கவலையளிக்கிறது தமிழக நிதி நிலைமை! நாட்டை குறித்த அக்கறையின்றி, ஓட்டை குறி வைத்தே பட்ஜெட்கள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தின் இன்றியமையாத தேவைகள்.. என்னவென்று இன்னும் புரிந்து கொள்ளாத நிலையிலேயே, தன் ஆட்சி காலத்தை கடக்கவுள்ளது இந்த அரசு; தமிழகத்தின் சொந்த வரி மற்றும் வரி இல்லாத வருவாய் சுமார் 2.50 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், இதில் கடனுக்கான வட்டியைக் கட்டவே 70,754 கோடிகள் செலவாகின்றன. இலவசங்கள், மானியங்கள் என்பதாக ஓட்டு வேட்டை அரசியல் நோக்கங்களுக்கு 1,53,724 கோடிகள் அளவுக்கு அள்ளி இறைக்கபட்டு செலவான பிறகு ...
மிகப் பெரிய செலவுள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் மின் உற்பத்தியிலும், மின் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ள அதானி நிறுவனங்கள் பயன் பெறுவதற்காகவா? இனி, மின் கட்டண உயர்வும், விவசாயத்திற்கு இலவச மின்சார ரத்தும் தவிர்க்க முடியாது; தமிழ்நாட்டு மின் வாரியம் இன்று மிகப் பெரிய கடன் சுமையில் வீழ்வதற்கு காரணமே அதானியிடம் இருந்து நமது மின் வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்பட்டது தான். அது போதாது, என்று அதானி பலடைய ஸ்மார்ட் மீட்டர் ...
சாலைகளில் சுங்கச் சாவடிகள் எதற்கு? கொள்ளை வரி வசூலிக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் சுங்கச் சாவடி என்பதான வழிப்பறிக் கொள்ளையை அனுமதிக்கிறார்கள்..? இதில் மக்கள் அனுபவிக்கும் இம்சைகள் கொஞ்சமா? நஞ்சமா? இதில் நடைபெறும் மோசடிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஒரு அலசல்; இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மொத்தமுள்ள 1041 சங்கச் சாவடிகளில் தமிழகத்தில் மட்டுமே 72 உள்ளன. தற்போது அதை அதிகரித்து 90 ஆக உயர்த்த போவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ...
மாய் மாலங்கள் நிறைந்த மத்திய பட்ஜெட் மலைக்க வைக்கிறது. நாட்டின் பொருளாதாரம், மக்கள் நலன் குறித்த புரிதலோ, கூட்டாட்சி தத்துவம் குறித்த அறிதலோ இவர்களுக்கு இல்லை. இந்த பட்ஜெட்டால் மக்கள் வாழ்க்கை தரம் உயருமா? தாழுமா? யாரை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது..? வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன ...
கந்து வட்டிக் கொடுமைகளுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்றவையாக சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை செய்யும் அடாவடித் தனங்களால் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு ஆளாகும் விவசாயிகளும், பெண்களும் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அடமானமில்லாமலும், அத்தாட்சி சொத்து பத்திரங்கள் ஏதும் இல்லாமலும் கேட்டவுனே கடன் தருபவையே மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களாகும். ஏழை, எளிய அடித்தட்டு மக்களை குறி வைத்து மட்டுமே இவர்கள் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பதில் ...
பட்ஜெட்டாம் பட்ஜெட்! இது சீனிப் பட்டாசு தான்! ஏழைகளை மரித்துவிடாமல் வைத்துக் கொள்ள அவ்வப்போது சற்று கஞ்சியை ஊத்தி காப்பாற்றவும், பணக்காரன் இலையில் கணக்கு வழக்கின்றி நெய் மணக்கும் பால் பாயாசத்தை அள்ளி ஊற்றவும் தெரிந்த கலையைத் தான் கச்சிதமாகச் செய்கிறார்கள்; மத்திய பட்ஜெட் ஒரு அலசல்; தனி நபர் சம்பாத்திய வரிவிதிப்பை பொறுத்த வரை அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை என்பதில் எந்த மாற்றமும் செய்யாதது கீழ் அடுக்கில் உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. # ...
லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களை நசுக்கி, பெரிய கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க போட்ட சதி திட்டமே ஜி.எஸ்.டி என தரமான ஆய்வுகள் தரவுகளோடு சொல்கின்றன! எளியோர்களை கசக்கி பிழியவும், பணக்காரர்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட வரி முறையே ஜி.எஸ்.டி என்பதற்கு இதோ ஆதாரங்கள்; கார்ப்பரேட்களுக்கு வரிகளை குறைப்பது, பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி இறைப்பது…. என்பதோடு, சிறு தொழில்களை சீரழிப்பது, குறுந் தொழில்களை கொன்றொழிப்பது என்பதில் சாதனை படைத்துள்ளது பாஜக அரசு! இதற்கு அவர்கள் வைத்த பெயர் தான், ‘ஒரே நாடு ஒரே வரி’. ஒரே ...
வங்கிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது வழக்கம்தான்; ஆனால் இந்த முறை வித்தியாசமான காரணத்திற்காக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒரு இலட்சம் வங்கிக் கிளைகளில், காலியாக உள்ள ஒன்றரை இலட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது என்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச். வெங்கடாச்சலம். கேள்வி : தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ! பதில் ...
நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயக் கூலிகளுக்கு பணமில்லை என சொல்லும் பாஜக அரசு, வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புக்களையும், மக்களை வாட்டி வதைத்து வாங்கும் வரிப் பணத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளதை விளக்கும் கட்டுரை; இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை. நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பல மாதங்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீடு தொகை உரிய காலங்களில் வழங்கபடாமல் இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. ...
ஒரு மெகா திருடனுக்கு அரசாங்கமே சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும், அந்த முறைகேடு அம்பலமானால், அவனைக் காப்பாற்ற நீதிமன்றங்களுக்கே நெருக்கடி ஏற்படுத்துவதும் உலகமே கண்டிராத விசித்திரமாகும்..! அதை இந்தியாவில் பாஜக அரசு நிகழ்த்திக்காட்டியது விவரிக்கப்படுகிறது! 2019ம் ஆண்டு ஜனவரியில் டி எல் அகாசியா என்ற 229 மீட்டர் நீளமுடைய பெரிய சரக்கு கப்பல் கலிஓரங்க் என்ற இந்தோநேசியா நாட்டு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. கிழக்கு களிமந்தன் பகுதியிலிருந்து புறப்பட்ட அந்த சரக்கு கப்பல் இந்திய எரிபொருள் நிறுவனத்திற்காக 74,820 டன் எடையுள்ள நிலக்கரியை சுமந்து கொண்டு புறப்படுகிறது. பனாமிய ...