இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ அழித்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..?
இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள் சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான் ஜூன் 5. உலக சுற்றுச்சூழல் தினம்!
நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க கூடாது. நம்மை போல் பிறரை நினை அதனுடன் சுற்றுச்சூழலும் சேர்த்து நினைத்து கொள்ள வேண்டும். டைனோசர் அழிவு மனிதனால் அல்ல. ஆனால், இன்று அனைத்து உயிரினங்கள் அழிவும் மனிதனால் மட்டுமே நிகழ்கிறது..
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். படிக்கும்பொழுது பெருமிதம் கொள்வோம். நாம் தேர் கொடுக்க வேண்டாம். முல்லைச் கொடியை வெட்டாமல் இருப்போம். எட்டுவழி சாலையில் எவ்வளவு முல்லை கொடிகள் இருக்கும். எதற்கு இந்த சாலை? மனிதர்கள் சென்று வர. பொருட்களை கொண்டு செல்ல. இந்த செயலுக்கு யாரிடம் அனுமதி கேட்கிறோம் அங்கு வாழும் மனிதர்களிடம். உண்மையில் அங்கு வாழும் உயிரினங்களிடமும் சேர்த்து அல்லவா அனுமதி கேட்க வேண்டும்?
மனிதனை தவிர்த்து எந்த உயிரினங்களும் பேசாதே? ஆம் அம்பாள் என்று பேசினாள்..? அதனால்தானே பல தவறுகள் நடக்கிறது. மற்ற உயிரினங்கள் பேசாது என்ற நினைப்பில், தைரியத்தில் நிலங்களை-காடுகளை அதன் ஒப்புதல் இல்லாமல் அழிக்கிறோம்.
மனிதன் வாழ்த்தானே பூமி? இந்த நினைப்பு மட்டுமே மனிதர்களிடம் மேலோங்கி உள்ளது. காடு அழிப்பு, மரங்கள் அழிப்பு, உயிரினங்கள் அழிப்பு இன்றைய மனிதர்களுக்கு பொழுபோக்காக மாறிவிட்டது. இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு நிகழும் என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இன்று கொரோனா பரவல் எதனால் நிகழ்ந்தது என்று நினைக்கிறீர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல, கொரோனா. காடு, காட்டுயிரினங்கள் அழிப்பாலே ஏற்பட்ட விளைவே விலங்குகளின் உடலில் இருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் தான் கொரோனா ஆகும்.
சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டே இருந்தால்.. நாளும் நாளும் புதுப் புது நோய்களோடு உலகமே போராட வேண்டியது தான்! சுற்றுச் சூழலை அழிக்காமல் இருந்தால் இயற்கையே நம்மை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்குமே!
1972ஆம் ஆண்டு ஸ்டாக் ஹோம் நகரத்தில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன்-5, ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவோம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை முன் வைத்து இந்த தினத்தை கொண்டாடி வருகிறார்கள். முதன் முதலில் 1974 ஆம் வருடம் முதல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது ”ஒரே பூமி” (Only one Earth) என்ற கருப்பொருளை சொல்லி கொண்டாடபட்டது.
2021ஆம் வருடம் கொண்டாடும் சுற்றுச்சூழல் தினத்திற்கு “சுற்றுச்சூழலை மறு சீரமைப்போம்” (Ecosystem Restrotation) என்ற தீம் கொண்டு கொண்டாடப்படுகிறது.. அது என்ன சூழலை மறுசீரமைப்போம்?
நீர் நிலைகள் மனிதனுக்கு நீர் ஆதாரம் வழங்கும் இடம். ஆனால் வீட்டிற்கு உள்ளேயே உள்ள குழாயில் நீர் வருவதால் நம் நீர்நிலைகள் நன்றாக இருப்பதாக நினைத்து கொள்கிறோம். கொஞ்சம் நீர் நிலைப்பகுதிகளுக்கு சென்று பாருங்கள். மாசு அடைந்து, குப்பைகள் கொட்டி அடைத்து, பல நிறுவனங்களின் கழிவு நீர்கள் கலந்து, மரங்கள், செடிகள் இல்லாமல் சென்னையிலேயே நிறைய இடங்களில் பார்க்கலாம். குறிப்பாக பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திற்கும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் சென்னை மக்கள் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும்.
மிக அதிக அளவில் மாசு அடைந்து இருப்பதை நேரடியாகவே மிக நெருக்கத்திலேயே பார்க்கலாம். வளர்ச்சி என்ற பெயரில் இந்த நீர் நிலைகளையும் சுருக்கி கொண்டே செல்வதை பெரும்பாக்கம் சுங்கச்சாவடி அருகில் பார்த்தால் எந்த அளவு அந்த நீர் நிலையை மணல் கொண்டு மூடி அதில் சிமெண்ட் சாலை போடப்பட்டு இருப்பதை காணமுடியும்.
இப்படி நம் நீர்நிலைகள் நிலை இருப்பதனால்தான் வீராணம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வரும் நிலை இருக்கிறது. இங்கு இருக்கும் நீர் நிலைகள் தூர் வாரி, சுத்தப்படுத்தி பாதுகாத்தால் தூய நீர் இங்கேயே கிடைக்கும். இதைத்தான் சுற்றுச்சூழலை மறுசீரமைப்போம் என்ற கருப்பொருளை கொண்டு கொண்டாடப்படுகிறது.
நம் எதிர்கால குழந்தைகளுக்கு எதைவிட்டு விட்டு நாம் செல்கிறோம்? இப்படிப்பட்ட நீர் நிலைகளையா? 1977ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “குழந்தைகளுக்கு ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமே” என்ற கருப்பொருளை கொண்டு கொண்டாடியது. இன்றும் அதே கருப்பொருளை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில் தான் நாம் உள்ளோம்.
ஏரி, குளம், ஆறு, கடல் பகுதி, காடு, விவசாய நிலங்கள்,சதுப்பு நிலங்கள் என்று அனைத்து பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒரு அமைப்போ, நிறுவனமோ செய்யவேண்டியவை தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி தோன்றலாம். நாம் சாப்பிட்டு வீசி எரியும் நெகிழியை சரியான குப்பை தொட்டியில் போடுவது, வீட்டில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டாமல் அதற்கான வண்டி வரும்பொழுது அதில் சேர்ப்பது. முடிந்தால் உங்கள் வீட்டருகில் மரங்கள் வளர்ப்பது, கொஞ்சம் சமூக எண்ணமும் இருந்தால் அருகில் உள்ள நீர் நிலை பகுதிக்கு குழுவாகச் சென்று சுத்தம் செய்வது என்ற சிறு சிறு பங்களிப்பை செய்யலாம்.
நீங்கள் வீசி எரியும் பாலீதீன் கவர்கள் பல பறவைகள் வயிற்றில் இருக்கிறது. இன்று தெருவில் சுற்றும் மாடு சாப்பிடுவதில் அதிகம் பாலீதீன் பைகள் கலந்து உள்ளன. இவை எல்லாம் அவற்றுக்கு எவ்வளவு வேதனைகளை ஏற்படுத்தும்..? மாட்டுக்கு வலி நிவாரணமாக தரும் கொடூர மருந்தான டைக்ளோபினாக்தான் பாறு கழுகு என்ற கழுகு இறப்பதற்கு காரணமாகிறது. இது தெரிந்தும் பல இடங்களில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி மனிதர்களாகிய நாம் சூழலை, உயிரினங்களை பல வடிவங்களில் அழித்து கொண்டு வருகிறோம். அவற்றை சீரமைப்போம் என்பதற்காக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தும். பாகிஸ்தான் இந்த வருடம் நடத்துகிறது. அடுத்த 5 வருடத்தில் பாகிஸ்தானில் உள்ள காட்டின் பசுமையை அதிகரிக்க 10 பில்லியன் மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுனாமி அலையை தடுக்க கூடிய அலையாத்தி காடுகளை வளர்க்க உள்ளனர். பள்ளி, கல்லூரி, பெரிய நகரங்களில் மரங்களை அதிகமாக நடத் திட்டமிட்டு உள்ளனர்.
சமீப வருடமாக இந்தியாவில் ஒரு பறவை அதிகம் பேசபட்டு வருகிறது. நம் வீட்டருகில் விளையாடிக் கொண்டி ருந்த சிட்டுக் குருவிகளை இப்பொழுது தேடி கொண்டு இருக்கிறோம்.
எங்கே போனது சிட்டுக் குருவிகள்..?
சிட்டுக் குருவி இப்பொழுது இல்லை. அவை அழிந்துவிட்டது என்ற விவாதங்களும், செய்திகளும் வருகின்றன.
இவை உண்மையா? சிட்டுக் குருவிகள் தானாக அழிந்துவிட்டனவா..? செல்போன் கதிர்விச்சுதான் காரணம்’ என்று அதன் மீது பழி வேறு போட்டுவிட்டோம்.
சிட்டுக் குருவிகள் அழியவில்லை. மனிதனின் சுயநலத்தால் அவை மனிதர்களிடம் இருந்து விடுபட்டுக் கொண்டன! மனிதர்கள் அருகில் வாழும் பறவை சிட்டுக் குருவியாகும். நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி, நாம் காயவைக்கும் தானியத்தை உண்டு வாழ்ந்துவந்தன.
இன்று எந்த வீடு, சிட்டுக் குருவிகள் கூடு கட்டும் அளவுக்கான சூழலில் உள்ளன. வீட்டு ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு ஏசி போட்டுக் கொள்கிறோம்! மரங்களற்ற கான்கிரிட் காடுகளாக நகரங்கள் காட்சியளிக்கின்றன. இதில் சிட்டுக் குருவி எப்படி கூடு கட்டும்?
தானியம் காயவைக்கும் பழக்கம் முற்றிலும் இன்று இல்லை. கோணிப்பைகளில் அரிசிகளை மளிகை கடையில் வைத்து இருந்த காலம் போனது. ஒரு அரிசியும் கீழே சிந்தாத அளவு பாலித்தின் பை கொண்டு அரிசி வருகிறது. ஆக நாமும் தானியங்கள் காயவைப்பதில்லை, மளிகை கடை கோணிப்பைகளும் பாலிதீன் பையாக மாறிவிட்டது. அதனால் சிட்டுக் குருவிகள் நம்மை விட்டு நகர்ந்து , அவற்றுக்கான இடத்தை தேடிச் சென்று கொண்டு இருக்கின்றன.
நம்முடைய தேவைக்கு மட்டும் வாழ்ந்து கொண்டு இருப்பதால் செல்போன் கதிர்விச்சுதான் சிட்டுக் குருவிகளை அழித்துவிட்டது என்று சொல்லி வருகிறோம். இப்படி நம்மை சுற்றி இருக்கும் சூழலை ஏதோ ஒரு விதத்தில் அழித்து கொண்டு இருப்பதற்கு நாம் காரணமாக இருக்கிறோம். இதை உணர்ந்து சிறிய அளவில் நம் பங்களிப்பை செய்தாலே போதும் சுற்றுச்சூழலை காப்பாற்றிவிடலாம்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் வைத்து உலகம் முழுவதும் பல போட்டிகள், விழிப்புணர்வுகள் நடக்கிறது. ஓவியம் வரைதல், இயற்கை வினாடி வினா, காணொளி வழியாக இயற்கையை அறிமுகப்படுத்துவது என்று நடைபெறுகிறது.
https://www.genevaenvironmentnetwork.org/world-environment-day/ என்ற வலைத்தளத்தில் இயற்கை சார்ந்து இந்த மாதம் நடைபெறும் விழிப்புணர்வு விஷயங்கள் பட்டியலிட்டு உள்ளனர். இது போல் இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. நீங்களும் உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் சிறுவர்களுக்கு சிறு போட்டிகள் வழியாக இயற்கை பற்றிய விழிப்புணர்வை முன்னெடுக்கலாம்.
ஒரு மாநிலத்தின் மொத்தம் பரப்பளவில் 33சதவிகிதம் காடாக இருக்கவேண்டும். ஆனால் 17.41 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. ஆண்டுக்காண்டு இதுவும் வளர்ச்சித் திட்டங்கள் பெயரில் சுருக்கப்பட்டுக் கொண்டே வருகிறது!
Also read
பல நூறு வருடங்களாக இயற்கையை அழித்து அதுதான் நாட்டின் வளர்ச்சி என்று மனிதன் நினைத்து செயல்பட்டான். ஆனால் இந்த நூற்றாண்டில் இயற்கையை அழைப்பதால் ஏற்படும் இன்னல்களை அனுபவித்து வருகிறான்! இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனித இனம் எதிர்காலத்தில் வாழமுடியும் என்ற நிலைக்கு மனிதன் வந்துள்ளான் என்று Jacques-Yves Cousteau சொல்லியுள்ளார்.
இயற்கையை கற்றுக் கொள், இயற்கையை நேசி, இயற்கையின் அருகில் செல், ஒரு போதும் இயற்கை உன்னை கைவிடாது என்று Frank Lloyd Wright பேசி உள்ளார்.
உலகில் ஒரே ஒரே மாஸ்டர் இயற்கை மட்டுமே என்று Rembrandt எழுதி உள்ளார்.
ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்த்தை Development என்று சூழலியாளர் தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டு உள்ளார். ஆக இன்று ஒரு நாள் மட்டும்தான் என்றில்லை, வாழ்நாள் முழுவதும் நாம் நம் சூழலை, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நம் மனதில் நிலை நிறுத்துவோம். நம் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே புரிய வைப்போம்.
கட்டுரையாளர்; செழியன்.ஜா – சுற்றுச் சூழல் களச் செயற்பாட்டாளர். காக்கை கூடு பதிப்பக நிறுவனர்.
மனித இனமாகிய நாம் திருந்த வேண்டும் , இயற்கையை பேணிக் காக்க வேண்டும் என்கிற உண்மையை உரக்கச் சொல்லும் பொது நல கட்டுரை. படிக்க மட்டுமல்ல, சிந்தித்து செயல்படவும் தான்.
நன்றி செழியன்.
17 சாதவிகிதம்தான் காடு உள்ளது என்றால் மோசமான நிலையில் உள்ளோம் என்று தெரிகிறது..
உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்று சூழலின் முக்கியத்துவம் அருமை பெருமைகளை எடுத்தியம்பிய சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் செழியன் அவர்களுக்கு பாராட்டுகள்.
இந்த நகர்ப்புற வளர்ச்சி இயற்கை வள அழிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை தடுப்பதற்கு ஒரே வழி நகர்புற மயமாக்குதல் ஒழுங்கு முறைப் படுத்தப்பட வேண்டும்.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பணியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தான் முன்நின்று நடைமுறைப்படுத்தி
கண்காணிக்க வேண்டும். பராமரிக்க வேண்டும்.
இவர்கள்
புது நகரமைப்பு உருவாக அனுமதி அளிப்பது ஒழுங்குமுறை படுத்தும் சட்ட திட்டங்களை விருப்பு-வெறுப்பு பாரபட்சமின்றி அமல்படுத்தினால் மட்டுமே சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும் என்பதை அறிய வேண்டும். பொறுப்போடு எதிர்கால தலைமுறையை எண்ணத்தில் கொண்டு கடமை ஆற்ற வேண்டும்.
இந்த நாட்களில் வீடு கட்டுவோர் அவர்களது வசதியை பறைசாற்றும் விதமாக தங்களது வீட்டுக்கு முன் காம்பவுண்டு சுவரில் இருந்து சாலை வரை உள்ள பகுதியை கான்கிரீட் தளம் போட்டு பூமியை மூடி விடுகிறார்கள்.
அதன் பிறகு அந்த மூடப்பட்ட இடத்தில் தங்களது கார்களை மேற்கூரை சகிதமாக நிறுத்தி வைக்கிறார்கள்.
இதை உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கண்டுகொள்வதே இல்லை.
இது சட்டப்படி பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஒப்பான முறைகேடாகும்.
அந்த முன் இடத்தில் ஒரு புல் பூண்டு வளர்வதற்கு இடம் தராமல் பராமரிப்பு செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த பணக்காரர்கள் தங்களது வாரிசுகளுக்கு காரை பரிசாக அளிப்பார்கள் ஆனால் செடி கொடிகள் வளர்ப்பதற்கு பூமி முகத்தை காண்பிக்க மறுப்பார்கள்.
இதை உள்ளாட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும். நிழல் தரும் மரங்களை நட வேண்டும். ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து தண்டனை கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்கான சட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன.
போக்குவரத்து சாலை இருமருங்கிலும் பழங்காலத்து மன்னர்கள் மரங்களை நட்டு பராமரித்தார்கள்.
தற்போது dust less surface என்ற பெயரில் மண் பகுதி தெரியாமல் தார் அல்லது கான்கிரீட் போட்டு மூடிவிடுகிறார்கள்.
மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டி ஸ்லாப் போட்டு மூடிவிடுகிறார்கள்.
இதற்கு பதிலாக சாலையில் பெய்யும் மழைநீர் ஓரத்தில் வடிந்து பூமியினுள் செல்லும் அளவிற்கு சாலை ஓரத்தை பராமரிக்க வேண்டும்.
மரங்கள் இருக்கும் பட்சத்தில் அதன் வேர்கள் மழைநீரை உறிஞ்சி பூமிக்குள் செலுத்திவிடும். மண்ணும் இறுகி தூசு பறக்காமல் இருக்கும்.
தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்காது.
