ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய  மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து ...