மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு ...