ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்!  டாஸ்மாக் முறைகேடுகள் , அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு..எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா? இன்றைக்கு இந்தி திணிப்போடு, சமஸ்கிருத திணிப்பும், சனாதன மேலாதிக்கமும் பாய்ச்சலோடு நடக்கின்ற சூழலில்  புதிய பராசக்தி வந்துள்ளது. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சி என்பது பாஜக எதிர்ப்பைப் பேசிக் கொண்டே பாஜகவின் அஜந்தாக்களை  அச்சுபிசகாமல் நிறைவேற்றித் தரும் ஆட்சியாக உள்ளது என்பதை தொடர்ந்து ஆழமான ...

பராசக்தி சொல்ல வரும் செய்தி என்ன? காங்கிரஸ் மீதான அதி தீவிர வெறுப்பை ஆழமாக விதைப்பதா? இளைய தலைமுறைக்கு பாஜகவை விட காங்கிரஸ் தான் மிகப் பெரிய வில்லன், அழிக்கப்பட வேண்டிய நாசகார சக்தி என்ற உணர்வை தோற்றுவிப்பதா..? இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்த திமுக இன்று செய்து கொண்டிருப்பது என்ன..? மிகுந்த ஆர்வத்தோடு பராசக்தி படம் பார்க்கச் சென்றேன். தமிழ்நாட்டு வரலாற்றில்  தமிழ் காக்க நடத்தப்பட்ட மகத்தான உணர்வெழுச்சியே இந்தி எதிர்ப்பு  போராட்டங்களாகும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் இது வரை ...

எப்படிப் பார்த்தாலும் அதிகாரப் பரவல் என்பதிலே தான் ஜனநாயகத்தின் ஆன்மாவே உள்ளது. அதிகார குவிப்பு என்பது மத்தியில் இருப்பதை எதிர்க்கும் போது மாநிலத்திற்கு மட்டும்  விதி விலக்கா என்ன? கூட்டணி ஆட்சி என்பதை எடுத்த எடுப்பிலேயே எதிர்க்காமல் அதன் சாதக அம்சங்களை பார்க்கலாமே; கூட்டணி ஆட்சி பற்றி பேசினால், ”பேராசை பிடித்து கேட்கிறார்கள், கூட்டணிக்கு நெருக்கடி தருகிறார்கள்..” என்று கொச்சையாக கேலி, கிண்டல் செய்யப்படுகிறது. கூட்டணி ஆட்சி முறை அதிகார பரலவலாக்கத்திற்கும், பன்முகத்தன்மை கொண்ட – அனைத்து பிரிவினருக்குமான ஆட்சி உருவாக வகை செய்யும். ...

500 கோடி செலவில் ஜனநாயகன் திரைப்படம் எடுத்துள்ளார்களாம். தன் கடைசி படத்தின் மூலம் தன் அரசியலையும் வெளிப்படுத்தியுள்ள விஜய்க்கு மத்திய அரசின் தணிக்கை துறையால் சோதனை. சோதனையை எதிர்கொள்வதில் தான் சாதனை வெளிப்படும். தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை மண்ணாக்கிக் கொண்டிருக்கும் விஜய்! ஒரு அலசல்; திரைப்படத்தின் வழியே அரசியல் பேச நினைத்தால் ஆள்பவர்கள் அதை லேசில் அனுமதிக்கமாட்டார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்த போது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படி களம் கண்டு ...

அதிமுகவில் எங்களை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா மூலம் அழுத்தம் தந்து வந்தவரான ஒ.பி.எஸ் அது கை கூடாததால் திமுகவில் சேர தூதுவிட்டுள்ளார். அதிமுகவில் சேர்வதற்கும், திமுகவில் சேர்வதற்கும் ஒ.பி.எஸ் வைத்த நிபந்தனைகளே அவரை எங்கும் சேர முடியாமல் இரண்டுங்கெட்டான் ஆக்கிவிட்டது; தை பிறந்தால் வழி பிறக்குமாம்! வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற் பயிர்களை நம்பி வாழும் விவசாயிகள் உதிர்க்கும் சொலவடை இது! ஒ.பி.எஸ் இதைச் சொல்வதற்கு காரணம், எப்போதுமே அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து தேவுடு காக்கும் மன நிலை தான். அதிமுகவில் தன்னை ...

