சிறைச்சாலையின் வித்தியாசமான அனுபவங்களைச் சொல்லும் நூலே, ‘கூண்டின் நிறங்கள் – சிறையின் நினைவுகள்’! மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரான அருண்பெரைரா சிறைச்சாலையின் கொடூரங்களை அறிந்து கொள்ளவும், அதை வெளிப்படுத்தவுமான வாய்ப்பாகவும் சிறைவாழ்வை பயன்படுத்திக் கொண்டதே இந்த நூல்! விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்ட விதார்பாவில் சமூகப் பணிபுரிந்த அருண்பெரைராவை நக்சல் என கைது செய்து, வழக்கு, வழக்கு, மேலும் வழக்கு என பதினோரு வழக்குகளில் கைது செய்ததையும் பிணையில் வர முடியாமல் தடுத்து தொடர்ந்து சிறைப்படுத்தியதையும் சொல்கிறது இந்த நூல்! நாக்பூரில் ...