அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? நியாயம் யார் பக்கம் உள்ளது. எலான் மஸ்க்கின் புதிய கட்சிக்கு அமெரிக்காவில் வரவேற்பு இருக்கிறதா? எலான்மஸ்க்கின் நோக்கம் மக்கள் நலன் சம்பந்தப்பட்டதா? உலகின் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வரும் டொனால்டு டிரம்ப்புடன் மோதுவதற்கு உலகின் மிகப் பெரிய பணக்கார்ர் மஸ்க் தயாராகி விட்டார் . அமெரிக்க அரசியலரங்கில் நிதம் ஒன்று கூறும் டிரம்பை மீண்டும் அமெரிக்க அதிபராக்க முனைந்து செயல்பட்ட உலகின் மிகப்பெரிய பணக்காரர் மஸ்க் , ...
இந்தியாவிற்கு ஆபத்து காலங்களில் உற்றதுணையாகத் திகழ்ந்தது, வர்த்தக ரீதியாக இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் அழித்தொழிக்கும் போது, மோடி காட்டிய மெளனம் ஆபத்தானது. இஸ்ரேல், அமெரிக்க பாசம் இந்தியாவிற்கு விரும்பத்தாகாத விளைவுகளைத் தரலாம்; ஈரான் மீது ஜூன் 13 அன்று தாக்குதல் தொடுத்த இஸ்ரேலை வெள்ளையர்கள் ஆளும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கண்டித்தன. குளோபல் சௌத் எனப்படும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளும் இதை கண்டித்தன. இதற்கு ஒரே விதிவிலக்காக இந்தியா (மோடி அரசு) இருந்தது. சர்வதேச நீதிமன்றம் ...
எத்தகைய மண்டியிடாத மாவீரம்! எத்துணை நெஞ்சுரம்! வரலாற்றில் அமெரிக்காவையே அலறவிட்ட ஆண்மை ஈரானைத் தவிர வேறு யாருக்கு இருந்தது…? சுற்றிலும் பகை மேகங்கள் படர்ந்து வந்த போதிலும், சுட்டெரிக்கும் கதிரவனின் ஒளிவீச்சை போல சுழன்று களமாடி ஈரான் சாதித்துள்ள வெற்றியை அலசுகிறது இந்தக் கட்டுரை; ‘ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும்’ என அயதுல்லா அலி கமேனி (86) அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டதானது உலக அளவில் சுய மரியாதையை நேசிக்கிற, ...
டிரம்ப் ஆழந்தெரியாமல் காலை விடுகிறார். ஈராக், லிபியா, சிறியாவைத் தொடர்ந்து ஈரானைத் அழிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதே சமயம் இஸ்ரேலின் அடியாளாக அமெரிக்கா போரில் இறங்கினால், அது மேற்கு ஆசியப் பகுதியை மட்டும் பாதிக்காது, உலகம் முழுவதையுமே பாதிப்புக்கு உள்ளாக்கும்; இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மீது ஜூன் -13 ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தி ஈரானின் ராணுவ தலைமை தளபதி மற்றும் ஆறு அணு விஞ்ஞானிகளை கொன்று இன்றுடன் ஒரு வாரமாகிறது. அமெரிக்காவுடன் ஈரான் அணுசக்தி பயன்பாடு குறித்து பேச்சு வார்த்தை ...
இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதி தீவிர மோதல்கள் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எல்லா வரம்புகளையும் கடந்து, கொடூரமான வகையில் அத்துமீறல்களை அரங்கேற்றி வருகிறது இஸ்ரேல். பொறுத்துப் பார்த்த ஈரான் தற்போது பொங்கி எழுந்துள்ளது. இந்தியா இஸ்ரேலை ஆதரித்து தீராப்பழிக்கு ஆளாகிறது; உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ஒரு பயங்கரவாத நாடாக இஸ்ரேல் செயல்பட்டுக் கொண்டுள்ளது. யாருமே தன்னை தட்டிக் கேட்கக் கூடாது, கேட்டால், விளைவுகள் பயங்கரமானதாய் இருக்கும் என சவடால்விட்ட இஸ்ரேலை ஈரான் பல முறை எச்சரித்துப் பார்த்தும் பயனில்லை. காசாவில் ...
இஸ்ரேல் – பாலஸ்தீன போர்களத்தில் உண்மைகளை உலகிற்கு வெளிக் கொணரும் பத்திரிகையாளர்களை கொல்வதை ஒரு போர் வீயூகமாகவே செய்கிறது இஸ்ரேல். போர்க் களங்களில் செய்தியாளர்களை தாக்கக் கூடாது என்ற ஜெனீவா தீர்மானத்தை துச்சமாக கருதி கொல்லப்படுகிறார்கள் ஊடகவியாளர்கள்: பாலஸ்தீனத்தில், குறிப்பாக அதன் காஸா பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு நடத்தி வரும் தாக்குதல்களில் இது வரையில் கொல்லப்பட்டவர்கள், காஸா சுகாதார அமைச்சக அறிக்கை, ஐ.நா. மனித உரிமை அமைப்புகளிள் தரும் தகவல்களின்படி, ஏறக்குறைய 54,000 பேர். அவர்களில் குழந்தைகள் கிட்டத்தட்ட 18,000 ...
”இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மிக முக்கிய காரணம் வர்த்தகம்” என்றார், அமெரிக்க அதிபர் டிரம்ப். வர்த்தகம் என்றால்.., மிகக் குறிப்பாக ஆயுத வர்த்தகம்! இந்த இரு நாடுகளுக்கான மோதலில் ராணுவ விமானங்கள், ஏவுகணைகள் சம்பந்தப்பட்ட வர்த்தகம் போர் நிறுத்ததில் செலுத்திய ஆதிக்கம் என்ன?; இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற ஆயுத மோதலுக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதில் இருநாட்டு மக்களுக்கும் உலக ஜனநாயகச் சக்திகளுக்கும் மகிழ்ச்சி. யார் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்? எப்படி மோதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ...
அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, ...
மூர்க்கமானதோர் போருக்கு நீண்ட காலமாகவே பாகிஸ்தானை, சீனா தயார்படுத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் முழுக்கவே சீனாவை நம்பியே இந்தப் போரில் களம் கண்டுள்ளது. ஆக, இந்தியா இந்தப் புதிய சவாலை சர்வதேச ரீதியிலான கண்ணோட்டத்துடன் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது ; இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலில் இந்தியா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நவீன ராணுவ விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொள் முதல் செய்து போரிடுகையில் , பாகிஸ்தானோ, சீனாவிடமிருந்து நவீன இராணுவ தொழில்நுட்ப ...
இந்தியா – பாகிஸ்தான் இடையில் உண்மையிலேயே போர் ஆரம்பித்து விட்டது! திகில் தரும் போர் செய்திகளும், காட்சிப் பதிவுகளும் வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தின் சாட்சியாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன…! இதனால் இரு தரப்பிலும் ஏற்படும் இழப்புகள் சொல்லி மாளாது..; பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவை தாக்கிவிட்டு பாகிஸ்தான் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள் என்பதை இந்திய உளவுத் துறை அறிந்து வைத்திருந்த வகையில், தற்போது அவர்களின் ...