ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..? தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல ...

பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திடீரென்று தமிழ் பற்றாளர்களின் கடும் கோபத்திற்கு இலக்கானது! ராம்ராஜ் காட்டனை புறக்கணிப்போம் என்ற ‘ஹேஸ்டேக்’ தேசிய அளவில் பிரபலமானது! தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டியை பிரபலப்படுத்திய நிறுவனமாயிற்றே என்ன தப்பு செய்தனர் என்று பார்த்தால், அவர்கள் வேலைக்கு ஆள் எடுக்க கொடுத்திருந்த ஒரு விளம்பரத்தில் தெலுங்கு தெரிந்திருந்தால் முன்னுரிமை என விளம்பரப்படுத்தி உள்ளனர். ஆகா, இதென்ன கூத்து! ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் தெலுங்கு ஆளுங்களுக்கு முன்னுரிமை என்றால், தமிழ் பற்றாளர்களுக்கு கோபம் வருவது இயற்கை தானே! நியாயம் தானே! ...