சுற்றுச் சூழல்கள் மிகவும் சீர்கெட்டு இருக்கும் நவீன உலகில் சைனஸ் பிரச்சினை என்பது சகலரையும் பாதிக்கும் நோயாக மாறி வருகிறது. கொஞ்சம் கவனமாக இருந்தால் சைனஸ் வருவதை தவிர்க்கலாம். வந்தாலும் இம்சை தரும் சைனஸிலிருந்து விரைவில் விடுபடுவது எப்படி எனப் பார்க்கலாம்; நமது மூக்கைச் சுற்றிலும் முக எலும்புகளுக்குள் காற்று நிரம்பிய சிறிய அறைகள் உள்ளன.. அவை சைனஸ் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு சைனஸ் அறைகள் உள்ளன. நெற்றிப் பகுதியில் ஒரு பிரதான சைனஸ் அறை உள்ளது. கன்ன எலும்புகளின் உள்ளே இருப்பது ...
இயற்கை வழி நல வாழ்வு; 3 அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது. மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா? சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை சிகிச்சை அணுகுமுறை குறித்த ஒரு அலசல்; ஒரு குழந்தை தாயின் கருவறையில்இருந்து வெளி வருவதற்கான பிறப்புரிமை என்பது இயற்கையானது. மற்றும் சட்டப்படி பெறும் அடிப்படை உரிமையுமாகும். கருவறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழும் உரிமையை அது குறிக்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு மனிதருமே ...
இயற்கை வழி நல வாழ்வு; 2 உடல் நலம் என்பது ஒருவருக்குள் இருந்து வெளிப்படுவதாகும். அதனை வெளியில் உள்ள தொழில் நுட்பத்தின் வழியே உள்ளே கொண்டு வர முடியாது. நோயுடன் வாழ்வதற்கான பயிற்சியைத் தான் நவீன தொழில் நுட்பம் நமக்கு கற்றுத் தருகிறது. சுகமாக வாழ்வதற்கு நமக்குள் இருக்கும் அறிவை கண்டடைவது எப்படி?: மனிதச் சமூகம் அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்குமான இடைவெளியை நன்கறிய வேண்டும். அறிவு என்பது கால் மூட்டில் ஏற்பட்டிருக்கும் வலியை இயற்கை இயங்கும் போக்கைக் கொண்டு அங்குள்ள சிக்கலை களைந்து, மூட்டு ...
இயற்கை வழி நலவாழ்வு -1 மருத்துவம் என்பது வாடிப்போன பயிர்களை மலரச் செய்வதைப் போன்றது. உயிருடல்கள் துன்பத்தில் வாடும் போது, துன்பம் நீக்கி அவற்றை இன்பம் பெறச் செய்யவதே மருத்துவம். நோய் என்பது தற்காலிக இடையூறு தானேத் தவிர, வாழ்நாள் சிக்கலல்ல! ஒருவர் நோயுற்ற காலத்தில் மருந்து சாப்பிடுவது ஏற்புடையது, ஆனால் “மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்குத் தான்” என்பது மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்த சமூகங்களின் நிலைப்பாடு. மருந்துகளோ, மருத்துவமோ உயிருடல்களுக்கு இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமே தவிர, புதிய சிக்கல்களை உருவாக்கிவிடக் கூடாது. ...
வட கிழக்கு பருவமழை தமிழக விவசாயிகளை இந்த ஆண்டு வாட்டி வதைப்பதாக அமைந்துவிட்டது. முன்னேற்பாடு நடவடிக்கைகளில் எப்போதும் பின் தங்கி இருப்பதில் சாதனை படைப்பவர்களான நம் ஆட்சியாளர்கள் மழைக்காலங்களில் மீட்பர்களாகிவிடுகின்றனர். ஆயினும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகள், சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல; எந்த ஒரு நல்லாட்சிக்குமான அளவுகோல் ஏரி, குளங்களை கண் போல பாதுகாத்து சேதாரமில்லாமல் நீரை தேக்கி வைப்பதும், அறுவடையான நெல்லை பாதுகாப்பாக மழையில் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் தான். அந்த வகையில் பார்த்தால் நமது ஆட்சியாளர்கள் மிகப் பெரிய தொடர் தோல்வியைத் தான் ...
