கொரோனா இரண்டாம் கட்டம் மிக வீரியமாக மக்களை தாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் குறிக்கோளாக இருக்கணும். இந்த சூழலில் எல்லா நல் வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய முறைகளில் உள்ள எந்தெந்த நல்ல மருந்துகள் கொரானாவை குணப்படுத்த உதவுகிறதோ…, அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதில் ஏன் இத்தனை தயக்கங்கள், எதிர்ப்புகள்..? முதல் கொரானா தொற்று ஏற்பட்ட போது, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தான் சித்த மருத்துவம், ஆயூர்வேதம், ஹோமியோபதி..ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளையும் அனுமதித்தார்கள்! ஆனால், ...