அறம் இணைய இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது! இரண்டாம் ஆண்டில் நடை போட தொடங்கியுள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த ஊடகப் பயணம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன். சமூகத்தின் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களாம் அரசியல் முதல் ஆன்மீகம் வரை, வயல் வெளி முதல் வணிகத் தளம் வரை, போராட்டக் களம் முதல் பொழுதுபோக்குத் துறை வரை தொடர்பான உண்மைகளை ஓங்கிச் சொல்லுவது ஊடகத்தின் ஒப்பிலாப் பணி. இந்த கருத்துப் பணியை கச்சிதமாகச் செய்கிறது அறம். அத்துமீறுகிற அதிகார வர்க்கத்திற்கு ஒத்துப்போவது, அதனை ...