அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி ! காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற ...