தமிழகத்தில் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு தினசரி 80 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வரும் திங்களன்று (செப்டம்பர் 13) நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒரே நபருக்கு அந்த ஆர்டரைத் தராமல் பரவலாக பகிர்ந்து தரலாம் என தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது! தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப் பண்ணைகள் உள்ளன. அவர்கள் இந்த டெண்டரில் நேரடியாக பங்கு பெற முனைப்பு காட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு ‘லாபி’ செய்வதாகத் தெரிய ...