காந்திக்கு இணையாக எண்ணத்தக்கவர் ஜே.சி.குமரப்பா! இந்தியாவின் ஆன்மாவை பூரணமாக உணர்ந்தவர். இந்தியப் பொருளாதாரம் குறித்த குமரப்பாவின் காந்தியக் கண்ணோட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், இன்று நம் நாட்டில் வறுமைக்கே வழியில்லை. சுரண்டலுக்கு வாய்ப்பில்லை. அனைவருக்கும் உரிய கண்ணியமான வாழ்க்கைக்கான தாய்மை பொருளாதாரத்தை அடையாளப் படுத்தியவர் குமரப்பா! ”ஆன்மாவின் லட்சியங்களுக்கு உதவுவதற்கானதாக உடலை கருதுவதா? உடல் ஆதிக்கத்தில் ஆன்மாவையே இல்லாமலாக்குவதா? நம் பொருளாதாரம் எந்த திசை வழியில் செல்ல வேண்டும்” என குமரப்பா கேள்வி எழுப்பினார்? இன்று ஆன்மாவைத் தொலைத்துவிட்டு பொருளியலைத் தேடி சுயஅழிவுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ...

93 வயது வரை துடிப்புள்ள காந்திய செயற்பாட்டாளாராக வாழ்ந்து, காந்தியக் கொள்கைகளைத் தன் பாட்டாலும்,பேச்சாலும், கலை நயத்தாலும்,விளையாட்டுகளாலும் தேசம் எங்கும் பரப்பியவர் சுப்பாராவ்! சுமார் 400 சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் சரணடையக் காரணமானவர்! சுமார் 80 ஆண்டுகள் காந்தியப் பணியை கர்மமே கண்ணாகச் செய்து  மறைந்த இந்த மகத்தான காந்தியவாதியின் வாழ்க்கை நமக்கு பல ஆழமான செய்திகளைச் சொல்கிறது..! தமிழகத்தில் சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுப்பாராவ் பிறந்தது பெங்களுரில்! செயல்பட்டது தேசம் தழுவிய அளவில்! மத்திய பிரதேசத்தில் காந்தி ஆஸ்ரமம் வைத்திருந்தார். ராஜஸ்தானில்  உடல் ...

சுற்றுச் சூழலுக்காக போராடி வருகின்ற இன்றைய இந்திய இளம் தலைமுறையினருக்கு எல்லாம் இவரே முன்னோடி! ஆறு, மலை,காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கும் காந்தியத்தின் கடைசி எச்சமாக நம்மிடையே வாழ்ந்த இந்த காந்தியவாதி கடந்து வந்த பாதை கரடுமுரடானது! உறுதியானது! நாம் பின்பற்றுவதற்கான நிறைய செய்திகளைக் கொண்டிருப்பது…! வனங்களின் பாதுகாப்பிற்காக ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்காக உலகளவில் போற்றப்படும் இந்தியாவின் ஆகப்பெரிய சுற்றுச்சூழல் போராளி சுந்தர்லால் பகுகுணா அவர்கள் கொரோனா நுண் கிருமி பேருந்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலன் அளிக்காது இன்று இயற்கை எய்தினார் என்னும் ...