பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லையாம்! ஆனால், பேசப்படவேவில்லை கைதான இளைஞர்களின் குரல்கள்! வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சிறுகுறுந்தொழில்கள் நசிவு, அரசின் சர்வாதிகார போக்கு, ஊழல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடிய இந்த இளைஞர்கள் யார்? பின்னணி என்ன? இதோ முழு விபரங்கள்: இந்த இளைஞர்கள் கவனப்படுத்தியுள்ள முக்கிய பிரச்சினை அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது! அப்படியே கிடைத்தாலும் அதில் முறைகேடுகள்! லஞ்சம் கொடுத்து வேலை பெறும் கொடுமை! அரசின் தொழில் கொள்கையால் சிறுகுறுந்தொழில்கள் நசிவு! கார்ப்பரேட்களுக்கு சலுகை! விவசாயத்தை அழிக்கும் அரசின் சட்ட திட்டங்கள், தனியார் ...

‘இந்திய நாட்டில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கானதல்ல’ என்பதை இந்த பிரச்சினையை இவர்கள் அணுகிய விதம் வெளிப்படுத்திவிட்டது! மக்களின் விரக்தி  மற்றும் ஏமாற்றங்களை பார்லிமெண்டில் எதிரொளிக்க இந்த இளைஞர்கள் செய்த அதிரடி வழிமுறை எல்லா வகையிலும் பயனற்றுவிட்டது; மக்களைவையில் மக்களின் அதிருப்திக் குரலை, விரக்தியை  நடக்கின்ற ஆட்சியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு அதிரடிச் செயலை செய்துள்ள இந்த இளைஞர்களின் செயல் நமக்கு ஏற்புடையதாக இல்லை எனினும், தங்கள் உயிரையும், எதிர்காலத்தையும் பணயம் வைத்து மக்கள் குரலை ஒலித்துள்ளனர் என்பதே நிதர்சனம்! ஆனால், ...