இன்னும் என்ன நடக்க வேண்டும் தமிழ்நாட்டு கட்சிகள் ஒன்றுபடுவதற்கு..? முக்கிய மசோதாக்களுக்கு கையெழுத்திட மறுப்பது, பல்கலைக் கழகங்களை ஆர்.எஸ்.எஸ்காரர்களின் கூடாரமாக்குவது, தமிழக சட்டமன்ற மரபுகளை துச்சமாக கருதி வெளியேறுவது என்பதான ஆளுநரை எதிர்ப்பதில் ஏன் தமிழக கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை..? அமிர்தமே என்றாலும், அளவுக்கு மேல் உட்கொண்டால் நஞ்சு என்பார்கள்! ஆகவே, தேசிய கீதமே என்றாலும், மீண்டும், மீண்டும் பாட வேண்டும் என நிர்பந்திப்பது நியாயமாகாது. தமிழ்நாட்டின் மரபு என்பது தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் என்பதாகும். இது ...
சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒரே விதமான கேலிக் கூத்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நடக்கிறது. காரியக் கோமளியான ‘திராவிடச் சத்ரு’ ஆளுநரும், ‘திராவிட மாடல்’ எனக் கூறிக் கொண்டு, அதற்கு நேர் எதிராகச் செயல்படும் ஆட்சியாளர்களும், திட்டமிட்டு நடத்தும் நாடகமா? இந்த மோதல்; ‘ஒவ்வொரு ஆண்டும் முதன் முதலாக நடக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க வேண்டும்’ என்பது மரபாக உள்ளது. அந்தப்படி சட்டமன்றத்திற்கு அழைக்கப்படும் ஆளுநர் காவல்துறை அணிவகுப்பு மரியாதைகள், முக்கியஸ்தர்கள் வாசலுக்கு வந்து கை கூப்பி வரவேற்று அழைத்து வருதல் ...
தமிழகத்தின் மிக ஆபத்தான மனிதராக தமிழ் மக்களால் அறியப்படும் ஆர்.என்.ரவி” வாயைத் திறந்தால் வன்மம், வந்து விழும் வார்த்தைகள் அனைத்தும் ஆசிட்.. என செயல்படுவதன் பின்னணி என்ன? கால்டுவெல்லையும், ஜியு.போப்பையும் காழ்ப்புணர்வுடன் பேசியது எதனால்? அவரை இயக்குவது யார்..? அதிரடியாகப் பேசுவது.., அனைவரையும் திரும்பி தன்னை பார்க்க வைப்பது, கூசாமல் பொய்யுரைப்பது என தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இயங்கி கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அரியதொரு கண்டுபிடிப்பை பேசியுள்ளார்! ”பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ராபர்ட் ...
பெரிய பதவி! ஆனால், சின்ன புத்தி! வாயைத் திறந்தால் வருவது பொய்யும், அவதூறுகளும்! தமிழக மக்கள் காசுல சொகுசு வாழ்க்கை! ஆனால், அவர் மனதில் இருப்பதோ கலவர வேட்கை! நாம் வெள்ளையரிடம் போராடி பெற்ற சுதந்திரத்தைக் களவாடி, நம்மை நிரந்தரமாக சனாதனத்தின் கைதியாக்கத் துடிக்கிறார்கள்…! ஆளுநர் மாளிகை கேட்டருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு உரியது தான்! ஆனால், இதைத் தான் ஆர்.என்.ரவியும், அவரை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் விரும்பியது! அதனால் தான் தொடர்ந்து மக்களை எரிச்சலூட்டும் கருத்துக்களை கவர்னர் பேசிக் கொண்டே ...
சதா சர்வகாலமும் சனாதனக் கருத்தைப் பேசி, சர்ச்சை செய்யும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.ரவிக்கு எதிராக தற்போது தமிழகமே போர்க் கோலம் பூண்டுள்ளது. தமிழகம் எங்கும் ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் ..! தற்போதைய பேச்சுக்கான ரியாக்ஷன்களைப் பார்த்தால்.., அவரை ‘பேக் அப்’ பண்ணி விரட்டியடிக்கும் காலம் நெருங்குகிறதோ..! இது நாள் வரை ஆளுனருக்கு எதிராக போராடத் தயங்கிய திமுகவே தன் தயக்கத்தை உடைத்து தைரியமாக கூட்டணிக் கட்சிகளை அணிதிரட்டி வரும் ஏப்ரல் 12 அன்று ஆளுனர் மாளிகை முன் போராட்டக் களம் காண்கிறது. இதில் அனைத்து திமுக ...
அடுத்தடுத்து என 44 மனித உயிர்கள் பலியாகியுள்ளன! பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன! தமிழக சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. ”இது அரசமைப்புச் சட்டப்படி சரியான செயல் தானா..?” என அலசுகிறார் ஹரிபரந்தாமன். பத்திரிகைகளில் காணும் தகவல்களின்படி, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கூறும் மையமான காரணம், ‘இந்த மசோதா சட்டமானால், இது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் முதலாளிகளின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை ...