உலகின் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே மூன்று வங்கிகள் திவாலாகி உள்ளன! இவை எப்படி திவாலாகின? என்னென்ன காரணங்கள்? அமெரிக்க மக்களும், அரசும் இவற்றை எப்படி அணுகுகின்றன? இதன் எதிர் வினையாக இந்தியா என்ன பாதிப்பை சந்திக்கும். இந்திய வங்கிகள் பலமாக உள்ளனவா..? ஒரு அலசல்! உலகம் முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது! அடுத்தடுத்து என ஒரே வாரத்தில், அமெரிக்காவின் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. திவாலானதில் மிகப் புகழ் பெற்ற பெரிய வங்கி, சிலிக்கான் வேலி வங்கியாகும். ...

இனங்களுக்கு இடையிலான போரா? மதங்களுக்கு இடையிலான போரா? யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மூன்றுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பாலஸ்தீனத்தின் ஜேருசலேம் அமைந்ததுள்ளது மட்டுமல்ல,  இஸ்ரயேலர், பாலத்தீனியர்களுக்கும் இது தான் புனித தலம்! இங்கு நடந்தது என்ன? இது ஏன் தொடர்ந்து அமைதியை தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியாக உள்ளது? அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களோடு குரூர குணத்துடன் பல அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கும் பல இனங்களை அழித்து, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இன்றளவும் பாலஸ்தீன பிரச்சினையில் ...

நெடுமாறன் ஏன் இப்படிப் பேசுகிறார்? நெடுமாறனை பேச வைத்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன? யாருடைய தேவைக்கு பிரபாகரன் மீண்டும் உயிர்பிக்கப்படுகிறார்? இலங்கை பிரச்சினையில் பாஜக அரசின் தந்திரோபாயங்கள் என்ன? 2009 ஆம் ஆண்டு நடந்த உக்கிரமான போரின் இறுதியில் சமாதானத்திற்கு அழைக்கப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டனர் விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர்களும், அவர்களை சார்ந்திருந்த சுமார் 40,000 மக்களும்! இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் அழிவைத் தடுக்க அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்ற தகவல்கள் அன்று ...

சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ‘இந்திய சீன எல்லை மோதல்’ தொடர்பாக அனல் பறந்தது! வெளிப்படையான விவாதங்களின்றி உண்மைகளை மறைத்து, ”ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத் தரமாட்டோம்” என ஜம்பம் பேசியது பாஜக அரசு! ஆனால், உண்மை நிலையோ கவலையளிக்கிறது! பாஜக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், அவையில் விவாதம் செய்ய பாஜக அரசு சம்மதிக்காததை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன! 1962 ல் நடந்த இந்திய சீன மோதலின் போது பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராயிருந்தார். சண்டை நடந்து கொண்டிருந்த ...

உலக அரங்கில் சீனாவை பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வலிமைமிக்க வல்லரசாக்கியவர்! சோசலீசத்தை நவீன சூழலுக்கு ஏற்ப கட்டமைத்தவர்! மார்க்சியத்தோடு சீனப் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்தவர்! பல சிக்கல்களைக் கடந்து வெல்லற்கரிய நாடாக சீனாவை செதுக்கியவர் ஜியாங் ஜெமின்! சீனத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின்  நவம்பர் 30 அன்று தனது 96 வயதில் மரணமடைந்தார். சீனாவின் முதன்மையான தலைவரான மாவோவுக்குப் பிறகு வந்த தலைவர்களில் ஜியாங் ஜெமின் முக்கியமானவர். அவரது  வளர்ப்பு தந்தை கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார் ஜெமின். எலக்ட்டிரிக்கல் ...

என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர்  இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘சிறுபான்மையினர் ஒருவரை இங்கிலாந்து ...

பிரிட்டனின்  பிரதமராக துணிச்சலான பெண்மணி லிஸ் ட்ரஸ் வந்துள்ளார். இவர் இங்கிலாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்றாலும், வலுவான ஆணாதிக்க சூழல்களை மீறி தலைமைக்கு வந்துள்ளார்! இவர்  தலைமைக்கு வந்த விதமும், அமைச்சரவை சகாக்களை தேர்ந்தெடுக்கும் விதமும் சுவாரசியமானது! கன்சர்வேட்டிவ்- பழமைவாத- கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ் நான்கு சுற்று உள்கட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி வாகை சூடி அதனடிப்படையில் பிரதமர் பொறுப்பு ஏற்றுள்ளார் . நான்கு சுற்று தேர்தல்களிலும் முன்னணி பெற்று இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி ...

ராஜபக்சே குடும்ப ஆட்சியின் மோசமான விளைவுகளால் கொந்தளிப்பான மக்கள் அதை தூக்கியெறியும் போராடத்தில் இன்னும் முழுமையான வெற்றி பெறவில்லை. எனினும், இந்த திருப்பம்,  இலங்கை அதிகார அரசியலில் புதிய அத்தியாயத்தை  துவக்கியுள்ளது. இதன் விளைவு எப்படி இருக்கும்? இலங்கையில் கடந்த சனிக் கிழமை (ஜூலை9)  அதிபர் மாளிகை, தலைமைச்செயலகம் மற்றும் அவரது அலுவலகம் ஆகியவை போராடும் பெருந்திரளான மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளை தப்பியோடிய கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால். தன்னை தற்காத்துக் கொள்வள்ளும் முனைப்பிலேயே அவர் தவித்தார்! ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டிற்கு தப்பிச் ...

விரக்தியின் உச்ச நிலையில் மக்கள் அதிபர் கோத்தபயவின் வீட்டை சூறையாடியுள்ளனர். நிலைமை கை மீறியதால், ராணுவமே செய்வதறியாது மக்கள் பக்கம் வந்து விட்டது! ரணில் விக்கிரமசிங்கே ராஜுனாமா தீர்வாகுமா? வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இனி, இலங்கையின் எதிர்காலம் என்னாகும்? கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற மக்கள் அதிபர் வீட்டையே சூறையாடி உள்ளனர். ராஜபக்சே சகோதரர்கள் மக்கள் கையில் கிடைத்திருந்தால் கைமா ஆக்கி இருப்பார்கள்! இப்படி ஓடி ஒளிவதற்கு செத்து போயிருக்கலாம்! நிலைமையை சமாளிக்க சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்று உள்ளார். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள ...

போலித்தனம், பொய்மை, வாய்ச் சவடால், திறமையின்மை ஆகியவற்றின் அடையாளமாகிப் போன போரீஸ் ஜான்சன், பிரிட்டனை வரலாறு காணாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்! ஊழல் அரசியல்வாதியை உடனே தூக்கி எறிந்தனர், பிரிட்டிஷ் மக்கள்! ஜான்சனின் மூன்றாண்டு ஆட்சி குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவழியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்து விட்டார். 50க்கும் மேற்பட்ட தனது கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில் ...