‘அடி, உதை, தாக்கு! அடிபட்டவன் மேலேயே காவல்துறையை ஏவி எப்.ஐ.ஆர் போடு..’- இது தான் இன்றைய திமுக ஆட்சியின் ஸ்டைலா..? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது! முதல்வர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்! ‘ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுது..’ எனச் சொல்பவர்களை மட்டுமே பிடிக்கும் என்றால் எப்படி..? ‘பிரபல ஊடகங்களும், தற்போதைய திமுக அரசும் மிக இணக்கமாக இருக்கிறார்கள்’ என்பது உண்மையா..? என்றால், ‘இணக்கமாக இருக்கிறாங்க தான் ஆனால், இல்லை..’ என்ற ஒரு குழப்பமான பதிலே வரும்! உண்மை என்னவென்றால்.., திமுக ஆட்சியில் ஊடக முதலாளிகள் ...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கையை கிடப்பில் போட்டு, கொலைகார குற்றவாளிகளை 19 மாதங்களாக கமுக்கமாக காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! நீதிமன்றமே திமுக அரசை கேள்வி கேட்டும் பலனில்லை. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கும் முயற்சி நடக்கிறது..! சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளான 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த அமைதிப் பேரணியில் பேரணியில்  மக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி 15 பேர்களை கொன்றனர் காவலர்கள். ...

13 பேர்  கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக  நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...

சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கொள்வதில் ஏகத்துக்கும் தடுமாறுகிறது திமுக அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை அதன் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்றதாக்கி, தனி ராஜ்ஜியத்தை நடத்துகிறார் ஆளுநர்! ஒன்றா, இரண்டா? நாளும்,பொழுதும் கலந்து  கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் கிட்டதட்ட கலவரத்தை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி! ஒரு கல்விச் சூழலில் அன்பை விதைக்கும் வார்த்தைகளை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகளை, கருத்துக்களை பேசி உற்சாகப்படுத்துவது தான் சிறப்பு விருந்தினரான அவர் ...