வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்!  மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல். தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச்  சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக  போராட்டத்தை வழிநடத்தி வருபவர்   கே.பாலகிருஷ்ணன்.  பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான  காரணம்,  ...