‘நறுமணப் பொருட்களின் ராஜா…’ எனும் கம்பீரமான பெயருக்குச் சொந்தக்காரர் நம் மிளகு! மிளகின் வியாபாரத்தை வைத்து மட்டும் வரலாறு அப்பெயரைக் கொடுத்துவிடவில்லை! மிளகுக்காக நடைபெற்ற போர்கள் ஏராளம்… நடந்த குடுமிப்பிடி சண்டைகள் எக்கச்சக்கம்… நடைபெற்ற வணிகப் பரிமாற்றங்களோ கணக்கிலடங்கா! மிளகின் அருமைப் பெருமைகளைத் தெரிந்துகொண்டால் ‘ராஜா’ எனும் பெயர் மிளகுக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது தெரிய வரும். கருப்பு தங்கம்: ‘கருப்பு தங்கம்’ எனும் பெயர் வணிகச் சந்தையில் மிளகின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும். அக்காலத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, நெடியும் மணமும் மிகுந்திருக்கும் ...
ஏலக்காய் கலந்த தேனீர், தேங்காய் பால் பலருக்கும் பரிச்சயம்! தனது நறுமணத்தின் மூலம் உலகையே வசீகரித்த ஏலத்துக்கு மிகப் பெரிய வரலாற்று பின்னணி உண்டு! இனிப்பு பலகாரங்கள் தொடங்கி பிரியாணி வரை பலவற்றிலும் வாசனைக்கும், சுவைக்கும் சேர்க்கப்படும் ஏலத்திற்கு மகத்தான மருத்துவ குணங்கள் உள்ளன: சமையலில் சேராத ஏலம் வாசனையால் நம்மை மதிமயக்கும்! ஏலம் சேர்க்கப்பட்ட உணவுகளோ சுவையால் மதிமயக்கும்! நறுமணப் பொருட்களின் ராஜ்யத்தில் மிளகுக்கு இருக்கும் அதே கம்பீரம் ஏலத்துக்கும் உண்டு! மிளகு ‘நறுமணப் பொருட்களின் ராஜா’என்றால், ஏலமோ ‘நறுமணப் பொருட்களின் ராணி…’ ...
பெருங்காயம் இல்லாமல் சமையலே இல்லை. சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, பருப்புக் கடையல், தயிர்சாதம்..என சமையல் எதுவானாலும், பெருங்காயம் துளியேனும் சேர்க்கும் போது தான் ஆரோக்கியமாகிறது. பெருங்காயம் அளவுக்கு சமையலில் முக்கியத்துவம் பெற்ற மற்றொன்று இல்லை! முழு விபரம்; துர் நாற்றமெடுப்பதாகக் கருதி ‘சாத்தானின் மலம்’ (Devil’s dung) என்று ஒரு காலத்தில் உதாசினப்படுத்தப்பட்ட பெருங்காயம் தான், பின்னாளில் உலகையே தனது நோய்ப் போக்கும் குணம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தது. வெகு குறுகிய காலத்தில் ‘கடவுளின் உணவு’ என்று உயர்த்திச் சொல்லும் அளவுக்குப் ...
நோய்கள் ஏற்படாதிருக்கவும், ஏற்பட்டால் அதை குணப்படுத்தவுமான உணவு முறைகளை நாம் பார்க்கப் போகிறோம். இதனால் லட்சங்களில் தீர்வைத் தேடும் மருத்துவத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு உணவிலும் ஆரோக்கியத்தை பேணும் அம்சங்களோடு நமது சமையலறை செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என நாம் அலசுவோம்; அஞ்சறைப் பெட்டி பொருட்கள் என்று சொன்னாலே ஒரு காலத்தில் மருத்துவப் பார்வையோடு பார்த்த சமூகம் நம்முடையது. அவற்றைப் பயன்படுத்தி நுணுக்கமாகத் தயாரிக்கப்படும் உணவுகள், நோய்கள் ஏற்படாமல் தடுப்பது மட்டுமன்றி, பல்வேறு நோய்களை நீக்கும் ஆயுதங்களாகவும் பயன்பட்டன. அஞ்சறைப் பெட்டியில் அங்கம் வகிக்கும் ...
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருசேர நன்மைகளை வாரி வழங்கக்கூடிய மூலிகைகளுள் ஒன்றுதான், தொட்டாசிணுங்கி…! சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose, 30 நவம்பர் 1858 – 23 நவம்பர் 1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். என்று வரலாறு கூறுகிறது . அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது . வெளி உலகிற்கு அது புதிய செய்தியாக இருந்தது . ஆனால் நமக்கு இந்த உண்மை முன்பே தெரியும் . தாவரங்கள் நிலையானதாகவும், தரையில் வேரூன்றியதாகவும், ...

























