அமெரிக்காவின் பொதுச் சமூகம் எப்படி விழிப்புணர்வுடன் அரசியல் தலைவர்களை அணுகுகிறது என்பதற்கு இந்த பாலியல் குற்றவாளியும், புரோக்கருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் அம்பலப்பட்டதே சாட்சியாகும். சுப்பிரமணியசாமியை தடுக்கலாம், அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தி வருகிறதே! டிரம்ப்பே தப்ப முடியவில்லை. மோடி எம்மாத்திரம்? உலகப் பிரச்சித்தி பெற்ற பாலியல் குற்றவாளியாக தற்போது அறியப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2005-ல் முதன்முறையாக கைதாகும் வரை அகில உலக அளவில் நிதியாளராகவே அறியப்பட்டார். பல மிகப் பெரிய நிறுவனங்களுக்கு நிதி திரட்டி தருவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் ...
உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகார மிரட்டல்களுக்கு அடங்க மறுக்கும் நாடாக ஈரான் இருக்கிறது. இதனால் ஈரானுக்கு பல பொருளாதாரத் தடைகளை உருவாக்கியதோடு, அங்கு அரசுக்கு எதிரானவர்களை உருவாக்கி பண உதவியும் தந்து குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது அமெரிக்கா; ஒரு அலசல்; திட்டமிட்டு வெனிசுலாவிற்குள் நுழைந்து அதன் அதிபரை கைது செய்து அந்த நாட்டை அமெரிக்க ராணுவம் கொண்டு முற்றுகையிட்டதையடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை அகில உலகமும் அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டிருக்கும் நிலையில், ...
தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ ,அமெரிக்கா கடத்தப்பட்டு, அங்கு அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. அத்துடன் வெனிசுலாவின் வளமான எண்ணெய் கிணறுகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுத்து தருவாராம், டிரம்ப்; இதன் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை; எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், வெனிசுலா நாட்டின் கப்பல்களை , படகுகளை தாக்கி அழித்து எண்ணற்றவர்களை கடந்த வாரங்களில் அமெரிக்க படைகள் கொன்றன. போதைப் பொருள் கடத்தும் தீவிரவாத கும்பலின் தலைவர் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ என அபாண்டமாக பொய் குற்றம் ...
பங்களாதேஷின் அரசியல், சமூக தளங்களில் பதற்றம் நிலவுகிறது. ஊழல் ராணி, பல நூறு இளைஞர்களை கொன்று குவித்த கொலையாளி ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவளித்து, தஞ்சம் தந்துள்ள இந்திய ஆட்சியாளர்கள் மீதான கோபம் அங்கு கொளுந்துவிட்டு எரிகிறது. இதில் மேலும் குளிர்காய பார்க்கலாமா, மோடி சர்க்கார்….? டிசம்பர் 12ந்தேதி வங்க தேச மாணவர் தலைவர் ஷரிப் உஸ்மான் ஹாடி டிசம்பர் 18 அன்று சிங்கப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து வங்க தேசத்தில் கிளர்ச்சிகளும் வன்முறையும் மீண்டும் வெடித்தன. ஹாடியின் “கொலையாளிகள்” இன்னும் பிடிபடவில்லை. இந்தச் ...
”உலக வரைபடம் என்று இது வரை உருட்டப்பட்டதெல்லாம் ஒரு உல்டா! ஏமாற்றாதீங்க. நாடுகளின் வரைபட குளறுபடிகளால் எத்தனை சர்சைகள்? உண்மையான வரைபடத்தை எப்போ வரையப் போறீங்க?” என்று ஆப்பிரிக்க நாடுகளின் இயக்கம் அதிரடி காட்டி உள்ளது. வாவ், இது உண்மையா? வரைபடங்களின் வரலாற்றை புரட்டலாம்; ஆம், வரைபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்திருக்கிறது. அதற்கேற்ப ஒவ்வொருவிதமான விதிமீறல்களை அரங்கேற்றி உள்ளனர். அப்படி பிரிட்டிஷார் வரைந்து தந்த வரைபடத்தின் விளைவாகத் தான் இன்று வரை இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – சீனா எல்லை ...
