ஊட்டச் சத்திற்கானது என்பதாக ரசாயனங்கள் கலந்த செறிவூட்டல் அரிசி திட்டத்தில் மத்திய அரசு மோசமாக ‘சொதப்பியுள்ளது என நிதி ஆதியோக்கின் ரகசிய அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. முறையான ஆய்வுகள், திட்டமிடல்கள் இல்லாதது அதிர்ச்சி ரகமாகும்! ஒரு சில கார்ப்பரேட்டுகள் பலனடைய மக்களின் உடல் நலனை பலி தருகிறதா அரசு..? ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான தீர்வுகளை, தானியங்களைச் செறிவூட்டுவதன் மூலமாக மட்டும் சரிசெய்துவிட முடியாது. உணவு என்பது இயற்கையின் கொடை! சத்தான உணவுக்கு மண் வளம் தான் முக்கியம்! மண்வளமே சத்தான உணவிற்கான அடிப்படை என்ற கோட்பாட்டை ...
சமீபகாலமாக பெரியாரிஸ்டுகளும், திராவிடக் கொள்கையாளர்களும் திமுகவில் தனிமைப்பட்டு வருகின்றனர். ஆட்சித் தலைமை பெரியாரிடம் இருந்து வெகு தூரம் விலகிச் செல்லும் சூழலில் – திமுக தலைமை தார்மீகத் தகுதியை இழந்து நிற்கும் நிலையில் – ஆ.ராசா பேசியுள்ளதன் பின்னணி தான் என்ன..? நாத்திகம் என்பதும், பிராமண ஆதிக்க எதிர்ப்பு என்பதும், வெறும் பொழுது போக்கிற்காகப் பேசப்படும் திண்ணை பேச்சு தானா? ஆட்சியாளரான பிறகும் பொறுப்பாக செயல்பட வேண்டிய விவகாரத்தில் எல்லாம் கோட்டை விட்டுவிட்டு, பழைய பல்லவியான ”மனு தர்மத்தில் எட்டாவது அத்தியாயத்தில், 415 வது ...
மூத்த பத்திரிகையாளர் மணா எழுதியத் தமிழகத் தடங்கள் எனும் இந்த நூல், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சமூக கலைக் களஞ்சியம் என்றால் மிகையல்ல! நாம் வாழும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய கலாச்சாரத் தடயங்கள், வரலாற்றுக் குறியீடுகள், மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்ந்த சுவடுகள், சமூக அடையாளங்கள்.. குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய – ஆனால், தெரியாமலே கடந்து போகின்ற – நுட்பமான செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் மணா! முதல் கட்டுரை சாம்பல் நத்தம் தொடங்கி 75வது கட்டுரை கீழடி முடிய அனேக அரிய ...
நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...
ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு. இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட ...
மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன! நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன! ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது ...
சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள், இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...
உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..? திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன. அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…! உண்மை தான்! மாற்றுக் கருத்தில்லை. காரிருள் சூழ்ந்த தமிழக அரசியல் களத்தில் ஆங்காங்கே ஏற்றப்பட்டு வரும் மெழுகுவர்த்திகளே பெரும் நம்பிக்கையை விதைப்பனவாக உள்ளன. தோற்றுப் ...
அர்னாபின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவுமே புதிதல்ல! ஆனால், அரசியல் தரகராக அல்ல, ஆட்சியின் ஒர் அங்கமாகவே – பல சதி திட்டங்களின் பங்குதாராக – அர்னாப் இருந்துள்ளார் என்ற புரிதலையே பார்தோ தாஸ் குப்தாவுடனான அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல்கள் நிருபிக்கின்றன…! தேசபக்தியின் பெயரால் எந்த பஞ்சமா பாதங்களையும் செய்யக் கூடிய லைசென்ஸை பாஜக அரசு அர்னாப் கோஸ்வாமிக்கு தந்துள்ளது என்பதை என்னைப் போல ஊடகத்தில் இருக்கும் ஒரு சிலர் ஓயாமல் கூறி வந்ததற்கு சற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன ...
இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்! ‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி,, இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்!’ என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது! என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் ...