மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு பிறகு, இஸ்ரேல் அறிவித்துள்ளது போர் நிறுத்தமா? ஹமாசை அழித்து, ஹிஸ்புல்லாவை நிர்மூலமாக்காமல் போரை நிறுத்த மாட்டோம் என கூறிய இஸ்ரேல் போரை நிறுத்தியுள்ளது உண்மையா? தற்காலிகமானதா? இஸ்ரேலின் குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதா..? போர் நிறுத்ததின் பின்னணி என்ன..? அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் நீண்ட காலமாக இந்த சமரச பேச்சு வார்த்தைகளை நடத்தினாலும், இஸ்ரேல் இதுவரை ‘கழுவிய மீனில் நழுவிய மீனாகவே காலங் கடத்திய இஸ்ரேல், போரை, படு கொலையை நீட்டித்து வந்தது. ஆனால், அறிவித்த குறிக்கோள் நிறைவேறாமல் போர் ...
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளுமே இஸ்லாம் மத நம்பிக்கை கொண்ட நாடுகளாக இருந்தாலும் பெரும் பகை பாராட்டுவது ஏன்? இதன் பின்னணி என்ன? பாகிஸ்தான் தாலிபானை சமாளிக்குமா? இல்லை, சரணடையுமா? இதில் வெல்லப் போவது யார்..? பாகிஸ்தானுடன் மோதிக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு தங்கள் அரசுக்கு ஒரு எச்சரிக்கை தந்துள்ளது. இனி எல்லையில் மட்டும் ராணுவத்துடன் நாங்கள் மோதல் போக்கை நடத்த மாட்டோம். அதையும் தாண்டி பாகிஸ்தானில் உள்ள நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். குறிப்பாக ...
தென் கொரிய அரசியல் சட்டம் அதன் அதிபருக்கு குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இதன் மூலம் ஆட்சிக்கு வந்த அதிபர்கள் சர்வாதிகாரிகளாகிறார்கள்! முந்தைய அதிபரை போலவே தற்போதைய அதிபரும் மக்கள் கிளர்ச்சியால் தூக்கி எறியப்பட்டார்; முழு விபரம்; நாற்பது ஆண்டுகளாக ராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டு ஜனநாயகத் தேர்தல்களின் மூலம் ஆட்சி செய்யத் தொடங்கிய தென் கொரியா, கடந்த டிசம்பர் 3 தேதி அதிபர் யூன் சுக் யோல் மீண்டும் ராணுவ ஆட்சியை (மார்ஷல் லா) அறிவித்த போது ...
ஐந்து லட்சம் மக்களை பலி கொடுத்து, ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் அகதிகளாகிய பிறகு கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி சிரியா பெற்றுள்ள சுதந்திரம், இஸ்ரேல்- அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்ட போராளிகள் கைக்குள் போனதா? செக்யூலரிச ஆட்சியை வீழ்த்திய இடத்தில் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் கை ஓங்கியுள்ளதா..? கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக ஒரேகட்சி ஆட்சியில் இருந்த சிரியா நாட்டில் பஷார் அல் அசாத் தலைமையிலான சிறிய அரசு வீழ்த்தப்பட்டுள்ளது, அதிபர் பஷார் அல் அசாத் நாட்டைவி ட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். டிசம்பர் ...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. நம்பிக்கை தரும் புதிய அரசியல் கலாச்சாரமாக, இனப் பாகுபாடு இனி இருக்காது என்ற அனுராவுக்கு தமிழர்கள் பெரும் வரவேற்பு தந்துள்ளனர். முழுமையான அலசல்; இலங்கை சரித்திரத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஆளும் சிங்கள தலைமை கொண்ட கட்சிக்கு தமிழர்கள் பெரும் ...
அமெரிக்கா, சீனா இரண்டிடமும் சம நிலை உறவை பேணத் துணிவின்றி, சர்வதேச அளவில் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது பாஜக அரசு! நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு, நாளைக்கு ஒரு நாடகம் என்பதாக சர்வதேச உறவுகளை பேணுகின்ற மோடியால் சீன உறவு சின்னாபின்னமாகி வருவது குறித்த அலசல்; நரேந்திர மோடி பிரதமரானவுடன் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பன்மடங்கு பெருகி உள்ளதாக பாஜ கட்சியினரும், ஊடகங்களும் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பத் தொடங்கினர். இத்தகைய சித்தரிப்பு , மோடி பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகள் – ...
அமெரிக்காவில் குடியரசு கட்சியின் டிரம்ப் அடைந்துள்ள வெற்றி உலகம் முழுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை அடையாளப்படுத்துகிறது. நரகலான பேச்சுக்கள், நாகரீகம் இல்லாத நடத்தைகள், கார்ப்பரேட்கள் நலனே பிரதானம் என முழங்கிய டிரம்ப்பின் வெற்றி ஒரு அலசல்; இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது பாஜக ஆட்சியில் எப்படி எழுதப்படாத நியதியோ, அது போல டிரம்பின் ஆட்சியில் வெள்ளையரல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது எழுதப்படாத நியதியாக இருக்கும். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற பிற்போக்கு கருத்தியலில் இந்தியாவின் பாஜகவிற்கும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்கும் ...
அமெரிக்க சமூகத்தை இருவேறாக பிளவுபடுத்தும் இந்த தேர்தலின் முடிவுகளை உலகமே அறிய ஆவலாய் உள்ளது. இரு தரப்பின் நிலைபாடுகளையும், கடுமையான போட்டியையும், வெற்றியை கணிக்க முடியாத சூழல்களையும், தோற்க நேர்ந்தால் டிரம்ப் செய்யவுள்ள வன்முறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை; அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி நாள் நவம்பர்-5 ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் 1845 ம் ஆண்டு முதலே நவம்பரின் முதல் செவ்வாய்கிழமை தேர்தல் நாளாக அறியப்பட்டு வருகிறது. நமது நாட்டைப்போல் இந்த தேர்தல் நாள் மாற்றதக்கது அல்ல. ...
இந்தியாவில் பல படுகொலைகளை நிகழ்த்தி பழக்கப்பட்ட கொலை கரங்கள் தற்போது சர்வதேச அளவில் நீள்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மஃபியா கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயைப் பயன்படுத்தி, இந்திய அதிகாரிகள் கொலை செயல்களில் ஈடுபடுவதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டு; தங்கள் 2023 ஜூன், 23 ஆம் தேதி கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா நகர் குருத்வாராவின் முற்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த படுகொலை குறித்து கனடா பிரதமர் ட்ரூடோ – புது தில்லியில் ...
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை எல்லாம் சீர்குலைக்கும் வண்ணம் வெளியுறவு கொள்கைகளில் வில்லங்கத்தை செய்கிறது பாஜக அரசு. பாலஸ்தீன பேரழிவுகளை நிகழ்த்தும் இஸ்ரேலுக்கு 10,000 இந்திய இளைஞர்கள் அனுப்படுகிறார்கள். இஸ்ரேலில் அதானியின் தொழில் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் மரண வியாபாரியான மோடி; சமீபத்தில் ஐ.நா.சபையில் உரையாற்றிய நரேந்திர மோடி தனது தலைமையில் இந்தியா பல்வேறு தளங்களில் முன்னேறியுள்ளது, இந்திய மக்கள் சுபிட்சமாகவும், சுகாதாரத்துடனும் வளருகிறார்கள் என மார் தட்டினார். அந்த செய்தி வந்த மறுநாளே வேலையற்ற இந்திய இளைஞர்கள் இஸ்ரேலில் சென்று வேலை பார்க்க நீண்ட ...