இந்தியா உலகின் முன்னேறும் நாடுகளில் முதன்மையாக திகழ்கிறது என்று சங்கிகள் சுய தம்பட்டம் அடித்த சூழலில், விஸ்வ குருவான நரேந்திர மோடி , மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும், விவசாயிகள் ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும், மக்கள் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்ததன் பின்னணி குறித்த ஒரு அலசல்; இந்தியா உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது என்பதான சொல்லாடல்களை பரப்பிய மத்திய பாஜக அரசு, அதை ஊதி பெரிதாக்கிய பாஜகவின் ஐ.டி விங், சலித்து போகும் ...
சாமானிய மக்களுக்கு மலிவு விலை அன்னசாலையான அம்மா உணவகத்தை புதுப்பித்து புத்துணர்வோடு செயல்படுத்த முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். அம்மா உணவகம் பொலிவிழந்ததற்கு காரணம், அரசியல் மட்டுமல்ல! அதில் உள்ள நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அதை புதுப்பித்து செயல்படுத்துவது கஷ்டமாகும்; வெறுமனே ஒரு அரசாணை மூலம் இந்த உணவகங்களை புதுப்பிக்க முடியாது. அவ்வளவுக்கு நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் இதில் உள்ளன. அவற்றை களைவதற்கு முயலாமல் வெளியிடப்படும் அரசாணை வெற்றிகரமான செயல்பாட்டுக்கு உதவாது. நோக்கம் நல்லது என்றாலும் அதை சாத்தியப்படுத்தும் வழிமுறைகளை கண்டடையாமல் செயல்படுத்த ...
உலக வங்கிக் கடன், ஐ.எம்.எப் ஜப்பான் அரசு (JICA) தரும் கடன் என வெளிநாட்டு நிறுவனங்கள் நமக்குத் தரும் கடன்கள் நம் வளர்ச்சிக்கானது என பொதுபுத்தியில் கட்டமைக்கப்படுகிறது. ஆம், அது யாருக்கான வளர்ச்சி? அது எப்படி இந்த நாட்டில் ஊழலை ஊக்குவிக்கிறது? அதில் அரசியல்வாதிகள் எப்படி மறைமுக ஆதாயம் அடைகிறார்கள்..? ஒரு அலசல்; தமிழகத்தின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியைக் கடந்து நிற்கிறது இந்திய அரசின் கடன் சுமார் 200 லட்சம் கோடிகளை தொட்டு நிற்கிறது. இந்தச் சூழலில் அதன் வேர் முதல் ...
இந்தியா முழுமையும் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் திணறுகிறார்கள், போக்குவரத்து தொடங்கி உணவகங்கள் மட்டுமின்றி, குடும்பங்களும் சமையல் கேஸ் இல்லாமல் திண்டாடும் போது, அம்பானியின் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யலாமா? குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், முகேஷ் அம்பானியின் Mukesh Ambani’s Reliance breaks silence on reports of receiving cargo of Russian oil at Jamnagar refinery கட்டுப்பாட்டில் இயங்கும் உலகின் ...
பிஎம் கேர்ஸ் ஃபண்ட் என்பது பிரதமர் பதவிக்கு கிடைக்கும் நன்கொடை! இதன் முழு கணக்கையும் அரசு சம்பளம் பெறும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் நிர்வகிக்கிறார்கள். இதை இந்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் பார்வைக்கே வராமல் கமுக்கமாக மறைப்பது மாபெரும் அதிகார துஷ்பிரயோகமாகும் என அலசுகிறார், ஓய்வு பெற்ற சிஏஜி உயரதிகாரி; இந்திய பிரதமர், மார்ச் 27, 2020 அன்று ‘அவசர காலங்களில் குடிமகன்களுக்கான உதவி மற்றும் நிவாரண நிதி’ (பிஎம் கேர்ஸ் ஃபண்ட்) என்ற ஒன்றை தன் பதவியின் பெயரில் அறிவித்து மக்களிடமிருந்து நன்கொடை ...
பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை நாட்டின் பொக்கிஷங்களாகும். அவை பேராசை கொண்ட ஆட்சியாளர்களால் பெரும் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை வேட்டைக்காடாக்கினால், இனி முன்னேறிய தமிழகத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளக் கூடும்; தமிழ்நாடு ஒரு வளர்ச்சி அடைந்த முன்னேறிய மாநிலம்! ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்! அதிக தொழிற்சாலைகள் மற்றும் உள் கட்டமைப்புகள் நிறைந்த மாநிலம்! என்று நாம் பெருமைப்பட்டு மார்தட்டிக் கொண்டதெல்லாம் உண்மை தான்! பொய்யல்ல. ஆனால், அதை தக்க வைத்துக் ...
இதென்ன இப்படி சொல்கிறாய்? அவங்க பட்ஜெட்டில் வடிகிற தேனை எடுத்துப் பருகி ஊடகங்கள் எல்லாம் பரவசப்படுகையில், நீ மட்டும் சூது,வாது, சூட்சுமங்கிறாயே.. என்கிறீர்களா? பட்ஜெட்டில் உள்ள எழுத்துக்களை வாசித்து முடிவெடுப்பது அறிவுடமையா? இதோ, பொய்களையும், புளுகளையும் வரிசைப்படுத்திப் பார்ப்போமா? வார்த்தை ஜாலங்கள், வகை,வகையான பொய்களைக் கொண்டு ஒரு பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவதில் நிர்மலா சீதாராமன் நிகரற்றவர் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ”இந்த பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும், அதன் உள் நோக்கங்களும் இந்திய மக்களின் முதல் எதிரியே அதன் அரசாங்கம் தான்” என அறைந்து ...
வாங்கிக் குவிக்கும் கடன்களுக்கு பின்னணியில் ஒரு சர்வ தேச அரசியல் சதி வலை உள்ளது. இதில் ஆளும் அல்லது ஆண்ட எல்லா அரசியல் கட்சி அரசுகளின் ஆட்சியாளர்களுக்கும் சுயநலம் உள்ளது. தற்சார்பான பொருளாதார பலத்தால் எந்த நாடும் தலை நிமிர்ந்துவிடக் கூடாது என்ற தவிப்பும் உள்ளது; ஒரு அரசாங்கம் வாங்கும் கடன்கள் பொது மக்களை பாதிக்குமா? பாதிக்காதா? ஒரு அரசாங்கம் தான் வாங்கும் கடன்களுக்கு வட்டி கட்டுகிறது. அந்த வட்டிக்கான பணத்தை தர கூடுதல் வரி விதித்தோ அல்லது மக்களுக்கான சில திட்டங்களின் முதலீட்டை ...
கோடி மீடியா எவ்வளவு முயற்சி செய்தும், கேடி அதானியை காப்பாற்ற முடியவில்லை. அம்பலப்படுத்தியது, வாஷிங்டன் போஸ்ட்! அதானியை நஷ்டத்தில் இருந்து மீட்க, -LIC யின்- 33,000 கோடி ரூபாயை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார் மோடி. இதனால், ஆயுள் காப்பாட்டு நிறுவனத்தின் ஆயுளே கேள்விக் குறியாகி உள்ளது; ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) அதானி நிறுவனங்களில் கடந்த மே மாதத்தில் ரூபாய் 33,000 கோடி பணத்தை “முதலீடு” செய்துள்ளதை அம்பலப்படுத்தியது அமெரிக்க ஊடகமான “வாஷிங்டன் போஸ்டு” என்ற புகழ் பெற்ற நாளிதழ் தான் ...
மக்கள் மீது திடீர் கரிசனமா? ஆபரேஷன் சிந்தூரின் தோல்வி, அமெரிக்க டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு ஆகியவற்றால் இமேஜ் சரிந்திருந்த மோடி, மீண்டெழுவதற்கான தந்திரமா? ஜி.எஸ்.டியால் நிகழ்ந்து முடிந்த பேரழிவை இந்த வரி குறைப்பு மீட்டெடுக்குமா? இதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் என்ன..? ஒரு அலசல்; எட்டு ஆண்டுகளாக காங்கிரசும் மற்ற கட்சிகளும் ஜிஎஸ்டி வரி விதிப்பை – கப்பார் சிங் டேக்ஸ் வரி என கூறி, அவற்றை இலகுவாக இரண்டு மூன்று அடுக்குகள் கொண்டதாக மாற்றியமைக்க கரடியாக கத்திய போது, மோடியோ, நிர்மலா ...























