படத் தயாரிப்பாளர்களை இந்தப் பாடு படுத்தியுள்ளார், சவுக்கு சங்கர்! ஊரறிந்த ஒரு கிரிமினல் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட முடிகிறது என்றால், அதை தடுக்க வேண்டியவர்களுக்கு இருக்கும் பலவீனமே காரணமாகிறது…என்பது சவுக்கு சங்கர் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் நிருபணமாகி வருகிறது; எல்லோரையும் போல எனக்கும் அந்த சந்தேகம் ஏற்பட்டது…! சவுக்கு சங்கர் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி கைதானது என்பது பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்று…! ஆனால், நேற்று பிரஸ் கிளப்பில் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ரம்யாவும், இயக்குனர் வணக்கம் தமிழா ...

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு..போன்றவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தில் 24 முஸ்லிம்களே உள்ளனர். மக்கள் தொகையில் 14.2 % உள்ள முஸ்லிம்களுக்கு 4.4% இடம் மட்டுமே உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளே முஸ்லீம்களுக்கு உரிய இடம் தருவதில்லை; அப்துர் ரஹ்மானாகிய நான் எழுதிய Absent in Politics and power – political exclusion of Indian muslims  என்ற எனது நூல் 2023 ஏப்ரலில் வெளிவந்தது. இந்த நூலை சமூக விஞ்ஞானிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள், இசுலாமிய தலைவர்கள் என ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து கடுமையான பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், சட்டப்படியாக அவர் வழங்கிய தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளாமல், முரட்டுத்தனமான அணுகுமுறைகளில் அவரது தீர்ப்பை அரசியல் ரீதியாக முறியடிக்க முடியுமா? சட்ட வழிமுறைகளின் சாத்தியம் என்ன என்பது குறித்த அலசல்; திருபரங்குன்றத்தில் கார்த்திகைநாளில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினை  இரு மதத்தினருக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ஒருபுறம், இந்து அமைப்பினரும் பாரதிய ஜனதாவும் திராவிட மாடல் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, இந்துக்களின் உணர்வுகளும் உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை, நீதிமன்றம் அனுமதித்த பின்னரும் அதை ...

மக்களோடு மிக நெருக்கமான தொடர்புடையது உள்ளாட்சித் துறை. சமூகத்தின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவு நீரகற்றல், தூய்மை பணிகளில் அவுட்சோர்சிங், உட்புறச் சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல்.. போன்ற பலவற்றில் தற்போது இந்த ஆட்சியில் நடந்துள்ள பகாசூர ஊழல்கள் பகீர் ரகமாகும்; அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது எந்த மாதிரி வரைமுறையற்ற ஊழல்களில் ஈடுபட்டு தற்போது தண்டிக்கப்படாமல் வழக்குகளை சமாளித்து வருகிறாரோ, அதே பாணியில் தானும் ஊழல் செய்து, அவரை விட அதிக பணம் பார்த்து விடுவது என்பதில் ...

தமிழக மண்ணில் எது நடக்கக் கூடாது எனத் தவித்தோமோ, அது நீதிமன்றத் தீர்ப்பு வழியாக அரங்கேறத் துடிக்கிறது. அமைதி பூங்காவாகத் திகழும் தமிழ் நாட்டை அல்லோகல பூமியாக்க நீதித் துறையை பயன்படுத்தும் நீசப் போக்கை – அறம் தவறி, அத்துமீறி வழங்கப்படும் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்புகளை அலசுகிறார், ஹரிபரந்தாமன்; மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கி, அறுபடை வீடுகளில் முதல் வீடான திருபரங்குன்றத்தை கலவரத் தீ பிடிக்கும் குன்றமாக்க முயற்சித்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மதுரையில் உள்ள ...

எல்லா நியாயங்களும்  தங்கள் பக்கம் இருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ‘அரசு தரப்பில் தவறில்லை’ எனில், தயக்கம் எதற்கு? உண்மை என்னவோ, அது வெளிவரட்டுமே; ‘அரசு தரப்பில் எந்தத் தவறுமில்லை’ என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தர முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஓடோடி வந்து உதவியது என்ற வகையில்.. ...