வாங்கிக் குவிக்கும் கடன்களுக்கு பின்னணியில் ஒரு சர்வ தேச அரசியல் சதி வலை உள்ளது. இதில்  ஆளும் அல்லது ஆண்ட எல்லா அரசியல் கட்சி அரசுகளின் ஆட்சியாளர்களுக்கும் சுயநலம் உள்ளது. தற்சார்பான பொருளாதார பலத்தால் எந்த நாடும் தலை நிமிர்ந்துவிடக் கூடாது என்ற தவிப்பும் உள்ளது; ஒரு அரசாங்கம் வாங்கும் கடன்கள் பொது மக்களை பாதிக்குமா? பாதிக்காதா? ஒரு அரசாங்கம் தான் வாங்கும் கடன்களுக்கு வட்டி கட்டுகிறது. அந்த வட்டிக்கான பணத்தை தர கூடுதல் வரி விதித்தோ அல்லது மக்களுக்கான சில திட்டங்களின் முதலீட்டை ...

சரத்பவார் அஜித்பவார் விவகாரத்திற்கும், ராமதாஸுக்கும் அன்புமணிக்குமான விவகாரத்திற்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? என்று ஆச்சரியமாக உள்ளது. ‘ குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்தால், ‘வாரிசுகளாலே வதைபட்டாலும் ஒன்றிணைவார்கள்’ என்பதையே இவர்களின் வரலாறு சொல்கிறது; தலைவர் எப்படி உள்ளாரோ, அப்படித்தான் அவரது வாரிசும் அச்சுப் பிறழாமல் உருவாகும் என்பதற்கு இந்த இரு அரசியல் குடும்பங்களின் வாரிசுகள் வளர்த்த கிடாவே மார்பில் முட்டிய கதையாக தங்கள் தந்தையையே பலி கொடுத்து, தங்களை வளர்த்துக் கொண்டமை சான்றாகிறது. ”ஊழல்வாதி, கட்சி மாறி, ஓடுகாலி, சந்தர்ப்பவாதி, அதிகார ...

திருத்தணியில் மிகக் கொடூரமான முறையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்ட – தலை பிளக்கப்பட்ட – வட மாநில இளைஞர் சுராஜ் 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி அதிர வைக்கிறது. இதன் பின்னணியில் உள்ள  அரசின் மனிதாபிமானமற்ற போக்கும், சாதி அழுத்தமும் கவலையளிக்கிறது; இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள ஒருவர் உயிருடன் இருப்பதே அபூர்வம். அந்த வகையில் அவரை பிழைக்க வைத்தமைக்கு அரசு மருத்துவர்களை மனதாரப் பாராட்டலாம். ஆனால், மிக மோசமான உடல் நிலை கொண்ட அவருக்கு இன்னும் பல ...

இயற்கையை அழிக்க தடை செய்யும் சட்டங்களை தகர்த்து புதிய சட்டங்கள் இயற்றுவது, தன் ஆத்ம நண்பர் அதானிக்கு ஆரவல்லி மலைத் தொடரை அர்ப்பணிப்பது, அதற்கு நீதிமன்றங்களை நிர்பந்தப்படுத்துவது, எதிர்ப்போர் மீது எல்லா அடக்குமுறைகளையும் ஏவுவது..என்ற பாஜக அரசின் பகாசூர இயற்கை அழிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஒரு அலசல்; இமயமலைத் தொடரை விட பழமையான ஆரவல்லிக் குன்றுகள்! உயரம் குறைந்த மலைத்தொடர் ஆனாலும் வட இந்திய மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது. ஏறத்தாழ 700 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர் புது தில்லியில் தொடங்கி ஹரியானா ...

உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றுக்காக தமிழக மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்! அந்த வெற்றிடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்பட்ட த.வெகவில் என்ன நடக்கிறது? விற்பனை செய்யப்படும் கட்சிப் பதவிகள், விலை போகும் நிர்வாகிகள், ஒருவருக்கொருவர் குழிபறிப்புகள், கட்சித் தலைமையிடம் பேச முடியாத கொந்தளிப்புகள் என அதகளப்படுகிறது த.வெ.க; ஏற்கனவே தமிழக மக்கள் தேசிய கட்சிகள் மீதான அதிருப்தியால் திராவிடக் கட்சிகளை நாடினார்கள்! தற்போது திராவிடக் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ள  நிலையில் மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறையவே உள்ளது! இது தான் கள யதார்த்தம்! ...