ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது தொடங்கி அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன! கட்சி செல்வாக்கோ, கட்சித் தலைமையின் செல்வாக்கோ கருதி விழும் ஓட்டுகளை விட ஒருவர் உள்ளூருக்கு உண்மையாக உழைக்கக் கூடியவரா.? என மக்கள் கணித்து ஓட்டுப் போடும் ஒரே தேர்தல் இது தான்! இந்த தேர்தலை எதிர் கொள்வது எப்படி..? மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது மாவட்டத்தில் ஊராட்சி தேர்தல் வரவுள்ளது! விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ...