ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..? தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல ...