i can assume you are an expert on this subject. Well with your permission allow me to grab your RSS feed to keep up to date with forthcoming post. Thanks a million and please keep up the gratifying work.
If some one needs to be updated with newest technologies afterward he must be visit this site and be up to date daily.
For most recent news you have to visit web and on internet I found this web site as a most excellent website for most recent updates.
I think this is one of the such a lot important information for me. And i’m satisfied reading your article. However want to remark on few basic things, The site taste is ideal, the articles is in reality nice : D. Just right task, cheers
I always emailed this website post page to all my friends, as if like to read it then my links will too.
Hi there, I found your blog via Google at the same time as searching for a similar matter, your web site got here up, it looks good. I have bookmarked it in my google bookmarks.
My spouse and I stumbled over here coming from a different web page and thought I might as well check things out. I like what I see so now i am following you. Look forward to exploring your web page for a second time.
First off I want to say awesome blog! I had a quick question that I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a hard time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just trying to figure out how to begin. Any suggestions or tips? Thank you!