பட்ஜெட்டாம் பட்ஜெட்! இது  சீனிப் பட்டாசு தான்! ஏழைகளை மரித்துவிடாமல் வைத்துக் கொள்ள அவ்வப்போது சற்று கஞ்சியை ஊத்தி காப்பாற்றவும், பணக்காரன் இலையில் கணக்கு வழக்கின்றி நெய் மணக்கும் பால் பாயாசத்தை அள்ளி ஊற்றவும் தெரிந்த கலையைத் தான் கச்சிதமாகச் செய்கிறார்கள்; மத்திய பட்ஜெட் ஒரு அலசல்; தனி நபர் சம்பாத்திய வரிவிதிப்பை பொறுத்த வரை அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை என்பதில் எந்த மாற்றமும் செய்யாதது கீழ் அடுக்கில் உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. # ...

லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களை நசுக்கி, பெரிய கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க போட்ட சதி திட்டமே ஜி.எஸ்.டி என தரமான ஆய்வுகள் தரவுகளோடு சொல்கின்றன! எளியோர்களை கசக்கி பிழியவும், பணக்காரர்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட வரி முறையே ஜி.எஸ்.டி என்பதற்கு இதோ ஆதாரங்கள்; கார்ப்பரேட்களுக்கு வரிகளை குறைப்பது, பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி இறைப்பது…. என்பதோடு, சிறு தொழில்களை சீரழிப்பது, குறுந் தொழில்களை கொன்றொழிப்பது என்பதில் சாதனை படைத்துள்ளது பாஜக அரசு! இதற்கு அவர்கள் வைத்த பெயர் தான், ‘ஒரே நாடு ஒரே வரி’. ஒரே ...

வங்கிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது வழக்கம்தான்; ஆனால் இந்த முறை வித்தியாசமான காரணத்திற்காக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒரு இலட்சம் வங்கிக் கிளைகளில், காலியாக உள்ள ஒன்றரை இலட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது என்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச். வெங்கடாச்சலம். கேள்வி : தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ! பதில் ...

நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயக் கூலிகளுக்கு பணமில்லை என சொல்லும் பாஜக அரசு, வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புக்களையும், மக்களை வாட்டி வதைத்து வாங்கும் வரிப் பணத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளதை விளக்கும் கட்டுரை; இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை.  நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பல மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீடு தொகை உரிய காலங்களில் வழங்கபடாமல் இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. ...

ஒரு மெகா திருடனுக்கு அரசாங்கமே சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும், அந்த முறைகேடு அம்பலமானால், அவனைக் காப்பாற்ற நீதிமன்றங்களுக்கே நெருக்கடி ஏற்படுத்துவதும் உலகமே கண்டிராத விசித்திரமாகும்..! அதை இந்தியாவில் பாஜக அரசு நிகழ்த்திக்காட்டியது விவரிக்கப்படுகிறது! 2019ம் ஆண்டு ஜனவரியில்  டி எல் அகாசியா என்ற 229 மீட்டர் நீளமுடைய பெரிய சரக்கு கப்பல் கலிஓரங்க்  என்ற இந்தோநேசியா நாட்டு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. கிழக்கு களிமந்தன் பகுதியிலிருந்து புறப்பட்ட அந்த சரக்கு கப்பல் இந்திய எரிபொருள் நிறுவனத்திற்காக 74,820 டன் எடையுள்ள நிலக்கரியை சுமந்து கொண்டு புறப்படுகிறது. பனாமிய ...

வங்கியில் போடும் பணம் பாதுகாப்பானது என நம்பும் கோடானு கோடி மக்களையும், வாழ்நாள் சேமிப்பை வங்கியில் போட்டுள்ள முதியோர்களையும் ஏமாற்றும் துணிச்சல் எப்படி வருகிறது இந்த ஆட்சியாளர்களுக்கு? மக்கள் பணத்தை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்த, வாராக் கடன்கள் இத்தனை லட்சம் கோடிகளா..? வரலாறு காணாத அளவிற்கு மோடி ஆட்சியில்  இந்திய வங்கிகளின் வாராக் கடன் தொகை  NON PERFORMING ASSETS (NPA) மதிப்பு 66.5 லட்சம் கோடி யாகவும் இதில் தள்ளுபடி அல்லது வஜா செய்யப்பட்ட தொகை ரூ. 14.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது ...

ரஷ்ய – உக்ரைன் போர் உக்கிரமாக நடந்து கொண்டுள்ளது! இரண்டு பக்கமும் பேரிழப்புகள்! போரின் விளைவால் உலக பொருளாதாரமே பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஆனால், இந்தப் போரிலும் அதிகப் பலன்களை அறுவடை செய்த ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் தான்! சில லட்சம் கோடிகள் ரிலையன்ஸ் பலனடைந்தது எப்படி? பிப்ரவரி 2022 தொடங்கி  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார  பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளன! ஆனால், இந்தியாவில் மட்டும் கடந்த பல ...

திராவிட மாடல், அரசாங்கத்திலும் சரி, அதன் உள்ளாட்சி அமைப்புகளிலும் சரி எல்லா வேலைகளையும் தற்போது தனியார் கைகளுக்கு தந்துவிட்டு பொறுப்பற்று இருப்பது வாடிக்கையாகிவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. நிதி நிலை அறிக்கை நீதியற்ற அறிக்கையாக உள்ளதே…! அரசாங்கத்தை அதிகாரமற்றதாக்கும்  வகையில், அனைத்து துறைகளிலும் தனியார் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதை மத்திய பாஜக அரசு செய்கிறது என்றால், அது அவர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் ஊறிய கொள்கை என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், சிறியதொரு நிர்வாகமான உள்ளாட்சி அமைப்பான மாநகராட்சியைக் கூட இத்தனை கவுன்சிலர்களும், மேயர், துணை ...

தற்போது நமது நாட்டில் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் இரண்டும் உள்ளன! எந்த வங்கியில் தங்கள் பணத்தை போட்டு வைத்தால் பாதுகாப்பு என மக்கள் நினைக்கிறார்களோ.., அதில் போடுவதற்கான ஒரு வாய்ப்பை இல்லாமலாக்கி, ‘தனியார் வங்கிகள் ஒன்றே சாய்ஸ்’ என பாஜக அரசு பொதுத் துறை வங்கிகளை அழிப்பது சரியா..? இது நாள் வரை சாதாரண பொது மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, பாங்கிலே நம்ம பணத்தை போட்டு வைத்தா பாதுகாப்பாக இருக்கும் என்பது தான்! அந்த ஒற்றை நம்பிக்கையையும் அழித்தொழிக்கும் வண்ணம் ...

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை  கண் கவரும் ஜிகினா தோரண அறிவிப்புகளால் களை கட்டுகிறது! இதற்கு இத்தனை கோடி! அதற்கு அத்தனை கோடி! என.. அறிவிப்புகள்! ஆனால், கடைசியில் விவசாயிகள் விழுந்து அழுவதோ.., தெருக் கோடியில்! உண்மையில் யாருக்கானது இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை..? வெளி நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லும் திட்டம், ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் உற்பத்திக்கு ஊக்கம், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய ...