தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசின் வசமுள்ள சொத்துகள், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  குத்தகைக்கு தரப் போகிறார்களாம்! இந்தியாவின் சமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில் அணுகக்கூடிய வகையில் உள் கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், ,சுரங்கம், எரிவாயுக் குழாய் உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு ...