தமிழகத்தின் அரசியல் சூழலை தலை கீழாக மாற்றி அமைத்துள்ளது, விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு. இந்த நிகழ்வே ஒரு வலுவான செய்தியை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளது. பல அதிரடி அரசியல் மாற்றங்களை விரைவில் தமிழகம் காண உள்ளது. ஆம், இனி தமிழகத்தில் இரு துருவ அரசியல் தான்; பதவி ஏற்பு நிகழ்வில் விஜய் அருகில் ராகுல்காந்தி இருந்தது, ஒரு மிக முக்கியமான  செய்தியைத் தந்துள்ளது! இன்றைய தினம் இந்தியாவில் மத வெறி சக்திகளுக்கு  சிம்ம சொப்பனமாகத் திகழும் ராகுல் காந்தியை அருகில் வைத்துக் கொண்டு ...

எப்படியோ சிரமப்பட்டு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுகளை பெற்ற நிலையில், பதவி ஏற்க உள்ளார் விஜய். ஆனால், இந்த ஆதரவு அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதை அவதானிக்கும் போது  அவ நம்பிக்கையே துளிர்க்கிறது. நித்திய கண்டமாக அமையவுள்ள ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? ஒரு அலசல்; செம திரிலிங்காக போய்க் கொண்டுள்ளது உள்ளது, தமிழக அரசியல்! பலருடைய புனித பிம்பங்கள் பல்லிளித்துவிட்டன! திமுக தயவில் முதலமைச்சராக ஆசைப்பட்டு எம்.எல்.ஏக்களை பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. ”பாஜகவின் முகமுடியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க ஒத்துழைக்கமட்டோம்” என்ற ...

நினைத்துப் பார்க்க முடியாத  அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் கை கோர்க்கிறார்களாம்! தவெகவுடன் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கை கோர்த்து தடுப்பானேன்? இதன் பின்னணி என்ன? ‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும்’ என்ற நிலைபாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள்  வேகம் பெற்றுள்ளன. மே-5 ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், உதயநிதி ஸ்டாலினை ...

சந்தை அரசியல் சமூகத்திற்கான அரசியலாகுமா? இன்று மக்களை ஆள்வது யார்?  மத்திய, மாநில ஆட்சிகள் யாருக்கானவை? ஆண்ட கட்சிகள், தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி அனைத்தையும் ஊழல் என்ற சேற்றுக்குள் புதைய வைத்து விட்ட  கார்ப்பரேட் சந்தையின் ஆற்றல் குறித்து அலசுகிறார் பேராசிரியர் க.பழனித்துரை இன்று மக்களை ஆள்வது யார்? மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதிகளா அல்லது தேர்தலுக்கும் அரசியல் நடத்துவதற்கும் யார் மூலதனம் தருகிறார்களோ அவர்களா? இந்த ஆட்சி யாருக்கானது? மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுகிறதா? ...

அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களை இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளன.! அசாமில் பாஜக செய்த சூழ்ச்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தாவின் வீழ்ச்சி, பாஜகவின் எழுச்சி எப்படி உருவானது?,கேரளாவில் காங்கிரசின் வெற்றி – ஒரு விரிவான அலசல்; இந்த  தேர்தல் முடிவுகளின் அடிநாதமாக திகழ்வது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் அயற்சியே ஆகும். இதற்கு விதி விலக்காக உள்ளது அசாம் மாநில தேர்தல் முடிவுகள் தான். அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டதற்கு பின்னால் ...

வெறுப்பு அரசியலை வீச்சுடன் செய்வதானது, ஒரு கட்சி தான் செய்த அநீதிகளை, அக்கிரமங்களை மற்றவர்கள் பேசவிடாமல் தடுக்கும்  கலையாகும். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை ஒரு மிகக் கொடிய ஆயுதமாக கையாண்ட இரு பிரதான கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். வெறுப்பு அரசியலின் விளைவு குறித்த ஒரு அலசல்; தமிழகத்திலேயே வெறுப்பு அரசியலை விக்கிரசாக செய்த கட்சி என்றால், அது பாஜக தான்! அந்த கட்சி கொண்டு வரும் சட்டங்கள், மக்கள் விரோத திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை நாம் மக்கள் சார்பாக எடுத்துச் சொன்னால், ...

