அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எந்த ஒளிவுமறைவுமின்றி இனவெறி, போர்வெறி, பெண்ணிய எதிர்ப்பு, சர்வாதிகாரம் ஆகியவற்றை டிரம்ப் வெளிப்படுத்துகிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக கமலா ஹாரீஸ் வெளிப்படுவது  மிகவும் ஈர்ப்பைத் தருகிறது; அமெரிக்க அதிபர் தேர்தல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ஜனநாயக காவலனாக இருக்கிறதோ, இல்லையோ…, ஆனால், அவ்வாறான தோற்றம் அதன் மீது படிந்துள்ளது என்பதாலும், அமெரிக்காவானது அனைத்து நாட்டு அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இருப்பதாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் ...

ரிஷி சுனாக் ஏன் இங்கிலாந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? லேபர் பார்ட்டியின் வெற்றி அங்கு மாற்றங்களை ஏற்படுத்துமா? ஏமாற்றங்களை பரிசளிக்குமா..? புதிய பிரதமராகவுள்ள கியெர் ஸ்டாமரின் கொள்கையில்லா கோமாளித்தனங்கள் உணர்த்துவதென்ன..? இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஒரு பகுதி அயர்லாந்து அடங்கிய யு. கே. (United Kingdom) என்றழைக்கப்படும் பிரிட்டனின் தேர்தல் முடிவுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பதினான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் (பழமைவாத கட்சி) கட்சியின் ரிஷி சுனாக் தலைமையிலான ஆட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி ...

நசுக்கப்பட்டு விடுமா பாலஸ்தீனம்? ஹமாஸை முற்றிலும் அழிக்க முடியுமா? இஸ்ரேல் இன்னும் முன்னேறுமா? நெதன்யாகு நினைத்தது நடக்குமா? இந்தியாவின் கோழைத் தனம்! அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தோன்றியுள்ள பாலஸ்தீன ஆதரவு.. இன்னும் பல நுட்பமான தகவல்களை பீட்டர் துரைராஜுடன் பகிர்கிறார் நந்தன் ஸ்ரீதரன்! பாலஸ்தீன பிரச்சினை குறித்து ஊடகங்கள் சொல்லாத பல செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறார், நந்தன் ஸ்ரீதரன். # இறந்து போன பாலஸ்தீன பொது மக்களை விட, இறந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம்! # இந்தியாவில், அறிவார்ந்த மாநிலமான ...

ஊடகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய ஜூலியன் அசாஞ்சேவின் செயல்கள் துணிச்சலானவை! தன் சுய நலத்திற்காக அமெரிக்கா  எப்படி பிற நாடுகளை ஏய்த்துப் பிழைக்கிறது என்பதை ஆவணங்களை கொண்டு அம்பலப்படுத்தியதே அவரது குற்றம்! உண்மைக்காக 15 வருடத்தை  தொலைத்த அசாஞ்சே ஒரு பார்வை! இந்த உலகத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் உண்மைகளையும், appaavi மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தனி ஒரு மனிதனாக அம்பலப்படுத்தியவர் தான் அசாஞ்சே! அவரது விடுதலைச் செய்தி உலகெங்கிலுமுள்ள முற்போக்காளர்களையும் , விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ...

வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்? தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான பாலத்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த அக்டோபர் 7 ல் ...

உலக மக்கள் தொகையை குறைப்பது ஆதிக்க வர்க்கங்களின் நோக்கங்களில் பிரதானமானது. முன்பு போர்கள் மூலம் அதை செய்தார்கள். தற்போது நோய் தொற்றை பரப்பி தடுப்பூசிகள் மூலம் அதைச் செய்கிறார்கள். இதில் முன்னணியில் இருக்கும் பில்கேட்ஸ், மருத்துவ சாம்ராஜ்யத்தை கைப்பற்றி, இந்த உலகையே ஆட்டுவிக்கிறார்! முதலில் சாப்ட்வேர் எனப்படும் கணினி மென்பொருள் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ், பிறகு வெவ்வேறு துறைகளில் தன் கவனத்தை பதித்தார்! அந்த வகையில் விவசாயம், மருத்துவம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தும் இவர், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் விதமாக ...

இனியும் பொறுக்க முடியாது? 1,200 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக 40,000 பேரைக் கொல்வீர்களா? இன்னும் சுமார் 40,000 பேர் சாவின் விளிம்பிற்கு தள்ளப்படுவதா? இஸ்ரேலின் இன அழிப்பு பயங்கரத்தை பல உலக நாடுகள், ஐ.நா. சபை போன்றவை கண்டித்தாலும் நிறுத்தாத சூழலில் களம் இறங்கியது ஈரான்..! கடந்த வாரம் (ஏப்ரல் 1ல்), சிறியாவில் உள்ள இரான் நாட்டு தூதரகத்தை விமானம் மூலம் குண்டு வீசி தாக்கியது,இஸ்ரேல். இதில், இரண்டு ராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர் . இஸ்ரேலின் கோழைத் தனமான தாக்குதலை கண்டித்த ஈரான், இதற்கு ...

அணுசக்தி விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் வாழ்க்கை திரைக் காவியமாகி உள்ளது.    ஏழு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி அழிவுக்கு பயன்படுத்தப் பட்டதால் குற்ற உணர்வுக்கு ஆளான விஞ்ஞானிக்கும், ஆட்சியாளர்களுக்கும் உருவான முரண்களை விவரித்து, மனித நேயத்தை பேசுகிறது..! கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலையில்   திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ...

ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்  சூழ்ச்சி போல,  ‘கர்ப்பபை புற்று நோய்’  என பயமுறுத்தி, 9 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டமாம்! இந்த  HPV தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் உறுதிபட்ட பிறகும், வலிந்து  திணிக்கும் மர்மம் என்ன?  யார், யார் பலனடைய..? Human Papilloma என்ற Virus-ஆல் ஏற்படுவதே கர்ப்பப்பை வாய் புற்று நோய் எனப்படுகிறது. பொதுவாக பலருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு முன் எச்சரிக்கையாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.  கர்ப்பப்பை புற்று நோய் என்பது கருப்பை வாயை ...

இரண்டாம் உலகப் போரின் படுகொலைகள் குறித்த விசாரணைப் படமே, ‘ஜட்ஜ்மெண்ட் அட் நியூரம்பெர்க்’. பல உலக விருதுகளை அள்ளிய படம். அன்பை விதைப்பவர்களே மனித குலத்திற்கானவர்கள். இவர்களால் உருவாகும் விழுமியங்களே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துகின்றன.. எனக் காட்டும் படம்; ‘ஆரிய இனம் தான் சிறந்தது’ என ஆர்ப்பரித்து, யூத மக்களையும், கம்யூனிஸ்டுகளையும் படு கொலை செய்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில்  தோற்றுப் போகிறான். வெற்றி பெற்ற நாடுகள் மனித குலத்திற்கு எதிராக நடந்த கொடூரக் குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, பலரைத் ...