மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டங்கள்.. ஆகிய எதுவும், யாரும் நெருங்க முடியாத சர்வ அதிகாரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள், அவர்களுக்கு பழுதடைந்தால் வீசி எறிந்து விடத்தக்க நடமாடும் இயந்திரங்களே..! தொழில் தொடங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தந்து வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் வழங்கி, அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட பலவும் செய்து தந்து ஊக்குவிக்கின்றன மத்திய மாநில அரசாங்கங்கள்! ஆனால், இப்படி தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளைக் கொண்டு நம் நாட்டிற்குள்ளேயே ஒரு ...