டிரம்பின் கோமாளித்தனத்தால் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார இழப்புகள் தனிக் கதை! ஆனால், நமது பங்கு சந்தையில் மட்டுமே முதலீட்டாளர்கள் எதிர்பாராத விதமாக 14 லட்சம் கோடிகளை பங்குச் சந்தை இறக்கத்தால் பறி கொடுத்தனர். கடந்த திங்கள்கிழமை ரத்த ஆறே பங்குச் சந்தையில் ஓடியது.  இது எப்படி நிகழ்ந்தது..? பங்கு சந்தை, தங்கம், பெட்ரோல் போன்றவற்றின் விலைகள் ஏறும், இறங்கும் இவை பொதுவான ஒன்றாகும்.  விலை ஏறி கொண்ட இருக்கும் என்று எந்த ஒரு பொருளும் இல்லை.  அப்படி ஏறி கொண்டு இருந்த தங்கம் தற்போது ...

அமெரிக்க வரலாற்றில் ஒரு தனி மனிதர்  அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் அங்கீகாரமின்றி, எமர்ஜென்சி அதிகாரங்களை கையிலெடுத்து, சட்டத்திற்கு புறம்பாக வரிவிதிப்பு செய்வது இதுவே முதல் முறையாம். பொருளாதார வரிவிதிப்பிற்காக எமர்ஜென்சி அதிகாரங்களை அதிபர் டிரம்ப் கையிலெடுக்க முடியாது என்கின்றனர் அமெரிக்க சட்ட வல்லுனர்கள்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள “விடுதலை நாள் வரி விதிகள்” (Liberation Day Tariffs) அகில உலகிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலுமுள்ள வர்த்தக உறவுகள் அதிர்ச்சிக்குள்ளானதால் பங்குச் சந்தைகள் படு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஏன் இந்த ...

அமெரிக்காவைச் சார்ந்து தான் உலகப் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்ற வகையில் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள இறக்குமதி பொருட்களுக்கான  அதிரடி வரி விதிப்புகள்  இந்தியா உள்ளிட்ட உலக பொருளாதாரத்தையே உலுக்கி எடுக்க உள்ளது; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி  இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு  அதிக வரியை விதிப்பதாக அறிவித்துள்ளதானது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ‘விடுதலை தினம்’ என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து ...

உண்மையில் டிரம்ப் யார்? உலகில் போர் கூடாது என உக்ரைனையும், இஸ்ரேலையும் பார்த்து எச்சரிக்கை செய்து ‘அமைதியின் நாயகன்’ என பெயர் பெற்றவரா? அல்லது  ”கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன்” என்றவரா?, ஏமன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த அடாவடிப் பேர் வழியா? அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற நாளான ஜனவரி 20ல்- டிரம்ப் விரும்பிய படியே- ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மீண்டும் அமெரிக்காவை உன்னதமாக்குவோம் (Make America Great Again) ...

வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற ...

உக்ரைனை உசுப்பி விட்டு, உக்கிரமான போரை ரஷ்யா மீது மறைமுகமாக நிகழ்த்திக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது உக்ரைனை கைகழுவி, ரஷ்யாவுடன் அமைதிக்கு கை குலுக்குவதன் பின்னுள்ள அரசியல் என்ன? மூன்றாண்டுகள் போரில் உருக்குலைந்து போன உக்ரைனும், பல இழப்புகளை  சந்தித்த ஐரோப்பிய நாடுகளும் பெற்ற பாடம் என்ன? முன் முயற்சிபிப்ரவரி 24 ,2025 ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று< உக்ரைன் நாடும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இணைந்து முன்மொழியப்பட்ட தீர்மானம்; . மற்றொன்று, அமெரிக்கா ...

அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்குமான உறவை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சுய மரியாதைக்கும், சுய சார்புக்கும் பாதகமான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொள்கிறார்! இதை  முறையாக எதிர் கொள்ளத் துணிவின்றி இந்தியா பணிந்து போவதான அறிகுறிகள் கவலையளிக்கின்றன; அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட​விரோத​மாக​ குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறது  டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு. இதன் முதல்கட்டமாக  கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி  கை மற்றும் ...

இந்தியாவுகெதிரான வரி விதிப்புகளும், இந்தியர்களை வெளியேற்றுவதும், இந்திய இளைஞர்கள் விரும்பும் h1b விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை நிராகரிப்பதுமே டிரம்ப் அரசின் திட்டமாகும்! இதை எவ்வாறு இந்திய அரசு எதிர் கொள்கிறது? டிரம்ப் அமெரிக்க அதிபராக வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்த காலகட்டத்திலேயே உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற ஊடகங்கள் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆனபின் நடக்கப் போகும் குளறுபடிகளை எழுதிக் குவித்து விட்டார்கள். சர்வதேச உறவுகளில் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் கொண்டு வரப் போகும் தடாலடி மாற்றங்களை ...

டிரம்ப்பின் அறிவிப்புகள் திகைக்க வைக்கின்றன. கண்மூடித்தனமான கார்ப்பரேட் அதரவு நிலை, கருணையில்லாத குடிஉரிமை சட்டம், லட்சக்கணக்கில் இந்தியர்கள் வெளியேறும் சூழல், அமெரிக்காவை முதன்மைபடுத்த அனைவரையும் காலி செய்யும் டிரம்ப்பை கண்டு அவரை ஆதரித்த வலதுசாரிகளே  தற்போது அலறுகிறார்கள்; இரண்டாவது முறை அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் தன் இறுமாப்பு அறிவிப்புகளால் அதிரடி காட்டி வருகிறார். நிலையற்ற மனிதரான டிரம்ப் என்னென்ன குளறுபடிகளை அமெரிக்க ஆட்சி அமைப்பில், கொள்கைகளில் , பிற நாட்டுடனான உறவுகளில் கொண்டு வரப்போகிறார் என்ற அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவரது உத்தரவுகள் அமைந்துள்ளன. ...

மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு பிறகு, இஸ்ரேல் அறிவித்துள்ளது போர் நிறுத்தமா? ஹமாசை அழித்து, ஹிஸ்புல்லாவை நிர்மூலமாக்காமல் போரை நிறுத்த மாட்டோம் என கூறிய இஸ்ரேல்  போரை நிறுத்தியுள்ளது உண்மையா? தற்காலிகமானதா? இஸ்ரேலின் குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதா..? போர் நிறுத்ததின் பின்னணி என்ன..? அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் நீண்ட காலமாக இந்த சமரச பேச்சு வார்த்தைகளை நடத்தினாலும், இஸ்ரேல் இதுவரை ‘கழுவிய மீனில் நழுவிய மீனாகவே காலங் கடத்திய இஸ்ரேல், போரை, படு கொலையை நீட்டித்து வந்தது. ஆனால், அறிவித்த குறிக்கோள் நிறைவேறாமல் போர் ...