தன் வாழ்க்கை நெடுகிலும் பாரதியார் எளிய மனிதர்களோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். உண்மையான பாரதியை நம்மில் பெரும்பாலோர் அறியவில்லை. மறைக்கப்பட்ட பாரதியை தாழ்த்தப்பட்டவர்களோடு அவர் கொண்டிருந்த தோழமையின் மூலம் அறிந்து கொள்ளலாம்; பாரதியார் காற்றைப் போல், நீரைப் போல , நீலவானின் செங்கதிர்போல் அனைவருக்குமானவராய்  வாழ்ந்த மகாகவி. அப்படிப்பட்ட கவியால் தான் காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும், வானும் ,மலையும் எங்கள் கூட்டம் நோக்குமிடமெல்லாம் நாமென்றி வேறில்லை நோக்க, நோக்க களியாட்டமே என எழுத முடியும். 1911 ஆம் ஆண்டு ...

முஸ்லிம்களுக்கான 3.5 % இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தலே அனைவரும் பிரதிநிதித்துவம் தரும். இது வரை திமுக சார்பில் ஒரு முஸ்லீம் கூட  நாடாளுமன்றத்திற்கு அனுப்பட்டதில்லை. விசாரணை சிறைவாசிகளின் நிலைமை விக்கிக்க வைக்கிறது ..இந்த நேர்காணல் முஸ்லிம் சமூகம் பற்றிய ஒரு ஸ்கேன்  ரிப்போர்டாகும்: சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ரியாஸ் அகமது, அப்துர் றஹ்மானின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இடமில்லை என்ற நூலை மொழி பெயர்த்தவர்.  இவர் திருநெல்வேலியில் இருந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த போது, பீட்டர் ...

தமிழகமெங்கும் கறிக்கோழி விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். கோழிக்கறி கிலோ என்ன விலை என நாம் அறிவோம். ஆனால், கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு  தரப்படும் கூலி கிலோவுக்கு ரூ-6.50 பைசா தான்! இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதான அதிர்ச்சி தகவல்கள்; மக்களின் உணவுத் தேவையில்  சிக்கன் எனப்படும் கோழிக்கறிக்கு மிக முக்கியத்துவம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீட்டு விருந்தாகட்டும் ஹோட்டல் விருந்தாகட்டும் கோழிக்கறி என்பது  பலவித முறைகளில் பரிமாறப்படுகிறது. அத்தகைய கோழிக்கறிக்கான கறிக்கோழி வளர்ப்பு சார்ந்து சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் உள்ளனர். ...

இந்திய கல்வித் துறை வரலாற்றுக்கே களங்கமாக ஒரு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கை சார்ந்த பாடத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தி, கல்வித் துறையின் ஜனநாயக கட்டமைப்பை கருவறுக்கும் இந்த மசோதா குறித்த அலசல்; மத்திய அரசு உயர்கல்விக்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாம். அங்கனம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் ...

நண்பர்களே,பொன்னான வாய்ப்பு! போராடிப் பெற்றத் தீர்ப்பு! மண்ணாகிப் போனதுவே.. என் சொல்வது..! சாஸ்திரா சனாதனிகள் உச்சநீதிமன்றம் சென்று ஆக்கிரமித்த நிலத்தை அரசுக்கு தரமறுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டனர்! என்ன நடந்தது..? ஏன் இந்தத் தோல்வி? சாஸ்திரா பல்கலைக் கழகம் 1984 ல் தஞ்சையில் ஆக்கிரமித்த 58.17 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியான 31 ஏக்கர் நிலத்தை நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2018 ல் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அந்த தீர்ப்பை ...

உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகார மிரட்டல்களுக்கு அடங்க மறுக்கும் நாடாக ஈரான் இருக்கிறது. இதனால் ஈரானுக்கு பல பொருளாதாரத் தடைகளை உருவாக்கியதோடு, அங்கு அரசுக்கு எதிரானவர்களை உருவாக்கி பண உதவியும் தந்து குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது அமெரிக்கா; ஒரு அலசல்; திட்டமிட்டு வெனிசுலாவிற்குள் நுழைந்து அதன் அதிபரை கைது செய்து அந்த நாட்டை அமெரிக்க ராணுவம் கொண்டு முற்றுகையிட்டதையடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை அகில உலகமும் அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டிருக்கும் நிலையில், ...

எப்படிப் பார்த்தாலும் அதிகாரப் பரவல் என்பதிலே தான் ஜனநாயகத்தின் ஆன்மாவே உள்ளது. அதிகார குவிப்பு என்பது மத்தியில் இருப்பதை எதிர்க்கும் போது மாநிலத்திற்கு மட்டும்  விதி விலக்கா என்ன? கூட்டணி ஆட்சி என்பதை எடுத்த எடுப்பிலேயே எதிர்க்காமல் அதன் சாதக அம்சங்களை பார்க்கலாமே; கூட்டணி ஆட்சி பற்றி பேசினால், ”பேராசை பிடித்து கேட்கிறார்கள், கூட்டணிக்கு நெருக்கடி தருகிறார்கள்..” என்று கொச்சையாக கேலி, கிண்டல் செய்யப்படுகிறது. கூட்டணி ஆட்சி முறை அதிகார பரலவலாக்கத்திற்கும், பன்முகத்தன்மை கொண்ட – அனைத்து பிரிவினருக்குமான ஆட்சி உருவாக வகை செய்யும். ...

500 கோடி செலவில் ஜனநாயகன் திரைப்படம் எடுத்துள்ளார்களாம். தன் கடைசி படத்தின் மூலம் தன் அரசியலையும் வெளிப்படுத்தியுள்ள விஜய்க்கு மத்திய அரசின் தணிக்கை துறையால் சோதனை. சோதனையை எதிர்கொள்வதில் தான் சாதனை வெளிப்படும். தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை மண்ணாக்கிக் கொண்டிருக்கும் விஜய்! ஒரு அலசல்; திரைப்படத்தின் வழியே அரசியல் பேச நினைத்தால் ஆள்பவர்கள் அதை லேசில் அனுமதிக்கமாட்டார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்த போது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படி களம் கண்டு ...

இது கனவா? நிஜமா? அல்லது நாடகமா? நம்ப முடியவில்லை. தஞ்சையில் அரசாங்கத்திற்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை 42 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கல்வி வணிகம் நடத்தி வந்த சாஸ்திரா பல்கலைக் கழக சனாதனிகள் சுலபத்தில் விட்டுத் தருவார்களா? பார்ப்பன லாபி பின் வாங்கிப் பாயுமா..? ஒரு அலசல்; தஞ்சை திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா பல்கலைக் கழக ராமச்சந்திர ஐயரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதாம்…! 42 ஆண்டுகளாக தமிழ் நாட்டரசையே திணறடித்து தண்ணி குடிக்க வைத்தவர்களே சாஸ்திரா முதலாளிகள். சனாதனவாதிகளான இவர்கள் சட்டம், நீதி ...

தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீராதாரங்கள் அழிப்பு, நில வளம் பாதிப்பு, விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை தகர்ப்பு..என பல அதிர்ச்சிகள் அரங்கேறி உள்ளன. இதற்கு எதிராக தமிழகம் முழுமையும் தொடர் போராட்டங்கள் வேளாண் குடிகளால் ஆங்காங்கே நாளும், பொழுதும் நிகழ்த்தப்படுவதை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அவற்றை ஆதாரங்களுன் ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கு அந்த ...