வாக்கு எண்ணிக்கையை சொல்லுவதில் குளறுபடி! வன்முறையை தூண்டிவிடும் மோடியை கண்டிக்க பயம், எதிர்கட்சிகளை மிரட்டி பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி..என இந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம், தேறாத ஆணையமாக காட்சியளிக்கிறது. ‘பத்துமுறை கூட பிரதமராவேன்..’ என கதையளக்கும் மோடி..! முதல் நான்கு கட்ட வாக்கு பதிவுகளில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த தேர்தல்களின் வாக்காளர்கள் எத்தனை பேர்?, எத்தனை பேர் வாக்கு அளித்தார்கள்? என்ற எண்ணிக்கையை வெளியிடாமல் வாக்கு சதவிகிதத்தை கூட்டியும், மாற்றியும் குளறுபடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய மூடு ...

கிராமப்புற உள்ளாட்சிகளில் கிராம சபை நடத்தி, மக்களின் பங்கேற்புடன் திட்டங்கள் செயல்படுத்துவது போல நகராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதிபடுத்த வார்டு சபை கூட்டங்களை நடத்த மறுப்பது ஏன்? உள்ளாட்சியை ஏன் வலுப்படுத்துவதில்லை?  Voice of People ஒருங்கிணைப்பாளர் சாரு கோவிந்தன் பேட்டி;  உள்ளாட்சிகள் மக்களின் பங்கேற்புடன் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக செயல்பட அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு கிராம சபை நடத்துவது போல, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பகுதி சபை, வார்டு சபை உள்ளன.  ஆனால், இவை சரி வர நடைபெறுவதில்லை. ...

தேர்தல் பத்திர ஊழலையே விஞ்சியது ‘பி.எம்.கேர்ஸ்’. தேர்தல் பத்திரங்கள் வழியே மூலம் பாஜக பெற்றது 8252 கோடிகள்! ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் சுமார் ரூ12,700 கோடிகளை மோடி பெற்றுள்ளார்! இந்திய வரலாற்றில் பித்தலாட்ட வழிமுறைகளில் ஒரு பிரதமரே பணம் சுருட்டிய பெரு மோசடியின் வரலாற்றை பார்ப்போம்; பி.எம்.கேர்ஸ் எனப் பெயரிட்டு நிதி பல்லாயிரம் கோடிகள் திரட்டப்பட்ட பிறகு, அதில் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லை. இது தனியார் பணம் என்றால், அதற்கு பிரதமர் நிதி எனப் பெயரிடாமல் மோடி நிதி என பெயரிட்டு இருக்க வேண்டும் என்பதே ...

ஊட்டச் சத்திற்கானது என்பதாக ரசாயனங்கள் கலந்த செறிவூட்டல் அரிசி திட்டத்தில் மத்திய அரசு மோசமாக ‘சொதப்பியுள்ளது என நிதி ஆதியோக்கின் ரகசிய அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. முறையான ஆய்வுகள், திட்டமிடல்கள் இல்லாதது அதிர்ச்சி ரகமாகும்! ஒரு சில கார்ப்பரேட்டுகள் பலனடைய மக்களின் உடல் நலனை பலி தருகிறதா அரசு..? ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான தீர்வுகளை, தானியங்களைச் செறிவூட்டுவதன் மூலமாக மட்டும் சரிசெய்துவிட முடியாது. உணவு என்பது இயற்கையின் கொடை! சத்தான உணவுக்கு மண் வளம் தான் முக்கியம்! மண்வளமே சத்தான உணவிற்கான அடிப்படை என்ற கோட்பாட்டை ...

சமீபகாலமாக பெரியாரிஸ்டுகளும், திராவிடக் கொள்கையாளர்களும் திமுகவில் தனிமைப்பட்டு வருகின்றனர். ஆட்சித் தலைமை பெரியாரிடம் இருந்து  வெகு தூரம் விலகிச் செல்லும் சூழலில் – திமுக தலைமை தார்மீகத் தகுதியை இழந்து நிற்கும் நிலையில் – ஆ.ராசா பேசியுள்ளதன் பின்னணி தான் என்ன..? நாத்திகம் என்பதும், பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பதும், வெறும் பொழுது போக்கிற்காகப் பேசப்படும் திண்ணை பேச்சு தானா? ஆட்சியாளரான பிறகும் பொறுப்பாக செயல்பட வேண்டிய விவகாரத்தில் எல்லாம் கோட்டை விட்டுவிட்டு, பழைய பல்லவியான ”மனு தர்மத்தில் எட்டாவது அத்தியாயத்தில், 415 வது ...

மூத்த பத்திரிகையாளர் மணா எழுதியத் தமிழகத் தடங்கள் எனும் இந்த நூல், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சமூக கலைக் களஞ்சியம் என்றால் மிகையல்ல! நாம் வாழும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய கலாச்சாரத் தடயங்கள், வரலாற்றுக் குறியீடுகள், மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்ந்த சுவடுகள், சமூக அடையாளங்கள்..  குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய – ஆனால், தெரியாமலே கடந்து போகின்ற – நுட்பமான செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் மணா! முதல் கட்டுரை சாம்பல் நத்தம் தொடங்கி 75வது கட்டுரை கீழடி முடிய அனேக அரிய ...

நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...

ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம்  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு. இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த  பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட ...

மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன! நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன! ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது ...

சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள்,  இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...