தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை அறிவித்துள்ளார். இப்படி ஒரு உத்தரவை ஒரு டிஜிபி தன்னிச்சையாக போட முடியுமா..? போட்டாலும் அது நடைமுறைக்கு வருமா..? என காவல்துறையிலேயே பலர் சந்தேகிக்கிறார்கள்..? வாராந்திர விடுமுறை என்பது மிக அவசியமானது. தேவையானது. ஆனால், அதை ஒரு முதலமைச்சர் மட்டுமே முடிவு எடுத்து சொல்ல முடியும். விளம்பர வெளிச்சத்திற்காக ஒரு டிஜிபி வரம்பு மீறி செயல்படுகிறாரோ..? ஏனென்றால், காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை வழங்க வேண்டும் என்பது பல்லாண்டுகால கோரிக்கை. இது தொடர்பாக நீதிமன்றமே பரிசீலிக்க ...