சொர்க்கலோகம் என்பது இது தானா? என்று மிரளக்கூடிய சகல ஆடம்பர வசதிகளுடன் சமூகத்தின் பெரிய கோடீஸ்வரர்கள்,செல்வாக்கானவர்களைக் கொண்டது ஜிம்கானா கிளப்! ‘எத்தனை பெரிய மனிதர்களுக்கு எத்தனை சிறிய மனம்..!’ என்கிற ரீதியில், இங்கு தொழிலாளர்கள் படும்பாட்டைக் கேட்டால்…! நீதியரசர் அரிபரந்தாமன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்ற ஒரே காரணத்திற்காக இந்த கிளப் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போதுதான் முதன்முதலாக “ஜிம்கானா கிளப்” பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தால்.. விரட்டுவீர்களோ..என ...