நீலகிரி மாவட்ட மக்கள் திகிலில் உறைந்திருக்கிறார்கள்! எப்போது யாரை புலி கொன்று தின்னப் போகிறது என்ற பதட்டம் பரவலாக மக்களை ஆட் கொண்டதன் விளைவாக புலியை உடனே பிடிக்கவோ, சுடவோ வேண்டும் என சாலை மறியலில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்! புலியை கொல்வதா..? உயிரோடு பிடித்து கூண்டில் அடைப்பதா..? என்ற விவாதம் வேகம் பெற்றுள்ளது. இதற்கு சரியான தீர்வு என்ன..? பொதுவாக புலிகள் மனித குடியிருப்பு பகுதிகளில் வராது,வாழாது. அடர்ந்த காட்டுக்குள்ளேயே வாழும். புலியை பார்க்க செல்லும் பயணிகள், ஆய்வாளர்கள் கூட பல முயற்சி ...