​​தமிழக அரசியல் களம் தற்போது பெரிய மாற்றம் கண்டுள்ளது. இதனை வெறும் உணர்ச்சிப் பூர்வமான மாற்றமாக மட்டும் பார்க்காமல், ஆழமான தர்க்க ரீதியான பின்னணியோடு அணுக வேண்டியது அவசியம். இந்த வெற்றிக்கு அவரது நெடுங்கால திட்டமிடலும், அரசியல் சூழல்களும் எப்படி கனிந்தன என்பதை அலசுகிறார், இயக்குனர்  சீனு ராமசாமி; ​2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது நிதானமான திட்டமிடலுக்கும், மற்றவர்களின் அதீத தன்னம்பிக்கைக்கும் வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பாடம். ​ஒரு கலைஞனாகத் திரையில் ஈர்த்த கைதட்டல்களை, ஒரு தலைவனாகத் தேர்தல் வாக்குகளாக மாற்றிய விஜய்யின் ...

தமிழ்நாட்டின் தனிப்  பெரும் கட்சியாக வடிவெடுத்துள்ளது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த அரசியல் மாற்றத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ளாமல் ஆரோக்கியமான முறையில் நாம் அணுக வேண்டியுள்ளது. மக்கள் தீர்ப்பை மதித்து, மாற்றங்களை உள்வாங்கி மறுமலர்சிக்கு வித்திட வேண்டும் . அதற்கு முன் விஜய் சில  சவால்களை சந்திக்க நேரும்; கூட்டணி இல்லாமல் ஏற்ப்பட்டுள்ள விஜய்யின் இந்த விஸ்வரூபத்தை அவர் அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று அழைத்த போதும் கூட எந்த ஒரு அரசியல் கட்சியும் பொருட்படுத்தி  அவரோடு கை கோர்க்கவில்லை. குறிப்பாக ...

இன்றைய அரசியல் மக்களுக்கானது அல்ல. இது சந்தைக்கானது. சந்தை, சமூகம், அரசு என்ற மூன்று சக்திகள் இயங்கும் விதத்தில் தான், எது எதை நோக்கி இயங்குகின்றது, அதன் விளைவுகள் என்ன? என்று நாம் தீர்மானிக்க முடியும். மக்களின் எழுச்சி போராட்டங்களை சந்தை எப்படி மழுங்கடிக்கிறது என அலசுகிறார் பேராசிரியர் க.பழனிதுரை நவீன காலத்தில் தேசிய அரசு உருவான பிறகு பொருளாதாரச் செயல்பாடுகளையும், சமூகச் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகவே அரசு விளங்கியது. இன்றைய மக்களாட்சி நடைபெறும் சூழலில் இந்த மூன்று சக்திகளும் வலுப்பெற்று ஒன்றுடன் ஒன்று ...

குழப்பத்தைத் தான் தந்துள்ளார்கள்! அவரவர் விருப்பத்தை கருத்து கணிப்பாக்கி உள்ளார்களா? என்றும் தோன்றுகிறது! மனசாட்சியுள்ள வாக்காளர்கள் மறைந்து போகவில்லை. பார்ப்பன லாபியை பக்கபலமாக்கிக் கொண்டது திமுக. தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதமானால், தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலை குறித்த ஒரு அவதானிப்பு; பிரபல ஊடகங்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்று நினைப்பதே பிழையாகிவிட்ட காலமல்லவா இது? மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எழுதவோ, பேசவோ ஆர்வம் காட்டாத இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் இப்படி கருத்து கணிப்பு நடத்தி மக்கள் கவனத்தை சிதறடிக்கிறார்கள். மக்களிடம் ஆட்சிக்கு ...