திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பரந்தூரை தனிமைப்படுத்திவிட்டது. கூட்டணிக் கட்சிகள், எதிர்கட்சிகள், மக்கள் இயக்கங்கள் யாருமே பரந்தூருக்கு சுலபத்தில் செல்ல முடியாது. இது போன்ற நிலையில் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு எளிதில் அனுமதிப்பார்களா என்ன? விஜய் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று; என்ன நடந்தது பார்ப்போம்; ஏகனாபுரம் இருப்பது தமிழகத்தில் தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் யாரும் அவ்வளவு சுலபமாக இந்த ஊரை நெருங்கி விட முடியாத நிலையே உள்ளது. உண்மையிலேயே பாஜக ஆளும் மா நிலங்களில் கூட இவ்வளவு கடும் நெருக்கடிகள் ...
மதுரை மக்கள் மனஉறுதி குலையாதவர்கள்! அரசியல் தெளிவு மிகப் பெற்றவர்கள். போராடுவதில் சளைக்காதவர்கள், உயிருக்கும் அஞ்சாதவர்கள்…! உண்மையாகவே டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யப்படுவது வரை ஓயமாட்டார்கள்.. என்பதை மத்திய ஆட்சியினர் உணர்ந்து கொள்ள இதுவே சாட்சியாகும்; பாஜக தலைவர்கள் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க அரிட்டாபட்டி பகுதியில் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சிலரை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் ...
பத்தாண்டுகள் பாஜகவின் கொள்கைபரப்பு செயலாளராக மோடியின் புகழ்பாடி வந்தவர் எஸ்.வி.சேகர். மனுதர்ம, சனாதனக் கருத்தியலுக்கு வலுசேர்க்கும் அவரது பேச்சுக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட எஸ்.வி.சேகரை திமுகவிற்கு 2026 தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் அழைப்பதின் பின்னணி என்ன..? எஸ்.வி.சேகர், மு.க.ஸ்டாலின் இவங்க இரண்டு பேரில் யார் சந்தர்ப்பவாத அரசியலில் சாமார்த்தியசாலின்னு பட்டிமன்றமே வைக்கலாம்…! ”2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரைப் பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை…” ”எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், இப்போது எந்த கட்சி என்று தெரியாது.. நம்ம கட்சி” “கலைஞர் ...
ஏதோ சுண்டல் தருவது போலத் தருவதா? ஒரு அரசாங்கம் தரும் விருதுகளுக்கு நல்ல மரியாதை ஏற்பட வேண்டும் என்றால், விருதுக்கானவர்களை கவனமாக -தகுதிக்கு உரியவர்களாகப் பார்த்து -தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், விருதுக்கான பரிசுத் தொகை இவ்வளவு ஏற்ற இறக்கங்களுடன் இருப்பது சமூக நீதிக்கு அழகா? ஆனால், கடந்த அதிமுக அரசும் சரி, தற்போதைய அரசும் சரி விருதுக்கானவர்களை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு அதிர்ச்சியையும், அருவெறுப்பையும் ஏற்படுத்துகிறார்கள்! தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு ...
ராகுல் தேச விரோதியாம்! சொல்வது தேச துரோகிகள்! பேயிடம் இருந்து விடுபட்டு பிசாசுகளிடம் சிக்கிய கதையாய் இந்தியா பிரிட்டிஷாரிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று மதவாத பிளவு சக்திகளிடம் பறிகொடுத்துள்ளது. இதனால் தான், ”இன்றைக்கு ஒரு உள் நாட்டுப் போர் தேவைப்படுகிறது” என்றார், ராகுல் காந்தி! விரிவாக பார்ப்போம்; ”1947 ல் இந்தியா பெற்றது சுதந்திரமல்ல, அயோத்தி கோயில் திறந்த போது தான் நாம் சுதந்திரம் பெற்றோம்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் ராகுல்காந்தி. ”1947ல் இந்தியா ஒருபோதும் ...
ஒவ்வொரு கட்சியிலும் கிரிமினல்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். கட்சிகளே, கிரிமினல்களின் பாதுகாப்பு கவசமாகிறது. நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகே, சில கட்சித் தலைமைகள் குற்றவாளிகளை கட்சியில் இருந்து நீக்குகின்றனர். இன்னும் சில கட்சிகள் அதையும் செய்வதில்லை; ஒரு விரிவான அலசல்; அரசியல்வாதிகள் எப்போதுமே கடை பிடிக்கும் தந்திரம் என்னவென்றால், தன் குற்றத்தை மறைக்க எதிரணியினர் செய்த குற்றங்களை உரத்தும், ஓங்கியும் பேசுவதாகும். அந்த வகையில் சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் சுதாகர், மதுரை பள்ளி மாணவி கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது இடைத் தேர்தல் அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியா? இந்தியாவை ஆளும் கட்சியாக இருந்தும், தன் வேட்பாளரைக் கூட களம் இறக்க முடியாத பாஜகவின் தோல்வியா? ”சென்ற முறை இதே தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஆளும் திமுக செய்த அராஜகங்கள், அத்துமீறல்களால் ஏற்பட்ட கசப்புணர்வே இந்த முடிவுக்கு காரணம்” என அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தச் சூழலில் ...
ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது; காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் ...
ஆளுநரின் அதிகார ஆட்டத்தால் ஆறு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி அல்லாடுகின்றன. தற்போது UGC அறிவித்துள்ள புதிய விதிகள், நமது உயர்கல்வி கட்டமைப்பை பின்னோக்கித் தள்ளுபவை. கூட்டாட்சித் தத்துவத்தை குலைப்பவை. பல்கலைக் கழகங்களை சிதைப்பவை. எளியோருக்கு கல்வியை மறுக்கும் மனுதர்ம நோக்கம் கொண்டவை; புதிய பல்கலைக்கழக மானியக்குழு (UGC) விதிகளின் படி, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் ...