வலிமை பொருந்தியவர்கள் நிலத்தையும், வளத்தையும் மட்டுமல்ல, வரலாற்றையும் ஆக்கிரமித்து தங்களுக்கானதாக ஆக்கிவிடுகிறார்கள். குடியேறிகளின் தேசமான அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிகள் தங்கள் பூர்வீக நிலத்தை கண்டடையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் குறித்த அரிய தகவல்கள்; அமெரிக்கா யாருடைய நிலம்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ’நேட்டிவ்லாண்ட்.கே (https://native-land.ca/) இணைய தளம். இந்த தளத்தின் நோக்கத்தையும், இதன் செயல்பாட்டுத் தன்மையையும் தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். அதோடு இணையத்தின் சாத்தியங்களை நினைத்தும் ஊக்கம் உண்டாகும். அமெரிக்கா குடியேறியவர்களின் தேசம். அந்த நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு ...
இந்தியா தற்போது அதிகமாக அமெரிக்க சார்பு அரசியலை முன்னெடுத்தாலும், பாரம்பரியமான இந்தியாவுடனான தன்னுடைய நட்பை ரஷ்யா வலுவாக கைக் கொண்டுள்ளது. புடீனின் இந்திய வருகையும், கையெழுத்தான ஒப்பந்தங்களும், இது சர்வதேச அளவில் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் குறித்த ஒரு அலசல்; உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யா தன்னகத்தே 11 நேர மண்டலங்களை கொண்ட பரந்த நாடு, உலகிலேயே மிக அதிகமான கனிம தாது இருப்புகளை (73 டிரில்லியன் டாலர் மதிப்பு) கொண்ட அந்த ரஷ்ய நாட்டின் அதிபர் புடீன் இரண்டு நாள் அரசு வருகையாக ...
மூன்றாண்டுகளாக நடைபெறும் ருஷ்ய-உக்ரைன் போர் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சிக்கு கடும் நிர்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளார். ஜெலன்ஸ்கி வழிக்கு வருவாரா? ஜெலன்ஸ்கியை பின்னணியில் இருந்து இயக்குவது யார்? டிரம்ப் அமெரிக்க அதிபரானவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து போர் நிறுத்தம் குறித்து பேசுகிறேன் என்று கூறி ஜெலன்ஸ்கியை சிறுமைபடுத்தியதை உலகம் மறக்கவில்லை. அதையடுத்து ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களிடம்மும்- பிரிட்டனின் கீத் ஸ்டார்மர, பிரான்சின் மக்ரோன், ஜெர்மனியின் ...
1,400 மாணவர்களை கொன்ற வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இந்திய அரசு தவிக்கிறது! அண்டை நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, சர்வதேச விதிகளை மதிக்காமல் கொடூர குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது என்ற அளவுக்கு பிரதமர் மோடி, கரிசனம் காட்டுகிறார் ஹசீனா மீது! ஏன்?; கிழக்கு வங்கத்தின் (பங்களாதேஷ்) பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்டு 5,2024 அன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோபக் கனலினின்று தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் . ஆனால், இந்தியாவில் அவரது ...
மக்கள் உரிமைகளை மதிக்காதவர், மன்னர் மனோபாவம் கொண்டவர், ஜனநாயத்தை துச்சமாக கருதுகிறவர், ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்காக ஆட்சி செய்கிறவர், அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுபவர்..என்ற குற்றச்சாட்டுகளுடன் டிரம்ப்பிற்கு எதிராக 70 லட்சம் மக்கள் 2,700 இடங்களில் பேரணி நடத்தினர். அதில் பேசிய பர்னீ சாண்டர்ஸின் அனல் கக்கும் உரை; ”இங்கு யாரும் மன்னர்கள் இல்லை” என்று அமெரிக்க அதிபர் டிரம்பை எச்சரித்து வாஷிங்டன் நகரில் ‘ No Kings Day’, நாளையொட்டி நடந்த பேரணியில், அமெரிக்காவின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்( செனட்டர்) ...




