மிகப் பெரிய கொண்டாட்டமாக தமிழகம் தழுவிய அளவில் உதயநிதியின் பிறந்த நாள் விழாக்கள் பல்வேறு தளங்களில் பரவலாக நடந்தேறி உள்ளன. இந்தப் பிறந்த நாள் விழாக்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு உதயநிதி தான் கட்சிலும், ஆட்சியிலும் இனி, ‘பவர் சென்டர்’ என்பதை உறுதிபடுத்தின. இதன் விளைவு என்னவாகும்? ஒரு அலசல்; வெளிநாடுகளிலும் கூட அங்குள்ள தமிழர்கள் மத்தியில் விழா நடத்தப்பட்டுள்ளன. இது வரை நடந்துள்ள  கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் விழாவைக் காட்டிலும் ஒருபடி அதிகமாகவே உதய நிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் ...

என்ன தான் நடக்கின்றது, கர்நாடகத்தில்? 2023-ல் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து கர்நாடகத்தில் சித்தராமையாவா? டி.கே.சிவகுமாரா? என்ற ஓயாத அதிகார யுத்தம் நடந்து கொண்டே உள்ளது. யார் முதல்வர் பொறுப்புக்கு உண்மையான தகுதியானவர்? இருதரப்பின் இடையறாத மோதலுக்கு காரணம் என்ன? ஒருவழியாக டி.கே.சிவகுமாரை சரிகட்டி, சித்தராமையாவை முதலமைச்சர் ஆக்கியது, காங்கிரஸ் மேலிடம். இதில் தலா இரண்டரை வருஷத்திற்கு இருவரும் பதவியை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சித்தராமையா முதலில் முதல்வராகும் முடிவு எட்டப்பட்டது என்ற பேச்சு பொதுவெளியில் சொல்லப்படுகிறது. இதை காங்கிரஸ் ...

செங்கோட்டையனின் அகராதியில் ‘புனிதம்’ என்பதற்கான பொருளே வேற தான்!  நீண்ட நெடிய அரசியல் அனுபவஸ்தர், சாதுவானவர் என தோற்றம் காட்டும் செங்கோட்டையனின் இன்னொரு முகம்… ”அம்மாடியோவ்! இவ்வளவு மோசமான தீய சக்தியா இவர்..?” என மிரளக் கூடியதாகும்; அதிர்ச்சி தரும் உண்மைகள் சிலவற்றை பார்ப்போம்; 1991 -96 ல் செங்கோட்டையன் முதன் முதலாக போக்குவரத்துதுறைக்கும், வனத்துறைக்கும் அமைச்சரானார்; ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா காலில் தடாரென விழுந்து, காலில் விழும் கலாச்சாரத்தை அதிமுகவில் ஆரம்பித்து வைத்தவரே செங்கோட்டையன் தான். ...

நியாயங்களை நிலை நாட்ட நீதிமன்றங்கள் செயல்பட்ட காலங்கள் கனவாய், பழங்கதையாய், கானல் நீராய் மாறியதோ..? கடந்த பத்தாண்டுகளில் அதுவும் சமீப காலங்களில் ஆட்சியாளர்களின் அக்கிரமங்களுக்கு, அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று வழக்கு போடுவதும், நீதி தேடுவதும் காலவிரயமோ.. என்ற கலக்கம் உருவாகிறது; ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் ஒரே கோணத்தில் சிந்திக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ..? அதிகாரத்தில் உள்ளவர்கள் ஜனநாயக வழிமுறைகளில்  தங்களால் சாதித்துக் கொள்ள முடியாததை நீதிமன்றங்களின் வழியாக அதிரடியாக நிறைவேற்றி செல்வது தான் நிகழ்கால தந்திரோபாயமாக உள்ளது. இப்போதெல்லாம் தாங்கள் நேர்மையாக வழங்கிய ...