தமிழகத்தின் தலை சிறந்த ஓவியராக ஜொலித்திருக்க வேண்டியவர் எப்படி தனக்குள் இருக்கும் நடிப்பு தாகத்தை கண்டறிகிறார், சினிமாவிற்குள் நுழைகிறார் என்பதையும், தன் சமகால சாதனை ஓவிய பிரம்மாக்கள் பலரையும் அறியத் தருகிறார்…! சிவகுமாரை நடிகனாக தமிழகம் நன்கறியும், சிறந்த சொற்பொழிவாளராகவும் தற்போது அறிந்து கொண்டுள்ளது! ஆனால், அடிப்படையில் அவர் ஒரு அற்புதமான ஓவியக் கலைஞர் என்பது மட்டுமல்ல, அதில் சாதனை படைத்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். ஆனால், இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் தன் சமகால ஓவியர்கள் குறித்தும், தனக்கு முந்தைய முன்னோடிகள் ...

கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர். ...