உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு,  ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்  குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு   நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள்,  உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் ...

மற்ற மதத்தினரை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த பிரபல இந்து சாமியார்களின் கொலைவெறிப் பேச்சுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றால், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மெளனம் ஜன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கலவரப்படுத்துகிறது. உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்து சாதுக்களின் அமைப்பான தர்மசந்த் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் மிக அதிர வைக்கும் இந்து சாமியார்களின் வன்முறையை தூண்டும் வெறித்தனமான பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன! இந்து ரக்‌ஷ சேனா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, பிரபல சாமியார் ...

ஜார்ஜ் பொன்னையா மாதிரியாக ஒரு நாலு பேரு இருந்தால் போதும் தமிழ்நாட்டில் இந்துமதவெறி இயக்கங்களும், பாஜகவும் ஒகோன்னு வளர்ந்திடும்! அந்த மதவாத தீக்கு நெய்யை வாளி நிறைய வாரி,வாரி ஊத்தி இருக்கிறார் பாதிரியார். இப்படி எவனாவது பேச மாட்டமாட்டானான்னு தானே இந்துத்துவ அறிவு ஜீவிகளும் காத்திருந்தாங்க..! இந்த மாதிரி சம்பவங்களை மிக நுட்மாக ஊதி, ஊதி  இந்துக்களை அணிதிரட்ட அவங்களை போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவங்களும் ஜமாய்க்கிறாங்க..! சோஷியல் மீடியாவெங்கும் பாதிரியார் விதைத்த வெறுப்பு பன்மடங்கு விஸ்வரூபமெடுத்து வியாபித்துள்ளது! இந்த விவகாரத்தில் கன்னியாகும்ரி ...