உலகின் சகஜ நிலைக்கு வேட்டு வைக்கும் வண்ணம் அமெரிக்கா நிலை நிறுத்த விரும்பும் ஆதிக்க மனோ பாவத்தால், சகல நாடுகளும் பிரச்சினையை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது.  இறுதி வரை போராடும் மன வலிமையுடன் ஈரான் செயல்படுகிறது. போர் நிறுத்தம் என்னாகும்? அமெரிக்கா இன்னும் அத்து மீறுமா? அமைதியாகுமா? ஏப்ரல் 7-ல் அறிவிக்கப்பட்ட இருவார கால போர் நிறுத்தம் இன்று (ஏப்ரல்-17) முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை பாக்கித்தானில் நடைபெறவில்லை. பேச்சுவார்தைகளில் உடன்பாடு ஏற்பட்டால் தான் முற்றுகை விலக்கப்படும் என்றும், உடன்பாட்டிற்கு ஈரான் ...

உலகிலேயே சக்தி வாய்ந்த யூதர்களின் தயவின்றி அமெரிக்காவில் யாரும் வெற்றிகரமான அரசியல்வாதியாகவோ, சக்சஸ்புல் தொழில் அதிபராகவோ, புகழ் பெற்ற கலைஞராகவோ வலம் வர முடியாது. பாலஸ்தீனர்களுக்காக பரிதாபப்படுபவர்கள் அரசியல்வாதியோ, ஆசிரியரோ, மாணவரோ யாராக இருந்தாலும் யூத லாபி விட்டுவைக்காது;தொலைத்து விடும்; ஆண்டு தோறும் சுமார் 3 பில்லியன் டாலர் (சுமார் 35,000 கோடி ) பணத்தை அமெரிக்கா இஸ்ரேல் நாட்டிற்கு கொடுத்து உதவுகிறது. அதுவும் மொத்தமாக ஒவ்வொரு ஆண்டு துவக்கத்தில் பாசமுள்ள மகன் பெற்றோருக்கு மாதந்தவறாமல் பணம் அனுப்புவதை போன்று! என்ன காரணம்? 1948ல் ...

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானை தூது அனுப்பி தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு பின்னணியில் இத்தனை காரணங்களா? ”தற்போது லெபனானில் குண்டு போடும் இஸ்ரேலை அடக்கி வைத்த பிறகு பேசலாம் வா” என ஈரான் சொன்னது எதனால்? அமைதி தொடருமா? அமெரிக்கா திருந்துமா? “இன்று இரவுடன் ஒரு நாகரீகமே அழிந்து விடும், அது ஒருபோதும் இனி மேல் மீண்டு வராது” என கெடுவிதித்த டொனால்டு டிரம்ப், ஏப்ரல் 7 , இந்திய நேரப்படி புதன் காலை 5 மணிக்கு  ஈரானின் பத்து அம்ச திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை ...

பயங்கரவாத நாடாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் இன்று உலக அமைதிக்கு அதி முக்கிய பங்காற்றும் சூழல் எப்படி உருவானது…? இந்தியாவுக்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமை எப்படி கை நழுவியது? வல்லரசான அமெரிக்காவை சின்னஞ்சிறு நாடான ஈரான் எப்படி எதிர்கொண்டது? ஒரு அலசல்; உலகின் மிகப் பழமை வாய்ந்த பாரம்பரியத்திற்கு சொந்தமான நாடு ஈரான். ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடிமக்கள்’ என தமிழர்களைப் போலவே ஈரானியர்களும் கருதப்படுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்த நாட்டை ‘பாரசீகம்’ என அழைத்தனர். கலை, இலக்கியம், நாகரீகம் அனைத்திலும் ...

வரம்பு மீறிய வன்முறை பேச்சுக்கள், அதிரடி சொற் பிரயோகங்கள், கேட்கவே காது கூசும் இழிமொழிகள்,  நினைத்துப் பார்க்கவே முடியாத  கொடூரமான சொல்லாடல்கள், தன்னை அச்சமற்ற  வீரராக  காட்டும் முனைப்பு .. போன்றவற்றின் வழி  அதிரடி செய்யும் அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் நோக்கம் தான் என்ன?; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு முந்தைய அதிபர்கள் பேசிய விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பேசுகிறார். அவரது தனித்துவமான மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய பாணி, அவரது அரசியல் ஆதரவுத் தளத்தைக் கவர்வதில் ஒரு முக்கியப் பங்கு ...

எதிர்பார்க்கவில்லை டிரம்ப். இத்தனை வீரியமாக ஈரான் திருப்பித் தாக்குமென! இது முதல் அதிர்ச்சியென்றால், இந்தப் போர் அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு அமெரிக்கா மீது பெரும் அவ நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் டிரம்பை கைவிட்டுவிட்டன. சொந்த நாட்டிலும் எதிர்ப்புக்கு மேல் எதிர்ப்பு; அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தன் சொந்த நாட்டில் ஈரான் மீதான போரால் பெரும் இக்கட்டிற்கு ஆளாகி வருகிறார். ஈரான் மீதான போரால் அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருவதால் அமெரிக்க மக்களின் கோபம் டிரம்ப் மீது திரும்பி உள்ளது ...

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வருமா? ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் தயவை நாடிடும் இந்தியா, ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்காமல் கனத்த மெளனம் சாதிக்கிறது. உலக நாடுகளுடனான உறவில் சமநிலையை பேணாமல் அமெரிக்காவை சார்ந்து மட்டுமே  இந்தியா  இருப்பது சாத்தியமாகுமா ஒரு அலசல்; இந்தியாஉலக மக்கள் எது நடக்க கூடாது நினைத்தார்களோ, அந்தப் போர் நடந்து கொண்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த கொலை வெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது. எது விரைவில் நடந்து முடிந்து விடும் என ...

இந்திய அரசின் அழைப்பில் வந்த ஈரான் கடற்படை வீரர்களை நமது கடற்பகுதிக்குள் வந்து கொலை செய்த அமெரிக்காவை வேடிக்கை பார்த்த இந்தியா! இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி எந்தெந்த நாட்டுடன் இருக்கலாம், இருக்க கூடாது என்பதை தீர்மானிக்கும் அமெரிக்கா! சர்வதேச உறவுகளில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாஜக அரசு; இந்தியாவின் அழைப்பில் விசாகபட்டணத்தின் சர்வதேச கடற்படை ஆய்வு மாநாட்டில் 18 நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாடு பிப்ரவரி 15 தொடங்கி 25 வரை பத்து நாட்கள் நடந்தன. கலந்து கொண்ட பதினெட்டு நாடுகளில் ஈரானும் ...

மேற்கத்திய ஊடகங்களும்,  இந்திய கார்ப்பரேட் ஊடகங்களும் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் குண்டு மழை பொழிந்து, பேரழிவை உருவாக்கி வரும் நிலையில், தந்திரமாக ஒரு கருத்தாக்கத்தை கற்பித்து, நடைபெற்று வரும் கொடூர தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டுகிறார்கள்; கருங்காலிகளை அடையாளம் காண்போம்; ஈரான்  இஸ்லாமிய பழமைவாத நாடு. அதன்  ஆட்சியாளர்கள் பெண்களை ஒடுக்குவது உள்ளிட்ட பிற்போக்கு கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தனிமனித சுதந்திரத்திற்கு ஆதரவான குரல்களை ஒடுக்கினர்…என்பதோடு ஆயிரக்கணக்கில்  உள் நாட்டில் மனிதப் படு கொலைகளை நடத்தினர்.. என்பதையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துச் சொல்லி, அங்கு பாதிக்கப்பட்ட ...

பயங்கரவாத நாடான இஸ்ரேலுக்கு துணை போவது, அமெரிக்க அதிபர் டிரம்பின் கருணைக்கு ஏங்குவது, பாலஸ்தீனப் படுகொலைகளுக்கு மெளனம் சாதிப்பது, அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்திற்கு இந்தியாவை பலி கடா ஆக்குவது என மோடியின் திருவிளையாடல் திகைக்க வைக்கின்றன….! “நாட்டு நலன்” என்பது என்ன என்று மோடிக்கு புரியவில்லையோ..? என எண்ணும்படி, பிரதமரின் சமீப நகர்வுகளும், முன்னேற்பாடுகளும் உள்ளன..! இரண்டாம் முறை டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தில் டிரம்பை சந்தித்து , இந்தியா, 500 பில்லியன் டாலர் பெருமான அமெரிக்க பொருட்களை இறக்குமதி ...