தலைவா வா! தலைமை ஏற்க வா? என ரசிகர்களின் போஸ்டர்கள்! ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள்! முதல்வர் நாற்காலியை நோக்கிய முன்னெடுப்புகள் நடக்கின்றனவா..? அரசியல் அதிகாரத்தை விரும்பும் ஆசைகள் இருக்கின்றன! ஆனால், அதற்கான அருகதைகள் உள்ளனவா..? விட்டில் பூச்சியா? வீரத் தளபதியா? மக்கள் தலைவனாகும் மனக் கனவுகள்! ரசிகர்களின் தூண்டுதல்கள்!..என சினிமாவில் சுமார் கால் நூற்றாண்டைக் கடந்தாகிவிட்டது! வயதோ 49.  ஆயினும், அரசியலில் கால் பதிப்பதில் அரைகுறை மனசு அலை பாய்கிறது! தமிழகத்தில் மிக அதிகமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய் என்பதில் யாருக்கும் மாற்று ...

”டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கரூர் சரக்கே  தஞ்சையில் இருவர் பலியானதற்கு காரணம்” என குடிமகன்கள் உரத்துக் கூறுகின்றனர்! தமிழகம் முழுமையும் போலி சரக்குகள், சட்டபூர்வமற்ற விற்பனைகள் ஆகிய உண்மைகளை மறைக்கத் தான் எத்தனை தகிடுதத்தங்கள் அரங்கேறுகின்றன…! தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையையொட்டி அமைந்துள்ள மது அருந்தும் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த 68 வயது குப்புசாமி, 36 வயது குட்டி விவேக் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக ...

அதிரடி ரெய்டுகள், அடிபணிய வைக்கும் தந்திரங்கள்! காலம் கனிய காத்திருந்தார்கள்! இன்னும் எவ்வளவு அவமானம், பின்னடைவு ஏற்பட்டாலும் சரி, செந்தில் பாலாஜியே துணை என ஸ்டாலின் தொடர்வாரா? ஸ்டாலினிடம் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால், மோடியிடம் சரண்டராவாரா செந்தில் பாலாஜி? செந்தில் பாலாஜியைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆட்சியாளர்களுக்கு குடைச்சலையும், குமுறலையும் ஏற்படுத்த நினைக்கும் என மத்திய பாஜகவிற்கு, திமுக தலைமையே பாதை போட்டுக் கொடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த அதிமுக ஆட்சிகளில் ஊழலுக்கு பேர் போனவராக அறியப்பட்டவர் தான் கரூர் செந்தில் ...

அழகிய பாராளுமன்ற கட்டிடம் இருக்கும் போது, மிகப்  பெரும் செலவில், ஆடம்பரமான புதிய பாராளுமன்ற கட்டிடம் எதற்கு? இதன் உள் நோக்கம் என்ன? அதிலும் இதில் குடியரசுத் தலைவருக்கு முக்கியத்துவம் தராதது ஏன்..? புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற வளாகத்தை வருகிற 28 ந்தேதி – வி.டி.சாவர்க்காரின் பிறந்த தாளான மே 28 ந்தேதி- பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சிகள் இந்த திறப்புவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ், ...

நீட் விலக்கு வாங்கித் தருவோம் என்றனர். இன்று மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி அனுப்பி விட்டு சும்மா இருந்தால் எப்படி? பாஜக அரசின் இழுத்தடிப்பு  வேலைகளை அம்பலப்படுத்தி போராட வேண்டாமா..?  தமிழகத்திற்கான கல்வி கொள்கை உருவாக்க குழு விவகாரம் கவலை அளிக்கிறது. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆவேசம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிர்வாகிகள்  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அதன் பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டியளித்தார். இருமுறை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பப்பட்ட  நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய ...

2024 தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை. பாஜகவை விடவும், ஆம் ஆத்மி போன்ற மாநிலக் கட்சிகள் தான் பெரிய எதிரி என்ற கண்ணோட்டம் காங்கிரசுக்கு வருமானால், அது பாஜகவுக்கே பலம் சேர்க்கும்! எதிர் கட்சிகளை அரவணைப்பதில் காங்கிரசுக்குள்ள போதாமைகள் என்ன? அவசரநிலை காலத்தில் இந்திராகாந்தியை வீழ்த்துவதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற மாபெரும் ஆளுமை இருந்தார். அவரது தலைமையில் அவசரநிலை காலத்தை எதிர்த்த மிகப் பெரிய இயக்கம் இந்திராவின் ஆட்சியை வீழ்த்தியது. அந்த இயக்கத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் பங்காற்றின. இப்பொழுது அறிவிக்கப்படாத அவசரநிலை ...

பாஜக அரசின் நிதி அமைச்சர்  நிர்மலா, தன் மனைவி என்றாலும், பொருளாதார நிபுணரும், சமூக அரசியல் விமர்சகருமான பரகால பிரபாகர், கட்சிகளைக் கடந்து  கலகக்காராகப் பேசுகிறார். பாஜகவை மிகக் கூர்மையாகவும், கடுமையாகவும் விமர்சிக்கிறார். ‘தி வயர் ‘ சேனலில் கரன் தப்பாருக்கான நேர்காணல் அதிரடி ரகமாகும்..! பரகால பிரபாகர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். முதலில் காங்கிரசில் இருந்தார். பிறகு பத்தாண்டுகள் பாஜகவில் பயணித்தவர். எனினும், 17 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஒரு சமூக பிரக்ஜையுள்ள பொது மனிதனாக இந்த ...

சரத்பாபு மிக அழகானவர். நன்றாக நடித்தார். எனினும், பெரிய ஹீரோவாகவில்லை. அவருமே அதற்கு விரும்பவில்லை. கடைசி வரை ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாகவே, கதாபாத்திரத்திற்கு தன்னை பொருத்திக் கொண்டார்! ஜெயலலிதாவுக்கு ஹீரோவாக சரத்பாபு நடித்த அனுபவங்களை படத்தை இயக்கிய லெனின் கூறுகிறார். இதனால் தான் தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்கள் சரத்பாபுவை தங்கள் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினர். பாலச்சந்தரின் பட்டிணப் பிரவேசம், நிழல் நிஜமாகிறது ஆகியவற்றில் அவரது கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது. நிழல் நிஜமாகிறது படத்தில் கிட்டத்தட்ட வில்லன் பாத்திரம் என்று கூட சொல்லலாம்! மகேந்திரனின் பல ...

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய 44 கட்டுரைகளின் தொகுப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது. உலகம் முழுமையிலும் பல்வேறு கால கட்டங்களில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களின் சமூக, அரசியல் பின்னணி, அவை நடைபெற்ற விதம், அதற்கான நியாயங்கள் குறித்த பதிவாக இந்த நூல் கவனம் பெறுகிறது. மதுரையைச் சேர்ந்த அ.முத்துக்கிருஷ்ணன் சமூக செயற்பாட்டாளர். இவரது சமூகப் பங்களிப்பிற்காக பெரியார் விருதையும், அம்பேத்கர் விருதையும் பெற்றவர். பல்வேறு காலக்கட்டங்களில் உலகெங்கிலும் நடந்துள்ள எதிர்ப்பியக்கங்களைத்  தேர்ந்தெடுத்து இந்த நூலில் எழுதியுள்ளார். இங்கிலாந்தின் தேநீர் வரியை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டம் அதன் ...

டெல்லி மக்களின் நம்பிக்கையை பெற முடியாத பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலின் நல்லாட்சியை முடக்க  என்னென்னவோ முயற்சிக்கிறது! கொல்லைப் புறமாக கவர்னரின் மூலம் அதிகாரம் செலுத்துவது போதாது என்று தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, அராஜக சட்டம் ஒன்றை அரங்கேற்றத் துடிக்கிறது..! நடக்குமா..? அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  டெல்லி சட்ட சபை தேர்தலில் கடந்த இரு முறையும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. எவ்வளவோ முயன்றும் பாஜக  தோல்வியை சந்தித்தது. டெல்லி மக்கள் தங்களின் ஜனநாயக விருப்பத்தை மிகத் ...