‘ஆன்மீக மையங்கள் எவ்வாறு அதிகார மையங்களாகத் திகழ்கின்றன?’ என்பதற்கு இந்த இடமே சாட்சி..! சட்டமோ, நீதியோ, காவல்துறையோ கூட இங்கே நெருங்க முடியாது. இந்த தர்மஸ்தலாவை சுற்றிலும் பாலியல் கொடுமை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் புதைக்கப்பட்டுள்ளனர், எரிக்கப்பட்டுள்ளனர்.. என்ற தகவல் பெரும் அதிர்வை தந்துள்ளது;  கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரச்சித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 800 ஆண்டு பழமையான இந்த வழிபாட்டுத் தளம் அடிப்படையில் சமணத்தவர்கள் கோவிலாக இருந்து ...

தமிழகத்தில் அரசு அதிகாரிகள், சுரங்க மாஃபியாக்கள், காவல் துறை  என்ற வலுவான முத்தரப்பின் கூட்டிணைவு சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு தீவிர ஆதரவளிக்கிறதா? இது போன்ற கனிமவள சுரண்டல்கள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் மேற்கொள்ளப்படுகிறதா?” என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்; தமிழ்நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆற்று மணல், கடற்கரை மணல், சரளை மற்றும் சிவப்பு மண் போன்ற இயற்கை வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக,  உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், பிற நீதி மன்றங்களிலும் தொடரப்பட்ட தொடர்ச்சியான ...

அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தை வழி நடத்தும் கட்சிக்கும் கண்டிப்பாக ஒரு இடைவெளி இருக்க வேண்டும். புதிதாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக முதலமைச்சர் நியமித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேலையில் அரசு இயந்திரத்தை திராவிட மாடல் ஆட்சிக்கான பிரச்சார பீரங்கியாக்குவதா..? ஆளுகின்ற வாய்ப்பு பெற்ற கட்சி அரசாங்கத்தையையும், அதன் நிதியையும் கட்சி நலன்களுக்கு பயன்படுத்தக் கூடாது. தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலைமையில் தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனமாம்! ஐஏஎஸ் அதிகாரிகளை மலினப்படுத்த இதைவிட வேறு தேவையில்லை. இது ...

மிக நீண்ட இழுபறியாக உள்ளது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இரட்டை இலை யாருக்குரியது என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தின் இழுபறிக்கு பின் பாஜகவின் அரசியல் குயுக்தி பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அம்பலபடுத்திவிட்டது உயர்நிதிமன்றம்; இரட்டை இலையை தனக்குத் தான் என கேட்ட ஒ.பி.எஸ் கிட்டத்தட்ட ஒற்றை மரமாகி நிற்கிறார். 66 எம்.எல்.ஏக்களில் 62 பேர் இபிஎஸ் வசம் இருக்கிறார்கள். நிர்வாகிகளில் சுமார் 95 சதமானோர் இபிஎஸ் வசம் தான் உள்ளனர். இது சின்னஞ்சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ...

தனிப் பெரும் ஆற்றலாளர்- எனினும், தன்னைத் தானே சிதைத்துக் கொள்வதில் தன்நிகரற்றவர்!இது தான் வைகோவை பற்றிய தமிழக மக்களின் மதிப்பீடு. காலத்திற்கு காலம் எடுத்த தவறான முடிவுகள், தன்னை நம்பி வந்த பல தளபதிகளை தவறவிட்ட சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் வைத்து பார்க்கையில் அவரது தற்கொலை முயற்சிகள் தடையின்றி தொடர்வதை உணரலாம்; 1993ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உருவான மாபெரும் எழுச்சியை தற்போது நினைத்தாலும் திகைப்பாக உள்ளது. ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் வைகோவின் வெளியேற்றத்தை வருத்தமுடன் பார்த்தனர். எட்டு மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் ...

போராட்டமின்றி தீர்வில்லை..! அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. ஒட்டு மொத்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். என்னென்ன பிரச்சினைகள், என்னென்ன கோரிக்கைகள் நோக்கம் என்ன என்பது குறித்த முன்னணி தொழிற் சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன? # வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், # குறைந்த பட்ச சம்பளம் ரூ. 26,000 நிர்ணயிக்க வேண்டும், # குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்க வேண்டும், # பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும், # புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், # விவசாய ...

வாக்காளர்கள் சரிபார்ப்பு, திருத்தம் என்பதாக சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களை தகுதியற்றவர்களாக்குவது, சிறுபான்மையினரை, ”நீ இந்தியக் குடிமகனே கிடையாது” என அகதியாக்குவது என்ற நோக்கங்களுடன் இந்திய தேர்தல் ஆணையமே செயல்பட முடியுமா..?  இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க இருக்கிறது. நாட்டு நடப்பை நன்கு உணர்ந்தவர்கள் இந்த தேர்தல் நிதிஷ் குமார் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணிக்கு – பாஜ க கூட்டணிக்கு- சிம்ம சொப்பனமாக இருந்து வருவது தெரியும். ஹரியானாவிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் ...

ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேர்முக வரிகள், மறைமுக வரிகள், எதற்கெடுத்தாலும் வரிகள்..என வரி கொடுத்தே வற்றிப் போகிறான் இந்தியக் குடிமகன். நிதிப் பகிர்வில் மாநிலங்கள் வஞ்சிக்கபடுகின்றன. கேரளாவை தமிழக அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும். பீட்டர் துரைராஜுவுக்கு  பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா தந்த நேர்காணல்; பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றுள்ள  இவர் தமிழக வேளாண் வளர்ச்சி, தமிழகத்தில் பெண்கள் நிலை, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பரப்புகளில்  பல கள ஆய்வுகளை நடத்தியுள்ளார். Literacy and Empowerment,  State ...