ஒரு மழை, வெள்ளம், புயல் வந்தால், நம் நவீன சென்னையின் உண்மையான யோக்கியதை பல் இளித்து விடுகிறது! இந்தியாவின் முதன் முதல் மாநகராட்சி! கழிவு நீர் தங்குவதற்கே வாய்ப்பில்லாத அருமையான இயற்கை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை இத்தகு அவலங்களை சந்திக்க நேர்ந்தது ஏன்? ஒரு காலத்தில் லண்டனின் தேம்ஸ் நதியைப் போல ஓடிய கூவம், ஆரணியாறு -கொற்றலை, அடையாறு, பாலாறும், கோவலமும் வந்து சேரும் பக்கிங்காம்.. போன்ற பெரிய ஆறுகள்! ஓட்டேரி, விருகம்பாக்கம், மாம்பலம்..என 20 க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்களைக் கொண்ட ...
நான்கு மாநில ரிசல்டில் தெலுங்கானாவைத் தவிர மூன்றில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது! உண்மையில் இங்கெல்லாம் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் இருந்தும், வெற்றி கை நழுவிப் போனது! இன்னும் சொல்வதென்றால், மூன்று மாநிலங்களில் பாஜகவிற்கு காங்கிரஸே வெற்றியை தூக்கி கொடுத்துள்ளது! மத்திய பிரதேசத்தில் ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து பாஜகவிடம் வெற்றியை பறி கொடுத்துள்ளது காங்கிரஸ்! பாஜக ஆட்சி குறித்து கடுமையான அதிருப்தி நிலவிய மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு சாதகமான அம்சங்கள் நிறையவே தென்பட்டன! ஆனால், மக்கள் அதிருப்தியை சிந்தாமல், சிதறாமல் வென்றெடுப்பதில் ...
சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தியது! ஆட்சித் தலைமையின் கட்டளைகளுக்காக தவறு செய்த அதிகாரிகள் சும்மா இருப்பார்களா..? அதிகாரிகளின் தவறுகளுக்கு ஆட்சியாளர்களின் தவறுகள் எப்படி பாதை போட்டன… என ஒரு அலசல்; மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதன் துணை மண்டல அதிகாரி அம்ரித் திவாரி அறையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை நடத்தி முடிவடைந்த நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் கைப்பற்றி ...
சபாஷ்! அதிகார மமதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ஆளுநரை சரமாரியாக கேள்விகள் கேட்டனர் நீதிபதிகள்! அவரது உள் நோக்கங்களை அம்பலப்படுத்தினர் ! சிறந்த முறையில் அறிவுறுத்தல்கள் தந்தனர்… எனத் தற்காலிக சந்தோஷத்தை கடந்து, இந்த வழக்கினால் வேறு முன்னேற்றம் உண்டா? செய்ய வேண்டியது என்ன? ஆளுநர்கள் அரசியல் சட்டத்தை மீறி, மக்களாட்சியின் மாண்புகளை மீறி செயல்படுவதால், மாநில அரசின் செயல்பாடுகள் முடங்குவதால், விழிபிதுங்கி மாநில அரசுகள் மீண்டும், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதும், மீண்டும், மீண்டும் நீதிபதிகள் ஆளுனருக்கு கண்டனம் மற்றும் அறிவுறுத்தல்கள் தருவதுமாக.. போய்க் ...
அமோக வாக்கு பதிவு! பி.ஆர்.எஸ்கடைசி நேர தில்லுமுல்லுவில் ஈடுபட்டது! உண்மையில், மூன்று மாதத்திற்கு முன்பிருந்த நிலை முற்றிலும் வேறு! அது, கேசிஆரை வீழ்த்துவது முடியவே முடியாது என்ற தோற்றம்! ஆனால், இந்த மூன்று மாதத்தில் என்னவோ மாயாஜாலம் நடந்தது போல, காங்கிரசின் எழுச்சி சாத்தியமானது! தேர்தலுக்கு முன்னும், பின்னுமான கருத்துக் கணிப்புகளும் காங்கிரசின் வெற்றியை உறுதிபடுத்துகின்றன! காங்கிரசின் வீரியமான பிரச்சார பலம், கள வேலைகள், அரசியல் ராஜ தந்திரங்கள், வியூகங்கள் போன்றவை மட்டுமல்ல, பி.ஆர்.எஸுமே தனக்குத் தானே தன் செயல்பாடுகள், பேச்சுக்கள் வழியே குழிதோண்டிக் ...
பேசிய பெண் பிரபாகரனின் மகளா? அதை உறுதிபடுத்த பழ.நெடுமாறனும், கவிஞர் காசி ஆனந்தனும் மெனக்கெடுவதின் பின்னணி என்ன? இலங்கை தமிழர்களுக்கு பாஜக அரசின் உதவியை பெற்றுத் தரும் நகர்வுகள் பலனளிக்குமா? இந்திய உளவுத் துறைக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு..? ”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருக்கிறார்கள், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள்” என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தெரிவித்திருந்தார். இந்த ...
திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களில் விவசாய நிலப் பறிப்புகள் நடந்துள்ளன! நாளும், பொழுதுமாக விவசாய நிலங்களை பறித்த வண்ணமுள்ள தமிழக அரசின் உண்மையான நோக்கம் என்ன..? விவசாயிகள் மீதான குண்டர் சட்ட வாபஸிலும் ஒரு நாடகமா? “விவசாயிகள் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டோம்” என்கிறார் முதல்வர்! ஆனால், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விவசாயிகள் ஜாமின் மனுவையே நிராகரிக்க சொல்லி அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோர்ட்டில், “குண்டர் சட்டம் விவசாயிகள் மீது ரத்து என ...
”ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு மாநில அரசை வதைப்பது போல, கிராம பஞ்சாயத்து தலைவர்களை கிளர்க்குகளைக் கொண்டும், பிடிஒக்களைக் கொண்டும் செயல்படவிடாமல் திமுக அரசு வதைக்கிறது” என தமிழ் நாட்டு கிராமங்களின் உள்ளாட்சித் தலைவர்கள் பொங்கி எழுந்து போராடத் துவங்கியுள்ளனர். மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கிறார், கவர்னர்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிகளால் இயற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார்! மொத்தத்தில் மாநில அரசை அதிகாரமற்றதாக ஆக்க, மத்திய அரசு கவர்னரை பயன்படுத்துகிறது! இதற்காக தமிழக சட்டமன்றமே கொந்தளித்துள்ளது! உச்ச ...
தனிமனித உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரமாக வாழும் உரிமையை உத்திரவாதப்படுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமையாகும்! ஆனால், பாஜக அரசோ, தனி நபர் சார்ந்த தகவல்கள் மீது அத்துமீறி சட்ட விரோதமாக கைவைக்கும் பாசிசத்தை எப்படி நடைமுறையில் கொண்டுள்ளது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை; இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் தனிமனித உரிமைகளை அவர்களது ரகசியங்களை ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வரும் நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியக்கூடும்! இப்போது நடைமுறையில் ஒருவரை பொருளாதார ரீதியாக முடக்கிவிட அந்த நபரின் ...
உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..? “நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம், பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் ...