அச்சமூட்டும் வெறுப்பு அரசியலுக்கு வலுவான அடித்தளம் போடுகிறார், தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். விஜய்யின் அமைதி, நிதானம் ஆகியவற்றையே அவரது பலவீனமாக சித்தரிக்கும் தாக்குதல்கள், இறுதியில் விஜய்யை இன்னொரு ஜெயலலிதாவாக மாற்றி திமுகவை எதிர்கொள்ள வைக்குமோ..? கடந்த கால அரசியல் காட்டும் பாடம் என்ன?; எதிர்கட்சியை எதிரியாக பாவிப்பது, ஆட்சி செய்வோரை கோழையாக சித்தரித்து தாக்குதல் தொடுப்பது, குரலை உயர்த்தி பேசி, ‘தான் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்’ போன்ற மாயையை உருவாக்குவது.. என்ற திமுகவின் கடந்த கால காலாவதி அரசியலைத் ...
தவெக அரசின் முதல் பட்ஜெட் வந்துள்ளது! பட்ஜெட் போடுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதில் உள்ள ஓட்டைகளை அடைப்பது! போடப்படும் பட்ஜெட் பணத்தில் சரி பாதி அரசியல்வாதிகள், அதிகாரிகள் பைக்கு போவதை தடுப்பார்களா? காட்டப்படாமல் களவாடப்படும் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்புவார்களா? கடன் இல்லாத தமிழகத்தை கட்டமைப்பார்களா?; தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியபெல்சின் இன்று சட்ட சபையில் வைத்து பேசினார். முதல்வர் விஜய்யின் வீழ்ச்சியும், எழுச்சியும் இந்த பட்ஜெட் சொல்லும் செய்தியிலும், அது நடைமுறைக்கு வரும் வகையிலும் ...
பகை அரசியல் நெருப்பை பற்ற வைத்து விட்டால், அதை பிறகு அணைப்பது மிகவும் அரிது. மக்கள் நலன் சார்ந்த அரசியலை முற்றிலும் மறுதலித்துவிட்டு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்த அரசியல் தமிழகத்தில் மேலோங்கி வருகிறது. ‘தவெக அரசை தலையெடுக்கவிடாமல் கவிழ்த்தே தீருவது’ என்ற உதயநிதியின் உச்சகட்ட வெறுப்பினூடே ஆபாச பேச்சும் கலந்தது; ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை…! ”விசாரணைக்கு அழைத்துள்ளோம். இன்று இரவே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துவிடுவோம்” என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். அதென்னவோ தெரியவில்லை! அடக்க முடியாத ஆத்திரம், வெறுப்பு, வன்மம் உதயநிதி ...
தனியார் மயத்தால் தரமான சரக்கு கிடைக்குமா? அரசின் வருமானம் அதிகமாகுமா? குறையுமா? சிறைக் கம்பி வழியாக தரப்பட்ட மது விற்பனை, அடிமாட்டுச் சம்பளம், ஊழியர்கள் நடத்தப்பட்ட விதம், பார்களின் சுகாதாரக்கேடுகள், கணக்கு காட்டாமல் ஆட்சியாளர்கள் மது விற்பனையில் அடைந்த ஆதாயம் ஆகியவை தனியார் மயத்தால் முடிவுக்கு வருமா?;ஓர் அலசல்; ”மதுபான விற்பனையில் ரெஸ்டோ பார், தனியார்மயம் குறித்து ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் தனியார் மயமாகிறது” என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதில் உள்ள நன்மை, தீமை இரண்டையும் ...
கரப்பான் பூச்சி இளைஞர் போராட்டத்திற்கான வரவேற்பு தற்செயலானதோ, திடீர் சம்பவமோ, ஒரு வினாத்தாள் கசிவிற்கு வெகுண்டெழுந்த போராட்டமோ அல்ல. கடந்த 12 ஆண்டுகளாக கல்வித் துறையில், ஆர் எஸ் எஸ் சூழ்ச்சிகளால் உருவான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி உள்ளிட்ட இந்துத்துவ தனியார் ஏஜென்ஸிகளின் சகிக்க இயலாத தகிடுதத்தங்களின் விளைவுகளே; புது தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களை பெல்லட் குண்டுகளால் சுட்டும், தடியடி நடத்தியும் சமாளிக்க முடியாமல் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலுக்கு செவி சாய்த்தது மோடி அரசு. இது மாணவர்களுக்கும், கரப்பான்பூச்சி ஜனதாவுக்கு மட்டுமான ...
