கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!
நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது.
மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக மாறி கேள்வி கேட்டு இருப்பதே சாட்சியாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி ஒரு விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில்,
”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’
என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ்.
இது ஒரு விஷக் கருத்தா இல்லையா? இது விஷக் கருத்து என்பதால் தானே போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை மாரிதாஸ் எடுத்துவிட்டார். அப்படியானால், அதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கலாமே!
இந்த கருத்திற்கு எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால் அது எவ்வளவு பெரிய கொந்தளிப்பில் சென்று முடியும்?
இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, “அவரது ட்விட்டரில் முப்படைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது” என்ற வாதிட்டார்.
ஆனால், இந்த சப்ஜெக்டில் இருந்து வெளியேறியவராக திடீரென குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கூறுகிறார் என்றால், என்ன பொருள்?
ஒரு திருடனைப் ப்டித்து கோர்ட்டில் நிறுத்தினால், அவன் திருடியது உண்மையா? என்பதை தீர விசாரிக்காமல், ”இன்னொருத்தனும் திருடி இருக்கானாமே அவனை ஏன்பிடிக்கலை? ஐந்து வருடத்திற்கு முன்பு கூட திருட்டு நடந்திருக்குதாமே” என்றால், அந்த இடத்தில் நீதிபதியானவர் குற்றவளியின் சகாவாக வெளிப்படுவதாகத் தானே மக்கள் புரிந்து கொள்வார்கள்! மேலும் இவ்வளவு விஷமத்தனமாக டிவிட்டர் போட்ட மாரிதாஸின் வழக்கையே ரத்து செய்துள்ளார் நீதிபதி.

இதே நீதிபதி தான் சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்திற்கு சங்கராச்சாரியார் பொது இடத்தில் மரியாதை கொடுக்க மறுத்த விவகாரத்திலும் வழக்கு தொடுத்தவரையே குற்றவாளி கூண்டில் ஏற்றி, ”நீங்க யாரு,தமிழ் ஆர்வலரா? எங்கே, ஐந்து திருக்குறள் சொல்லுங்கள் பார்க்கலாம்…’’ எனக் கேட்டு சோதித்து குற்றம் கண்டார்.
பிறகு சங்கராச்சாரியாரின் பிரதிநிதியாக மாறி நின்று, ”இறைவழிபாடு நடக்கும் போது தியானத்தில் இருப்பது சங்கராச்சாரியார் வழக்கம். அந்த வகையில் அவர் தமிழ்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்துவிட்டார்’’ என சொல்கிறார். இந்த விளக்கத்தை சங்கராச்சாரியாரை அழைத்து கேட்டு அவராகவே சொல்லி இருந்து, ”அதை நான் ஏற்கிறேன்” என நீதிபதி சொன்னாலாவது, அதை ஒரு நியாயமான விசாரணை எனக் கருதலாம்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து விளக்கம் பெறாமலே நீதிபதியே அந்த குற்றவாளி நிலையில் இருந்து வியாக்கியானம் தருவது, ‘சட்டத்திற்கு எதிரானது மட்டுமில்லை, சார்பு நிலையை பட்டவர்த்தனமாக காட்டுவதாகும்’. ‘இப்படிப்பட்டவர்கள் நீதிபதி ஸ்தானத்திற்கே அருகதையற்றவர்கள்’ என்ற எண்ணமே இதை கேட்கும் பொது மக்கள் மனதில் வலுப்படும்.
கிஷோர் கே.சாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்து அன்றைக்கு மாரிதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை பார்த்தால் மாரிதாஸ் மன நிலைக்கும் இந்த நீதிபதி மன நிலைக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. சட்டத்தை தன் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பதுதான் சரி” எனப் பதிவிட்டிருந்தார்.
ஒருமுறை மாரிதாஸ் அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்கள் பற்றி மிக அவதூறாக பேசி இருந்தார்.
அரசு ஊழியர்களுக்கு தேசப்பற்று துளிகூட இல்லை.. அரசு ஊழியர்கள் அரசிடம் துப்பாக்கி முனையில் வைத்து பணத்தை பறித்து செல்கிறார்கள்.. அரசு டாக்டர்கள் பஞ்சை திருடிக்கிட்டு போயிடுறான்… 60 வருஷமாக இது நடக்கிறது.. அரசு ஆஸ்பத்திரிகள் எதுவும் சரியாக செயல்படுவதில்லை.. இந்த அரசு ஆஸ்பத்திரிகளை மூடிவிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு நிதி அளிக்க வேண்டும்” என்று மாரிதாஸ் தெரிவித்திருந்தார்.
அரசு மருத்துவமனைகளின் சில தவறுகளுக்கும், அரசு ஊழியர்கள் சிலர் செயல்பாடுகளுக்கும் பெருந் திரளான ஏழை, எளிய மக்கள் பலன் பெறும் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடுவது எவ்வளவு ஆபத்தானது? அது போதாது என்று மனிதாபிமானற்று பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி தரவேண்டும் என்பது எப்படிப்பட்ட உள் நோக்கம் கொண்ட சிந்தனை?
இது குறித்தும் அன்று அவர் மீது புகார்கள் பதிவாகின.ஒன்றும் நடக்கவில்லை. எளிய பழங்குடியினர் காவல்துறையால் அனுபவிக்கும் துன்பங்களை காட்சிப்படுத்திய ஜெய்பீம் திரைப்படத்தையும், அதன் படைப்பாளிகளையும் படுகேவலமாக விமர்சித்தார்!
பத்திரிகையாளர்களை கருத்தியல் ரீதியாக அல்லாமல் மிகத் தரக் குறைவாக விமர்சிப்பதும் மாரிதாஸ் வழக்கமாக உள்ளது.
இதே போல கொரானா காலகட்டத்தில் மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரங்கள் இழந்து தவித்த காலத்தில் கொரானாவை இஸ்லாமியர்கள் பரப்பி வருகிறார்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்தார். இதற்கும் மாரிதாஸ் மீது புகார்கள் குவிந்தன! ஆயினும் அவரை காவல்துறையால் நெருங்கவே முடியவில்லை.
திமுகவை, கருணாநிதியை, ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அப்படி விமர்சிக்கப்பட வேண்டியவர்களே அவர்கள்! ஆனால், எந்த ஒரு விமர்சனமும் பொது நலன் சார்ந்திராமல், வன்மமாக வெளிப்படும் போது அது சமூக அமைதிக்கே கேடாகிவிடும். திமுகவிற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. திமுக தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது.. போன்ற விஷம கருத்துக்களை தனி நபராக இருந்து செய்வது மாரிதாஸீக்கு சவுகரியமாக இருக்கிறது.
இதை பாஜகவிற்குள் பொறுப்பில் இருந்து செய்தால் அதற்கு கட்சி பதில் சொல்ல வேண்டி இருக்கும். அது கட்சியின் விமர்சனமாக கருதப்படும். ஆகவே, அவர்கள் இப்படி அவதூறு பேசுவதற்கு என்று தனியாக ஒருவரை அதிகாரபூர்வமற்றவராக வைத்து அதிகாரவர்க்க பாதுகாப்பையும் பின்னிருந்து வழங்கி வருகிறார்கள். ஒரு அரசியல் கட்சியாக தங்களால் பேச முடியாதவற்றை எல்லாம், அப்படிப் பேசினால் அசிங்கப்பட்டு அம்பலப்படுவோம் என அஞ்சுவதை எல்லாம் மாரிதாஸ் என்ற ஒரு விஷமியை பேச வைத்து அவர் பின்னால் அரணாக நிற்பது கோழைத்தனம் தானே?
தற்போது மாரிதாஸ்காக பாஜக களம் காண்கிறது. ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கிறது. கட்சி அலுவலகத்தில் வாயில் துணிகட்டி அனைவரும் போராடுகின்றனர். தெருவில் இறங்கியும் போராடுகின்றனர். அவர் அவ்வளவு முக்கியமானவர் என்றால் அவரை ஏன் உங்கள் கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பு கொடுக்க முடியவில்லை உங்களால்…?
இன்றைக்கு மாரிதாஸீக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது..? மாரிதாஸீக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன..?
Also read
வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது..?
தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் உறுதியாக மாரிதாஸ் மீதான சகல குற்றங்களையும் நிரூபித்து உள்ளே தள்ளவில்லையானால் சட்டம், நீதி எதற்கும் மரியாதை இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாக அது வழி வகுத்துவிடும். தங்களின் சுயமாரியாதையே காப்பாற்றி கொள்ள முடியாத ஆட்சியாளர்கள் எப்படி நம்மை காப்பாற்ற போகிறார்கள்..? என்ற அவ நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படாதவாறு திமுக நடந்து கொள்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
GOD ONLY SAVES
வரவர தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் மற்றும் தேச விரோதிகளின் அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே போகிறது மாரிதாஸ் அதற்கு மூல காரணம் அதற்கு முன்பு தமிழக சோசியல் மீடியாக்களில் வரைந்த முப்படை தளபதி பிபின் ராவத் இன் இழப்பினை கொண்டாடும் வகையிலான வீடியோக்களும் இறப்பினை மகிழ் வதாகவும் இறைவன் கொடுத்த தண்டனை எனவும் காஷ்மீர் முஸ்லிம் பெண்களைக் கொடுமைப்படுத்தி அதற்கான தண்டனை எனவும் நமது பிரதமர் இறந்திருந்தால் இதைவிட மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என பல தேச விரோத கருத்துக்கள் பரவலாக வெளிவந்த போதும் இந்த வழக்குப் பதிவு கைது நடவடிக்கையும் இல்லாததே காரணம் தேசப்பற்றுள்ள அரசு உடனடியாக தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிட சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் மாரிதாஸ் இந்த பதிவுக்கு அவசியம் இருந்திருக்காது சமூகவியல் விட்டுவிட்டு தேசியவாதி மீது வழக்கு பதிவு செய்தால் அது உங்களைப் போன்ற சமூக விருதுகளை ஊக்குவிப்பதாக அமையும் மாரி ஹாசன் பதிவினால் அண்டை மாநிலத்தவர் நமது தமிழகத்தை தவறாக எண்ணுவர் எனக்கூறும் தாங்கள் சமூக விரோதிகள் மீதும் முப்படை தளபதி இறப்பினை சந்தோசமாக கொண்டாடும் நபர்கள் மீதும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்கவில்லை என்றால் தமிழகத்தின் மீது அண்டை மாநிலத்தவர் க்கு தவறா எனும் வராதா உங்கள் பார்வையை சரி செய்யவும் அது சரி தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறை கூறும் தாங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு சம்பந்தமே இல்லாமல் தமிழக முதல்வரை பாராட்டி பேசிய நீதியரசரை பற்றி தாங்கள் ஏன் எந்த விமர்சனமும் வைக்கவில்லை உங்களை போன்றவர்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும் அது தேசத்துக்காக வார்டு படாவிட்டாலும் பரவாயில்லை உங்களை ஈன்ற இந்த தேசத்திற்கு துரோகம் இழைக்காமல் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு சென்று அவர்களுக்கு உண்மையாக இருங்கள் வாழ்க பாரதம் வளர்க இந்தியா
Super sir
நெத்தியடி கேள்விகள். சிறப்பு
You are the only person qualified ti live in future Idia…Hats off, Sir ji..!!!
பதிவு சரிதான் ஜெயலலிதா அம்மையாரை போன்ற துணிவு தற்போதைய ஆட்சிக்கு இல்லாதது வருத்தமே அமையாராக இருந்திருந்தால் இவனல்லாம் பேச முடியுமா
Need of the hour suggestion to the HON CM OF TN!!
Time to act rather than complacent against those venemous gangs spilling venom all along the their journey against the peace loving people of TN!!
மாரிதாஸ் இந்துத்துவ கைக்கூலியாக இருக்கலாம். ஆனால் அவர், பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தது, எமர்ஜென்சியை எதிர்த்ததால் தான் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது முதலிய திராவிடப் புளுகுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தியவர். முதல் முதலாக மத்தியில் அறுதி பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைப்பதற்கு காரணமே மன்மோகன் சிங் ஆட்சியில் திமுக கும்பல் போட்ட ஆட்டமும் செய்த சேட்டையும் தான்.. இந்திய அரசியல் வரலாற்றில் பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்ததற்கு கருணாநிதி கும்பலுக்கு தான் ஆர்எஸ்எஸ் கும்பல் நன்றி சொல்ல வேண்டும். பெரும்பான்மை மதவாதத்தை உண்மையாகவே எதிர்க்க நினைக்கும் யாரும் திமுகவை வெறுக்கவே செய்வார்கள்.
மிகச் சரியான பதிவு. நீதித்துறைக்கே களங்கம்.
பொது மக்கள் நலனில் அக்கறை உள்ள சமூக உணர்வுள்ளவர்கள் மத்தியில் மேற்படி நிகழ்வுகள்.ஒரு தயக்கதினை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் அனைத்து நடுநிலை எண்ணம் கொண்ட எழுத்தாளர் மற்றும் சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் மன வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது..
மிகவும் சரி, அனைத்தும் நிஞாயமான நடுநிலையான கேள்விகள் எவராலும் மறுக்க முடியாத உண்மை!
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற அடிப்படையில் நீதிபதியின் நியாயமற்ற செயல்பாட்ட்டை கேள்வி கேட்ட கட்டுரை தேவையான ஒன்று.
நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் ஐயப்பாட்டிக்கு அப்பாற்பட்டு இருப்பது நல்லது.
ஒரு நீதிபதி பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்ற சந்தேகம் எழும்போது அரசு தரப்பு வேறு ஒரு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றிக்கொள்ள சட்டத்தில் இடம் இருக்கிறதா அல்லது நீதிபதியின் நியாயமற்ற நடவடிக்கை குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடலாமா என்பது பற்றி ஆராய்ந்து அதற்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கலாமே.
அருமையான பதிவு சாவித்திரி கண்ணன் அவர்களே
இதே நீதியரசர் மாதொருபாகன்- பெருமாள் முருகன் பற்றிக் கூறிய கருத்துக்களை ஏன் மனதில் கொள்ளவில்லை? உங்களுக்கு ஆதரவாகப் பேசினால் நியாயமான நீதிபதி….
மாறாகப் பேசினால் சார்பு கொண்ட நீதிபதி….. நல்ல வேலை அவர் எப்படி திருநீறு பூசிக் கொண்டு நீதிமன்றம் வரலாம்? எனக் கேள்வி கேட்காமல் உள்ளீர்களே! அதுவரை ஷேமம்!
நீதிமன்றம் என்பது ஒரு அலுவலகம்!
நீதிபரிபாலணை என்பது ஒரு வேலை!
தீர்ப்பில் குறையிருந்தால், மேல்முறையீடு என்ற நிவாரணம் உண்டு
தயவு செய்து இதைப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள் சகோதரரே
சரி.குல்லா போட்டுக்கொண்டு முல்லா போல தாடி வைத்துக்கொண்டு ஒரு இஸ்லாமிய ஜட்ஜ் இப்படி நீதிமன்றம் வந்தால்..வாயைப்பொத்திக்கொண்டா இருப்போம்..நீதிபதி மதமாச்சர்யம் அற்றவராய் இருக்க வேண்டும். இல்லையேல் பதவி துறக்க வேண்டும்
நீதிகள் இன்று கிடைப்பதில்லை. பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதி சொல்லவேண்டியவர்கள் அநீதியை கூறினார்கள். அதே போன்றுதான் நீதிபதி வழக்கறிஞராக மாறி வாதாடமல் வேண்டப்பட்டவர் என நினைத்து வழக்கை தள்ளுபடி செய்கிறார். இது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல .நீதிக் கிடைப்பதில்லை விற்கப்படுகிறது.
நீதிக்கே அவமானம்! நீதிமன்றத்தின் புண்ணியமே கெடுகிறது!
மக்களின் இறுதி நம்பிக்கையே நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான். அங்கே நேர்மையில்லை, சட்டங்கள் குருட்டுத்தனமாக சில பச்சோந்திகளால் ஆட்டம் போடுகிறது. அதனால், நியாயமான வழக்கறிஞர்களுக்கும், நேர்மையான நீதிபதிகளுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதுபோன்ற காளான்களை மீண்டும் தக்க நடவடிக்கை எடுத்து சிறையிலடைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதியே அவரது வக்கீலாக மாறி ?? இது மாதிரி அறிவை பயன்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்குமுன் கேள்வி கேட்டிருந்தால் சாத்தான் குளத்தில் இரண்டு வியாபாரிகள் செத்திருக்கமாட்டார்கள் ?
எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால்?? எதிர்வினையாற்றமாட்டார்கள். ஏனென்றால் பதவியில் இருக்கும்போது திமுகவினருக்கு பதவி சுகம் தவிர எதுவும் தெரியாது.இதுதான் கடந்த கால வரலாறு.ஈழத்தில் படுகொலை நடந்தபோது 3 மணிநேரம் உண்ணாவிரதம் மறந்துவிட்டதா ?
திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ??? அது சரி. அதை நினைத்தால் வயிறே கலங்குமே, பாவாடை நாடாவில் ஆரம்பித்து. வேண்டாம் வாந்தி வருகிறது..
மாரிதாஸ் என்ற ஒரு விஷமியை பேச வைத்து??? அப்படி பார்த்தல் இப்போது பல பத்திரிகைகள் திமுகாவிற்கு ஆதரவாகத்தான் எழுதுகின்றன, அதற்கு என்ன சொல்வது.
பார்ப்பன அதிகார ஆதிக்கத்தின் இந்த சீர் கேடு !
அனைவரும் யோசித்தால் விடிவு காலம் பிறக்கும். நம் மக்களை வைத்தே நம் கண்ணை குத்தும் கூட்டம். காசுக்கு மயங்கும் நம் கூட்டம் திருந்தினால் ஒழிய நம் தலை எழுத்தை மாற்ற முடியாது.