மற்ற மதத்தினரை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த பிரபல இந்து சாமியார்களின் கொலைவெறிப் பேச்சுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றால், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மெளனம் ஜன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கலவரப்படுத்துகிறது. உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்து சாதுக்களின் அமைப்பான தர்மசந்த் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் மிக அதிர வைக்கும் இந்து சாமியார்களின் வன்முறையை தூண்டும் வெறித்தனமான பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன! இந்து ரக்‌ஷ சேனா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, பிரபல சாமியார் ...