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான தினேஷ் சீரங்கராஜின் டெல்லி மாணவர் போராட்ட கள அனுபவங்கள் அலாதியானது. காக்ரோச் ஜனதா கட்சி, காவல் துறையின் வன்முறை, இளைஞர்கள் அதை எதிர் கொண்ட விதம், பொது மக்களின் ஆதரவு, இடதுசாரிகள் பங்கேற்பு, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி சீர் குலைக்க முயன்றது, பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு போன்றவற்றை பேசுகிறார்; தில்லியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகமான அஜாய் பவனில் போராட்டம் முடிந்த ஆசுவாசத்தில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது; காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயர் ...
சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில், அரசியல் மேடைகளும், கிளர்ச்சிகளும் புதியனவல்ல. ஆனால், அதிகார பீடத்தின் ஒற்றைச் சொல்லிலிருந்து உதித்து, லட்சக் கணக்கான இளைஞர்களின் பேரெழுச்சியாக மாறி, ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை சாதித்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ யின் போராட்டம், இந்திய அரசியலின் பாரம்பரிய விதிகளை முற்றிலும் தலைகீழாக மாற்றியது; அறம் இணைய இதழின் ஆழமான அரசியல் ஆய்விற்காக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வை நாம் பல கோணங்களில் பகுப்பாய்வு செய்யலாம். # நூற்றாண்டு அரசியல் கட்சிகள் தோற்ற இடத்தில் “கரப்பான் ...
தவெக ஆட்சிக் கவிழ்ப்பில் தீவிரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜியை விட்டு வைத்தால் தொடர்ந்து சதி திட்டங்களில் ஈடுபடுவார் என்பதால், அவர் மீதான ஊழல்களை தூசி தட்டி தூக்கி சிறையில் தள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டுவது ஒரு புறம் என்றால், மறுபுறம் பாஜக துணையுடன், நீதிமன்ற லாபி செய்து கண்கட்டி வித்தை காட்டும் செந்தில் பாலாஜி; ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் ஊழல் ஆதாரங்களை அள்ளி எடுத்து காட்டியதும் ...
தமிழ்நாட்டின் உயிர் நாடியான காவிரி நீர் பிரச்சினையிலும் அரசியல் செய்வது, பகைமை காட்டுவது, குற்றத்தை பாதிக்கப்பட்டவன் மீதே சுமத்துவது ஆகியவற்றின் மூலம் பாதிப்பு ஏற்படுத்துபவன் பக்கம் சென்று நிற்கலாமா? மற்ற மாநிலத்தவர் போல தமிழ்நாட்டு நலன் சார்ந்த பிரச்சினைகளில் தமிழக கட்சிகளால் ஏன் ஓரணியில் நிற்க முடியவில்லை? உலகத்திலேயே வேறந்த இனத்திற்கும் இல்லாத தனி குணம் தமிழ் இனத்திற்குண்டு. ஒற்றுமையின்மை…! அதாவது, தமிழ்நாட்டிற்கு பேரழிவு ஏற்பட்டாலும் ஒன்றுபட முடியாமை! காவிரிக்காக கர்நாடகத்தில் கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் ஒருமித்து செயல்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் குற்றம் ...
மகத்தான இளைஞர் எழுச்சி எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மத்திய ஆட்சியாளர்களிடம்! வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தமாம்! ஆர்.எஸ்.எஸின் முரட்டுத் தளகர்த்தர் புதிய கல்வி அமைச்சராம்! நீட் மோசடிகளுக்கு காரணமான மூல வேர்களை பழுதில்லாமல் பாதுகாத்து, புதிய தந்திரோபாயங்களுடன் பாயவுள்ளது பாஜக அரசு; முழுமையான அலசல்; மேன்மேலும் மூர்க்கமாக செயல்படவும், நடைபெற்ற குற்றங்களுக்கு பொறுப்பேற்காமல், யாரோ செய்ததைப் போலவும் அவர்களுக்கு சிறை, மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம், வினாத்தாள் கசிவை தண்டிக்க ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதன் மூலமாகவும் பிரச்சினைக்கு ...


























