காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர்  குலாம் நபி ஆசாத்! தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை! பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா? காங்கிரஸ்காரர்களே  பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடித குண்டை வீசியுள்ளார். ...

காங்கிரஸ்  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..?  2024 ல் மீண்டும்  படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா? எட்டு ஆண்டுகால  மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை ...