எல்லா வகையிலும் தனியார் நிறுவனங்கள் நாட்டை கொள்ளைடித்துச் சுரண்ட கதவு திறக்க வேண்டும் என்ற பாஜக அரசு திட்டத்தின் ஒரு அங்கம் தான் பயிர்காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதாகும்! இந்த லட்சணத்தில் ‘இதற்கு பிரதம மந்திரி காப்பீடுதிட்டம்’ என்ற பெயர் வேறு! சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் பயிர் காப்பீடு என்ற ஒன்று தேவைப்படாமல் தான் எவ்வளவோ சாதனைகள் நடந்துள்ளன! முதலாவதாக இந்த திட்டமே அவசியம் இல்லாதது. அப்படியே அவசியம் என்று கருதினால் லாப நோக்கமில்லாத வகையில் அந்தந்த மாநில அரசே இதை ...