நாயைக் குளிப்பாட்டி, அலங்கரித்து நடு வீட்டில் வைத்தாலும் அது தன் புத்தியைத் தான் காட்டுமே அல்லாது வேறெதையும் அதனிடம் எதிர்பார்க்க முடியாது. நாமே நம் கொள்கையை மீறியதால் தான் இன்றைக்கு தேவையில்லாத அவமானங்களை சுமக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் அலுத்துக் கொள்கிறார்கள்! ”சமூகத்தில் அனைவருக்கும் மேலானவன் பிராமணன், நாட்டை ஆள்வதற்கும், காப்பதற்கும் தகுதியானவன் ஷத்திரியன், வியாபாரத்தில் யாரையும் விஞ்சியவன் வைசியன், உழைப்பைக் கொண்டு உற்பத்தி பொருட்களை உருவாக்கித் தந்து சமூகத்தை உய்விப்பவன் சூத்திரன். இது ஆயிரம் காலத்து சூத்திரம். அந்தந்த சமூகத்தின் இயல்புபடி தான் ...

கடைசி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளன்று விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிப் படிமம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாவதே ஒரு நுட்பமான தேர்தல் பிரச்சார உத்தி தான். ஆனால், மதவெறி மனிதன், மனித நேயத்தின் உச்சமான ஆன்மீகத் துறவியைத் தன் அரசியல் பகடைக் காயாக்குவதா? தமிழ் நாட்டின் தென்கோடி ஊரான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தற்போது கலவரப்பட்டு கிடக்கிறது. பாதுகாப்புக் கெடுபிடிகளால் பொதுமக்களின் நடமாட்டங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காபந்து சர்க்காரின் பிரதமராக ...

கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணப்படுவதாக பாஜக அரசு பொய்யான புள்ளி விபரங்களைத் தந்து கொண்டுள்ளது! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! உண்மையில், அதிகமாக கடன்பட்டு, இந்தியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது! இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 13, 2022 அன்று, ”அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதைத் தடுப்பது என்ன?” என்று தொழில்துறையினரை கேள்வி கேட்டார்.  இது, முதலீடுகளை கவர்வதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்! முதலீட்டாளர்களுக்கு ...

மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...