வடிகால் வாய்க்காலில் செல்லும் நீர் குப்பை கூளங்களால் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும். அதை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் அந்த நீர் சாக்கடையாக மாறி சாலையில் செல்பவர்கள் பாதிக்கும் அளவிற்கு சாக்கடையாக நிற்கும்.
இந்த சாலையோர மரங்கள் இல்லாதபட்சத்தில் சாலையில் செல்லும் போது கொளுத்தும் வெயில் தார், கான்கிரீட் சாலையில் பட்டு அதன் வெப்பம் எதிர் தாக்குதல் செய்யும் நிலைதான் ஏற்படும்.
இது மாதிரியான நகரமயமாக்கல், நவீன மயமாக்குதல் நாளாவட்டத்தில் தற்கொலைக்குச் சமானமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களும், போக்குவரத்து சாலைகளும் வளர்ச்சி என்ற பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
நகர், ஊரமைப்பு துறை சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
புது நகர், ஊரமைப்பு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு குறைவாக மேற்கொள்ளக்கூடாது.
புது நகர் அமைப்பு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு மேல் உள்ள நிலையில் அந்த நகரின் மத்தியில்
100 x 100 மீட்டருக்கு குளம் ஒன்று அமைக்க வேண்டு மென்பதை கட்டாயமாக்க வேண்டும்.
அந்த குளப்பகுதியை சுற்றி தென்னை. மரங்கள் வளர்க்க வேண்டும். அதன்பிறகு அதைச்சுற்றி ஒரு நடைபாதை பூங்கா அமைக்க வேண்டும்.
பிறகு நான்கு பக்கமும் தெருக்கள் அமைகின்ற மாதிரி வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக நகரமைப்பு ஊரமைப்பு உருவாக வேண்டும்.
இந்த குளத்தை சுற்றியுள்ள கட்டடம் மற்றும் தெருக்களில் விழும் மழைநீர் அந்த குளத்தை சென்றடையும் விதமாக ஊர் அமைப்பு இருக்க வேண்டும்.
வீடுகளில் புழங்கும் நீர் வீட்டை சுற்றி உள்ள மண் தரைகளில் வளர்க்கப்படும் செடி கொடிகளுக்கு செல்லும் விதமாக இருக்க வேண்டும். மல ஜலம் தொட்டி கழிவுகள் வாகனம் மூலமாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
குடியிருப்போர் தங்கள் வீடுகளுக்கு இடையே காம்பவுண்டு எழுப்பாமல் தென்னை மரங்களை வளர்த்து குடியிருப்போர் நல்லெண்ண அடிப்படையில் வாழ பழக வேண்டும்.
இது மாதிரியான ஊரமைப்பு எனது கனவு திட்டம்.
இது மக்கள் மன்றங்கள் சட்டதிட்டம் மூலம் நடப் பாக்க வேண்டும்.
மேலே விவரிக்கப்பட்ட நீர்நிலை அதைச் சுற்றி மரங்கள் சுற்றி நடைபாதை பூங்கா போன்ற ஒரு அமைப்பு கற்பனை மட்டுமல்ல உண்மையாகவே ஆவடி தின்ஊர்தி தொழிற்சாலை பணியாளர்கள் வசிப்பிட வளாகத்தில் அர்ஜுன் பூங்கா என்று ஒன்று உள்ளது.
அலை கண்ணுற்று உள்ளாட்சி நிர்வாகிகள் அதை மாதிரியாக எடுத்துக்கொண்டு புதூர் அமைப்புகளை வடிவமைக்க சட்டம் திட்டமிடலாம்.
இதனால் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.
ஈகோ சிஸ்டம் பேணப்படும். இயற்கை வளத்தை பாதுகாப்போம், பராமரிப்போம், மேம்படுத்துவோம்.
” மாட்டுக்கு வலி நிவாரணமாக தரும் கொடூர மருந்தான டைக்ளோபினாக்தான் பாறு கழுகு என்ற கழுகு இறப்பதற்கு காரணமாகிறது. ” என்பது அதிர்ச்சி தகவல் .
கட்டுரை அருமை !
Greetings! Very useful advice in this particular post!
It is the little changes that will make the
most significant changes. Many thanks for sharing!
Hello very cool site!! Man .. Beautiful .. Amazing ..I’ll bookmark your site and take the feeds also?I’m satisfied to seek out a lot of useful info here within the publish, we need work out extra strategieson this regard, thank you for sharing. . . . . .
Really no matter if someone doesn’t know afterward its up to other viewers that theywill help, so here it occurs.