நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பிறகு, 250 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தினோம்! அதன் பிறகு காந்திய சீடர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, தற்போது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளால் மீண்டும் அடிமை அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளது! அதற்கு தோதாக நசுக்கப்படுவதே மாநில உரிமைகள்! மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமைகளில் தலையிட்டு ஜி.எஸ்.டி எனக் கொண்டு வந்தார்கள்! மாநில வருவாயை அபகரித்துக் கொண்டு நம்மை மத்திய ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்கிறார்கள்! மாநிலங்களின் வசமிருந்த கல்வி அதிகாரத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியே புதியகல்விக் கொள்கையும், நீட் தேர்வு ...