தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினைகள் மீது தனி கவனம் வந்துவிடுகிறது! சாதிசங்கங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கிவிடுகின்றன! சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆகிய இந்த இரண்டு இடங்களும் தினமும் பரபரப்பாக காணப்படும் இடம். காரணம் அரசியல் கட்சிகள் ஆகட்டும் சமூக அமைப்புகள் ஆகட்டும் தங்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ள ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாநிலை அறப்போராட்டம் என நடத்துவதற்கு போலீசார் இந்த இடத்தில்தான் அனுமதிக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் அதிமுக,திமுக ஆகிய இரண்டு ...