ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகளின் வாதங்களையும் பொருட்படுத்தாமல் அராஜகமாக வேளாண் மசோதாக்கள் இந்தியப் பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன! இவற்றால் ஏற்படவுள்ள பாதகங்களை, உருவாகப் போகும் பாதுகாப்பற்ற விவசாயச் சூழலைச் சற்றே விரிவாகப் பார்ப்போம்! இந்தியாவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புத் தரும் தொழில் விவசாயம் தான். ஆனால், விவசாயிகள் உட்பட எல்லா இந்தியர்களாலும் மட்டமாக மதிக்கப்படுவதும் விவசாயம் தான்.காரணம் விவசாயிகள் உழைப்புக்கும், விளை பொருளுக்கும் உரிய மரியாதை இல்லாமல் போனதே! ஆனால் இந்தியாவின் விவசாய வரலாறு என்பது வேறு விதமானதாக ...