சிபிஎஸ்இயில் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பீட்டை ‘கணினித் திரை வழியே திருத்தும் முறை’ அறிமுகப்படுத்தியதில் ஏகப்பட்ட குளறுபடிகள், மோசடிகள்! நீட் மோசடி, கியூட் மோசடி என அடுத்தடுத்து நடந்தவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, ‘இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதியோ’ என்ற அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை; வேகமாக நிர்வாகத்தை நடத்துவதாக கூறி, கல்வியின் தரத்தை அப்படியே காற்றில் பறக்க விட்டுள்ளது, சிபிஎஸ்இ. இதனால் சுமார் 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. மனித உடலுக்கு இதயம் எவ்வளவு ...
உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் உரிய புரிதல் இன்றி பேசப் போக, விவகாரம் அரசியல்மயப் படுத்தப்பட்டு விட்டது. உயர் கல்வித் துறை என்பது உச்சகட்ட ஊழல் துறையாகி, பல்கலைக் கழகங்கள் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ள இந்தச் சூழலில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன? ”தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் எங்களுக்கு கிடையாது. இதில் தமிழக முதல்வரின் கொள்கை முடிவின்படி செயல்படுவோம்.’’ என உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் எனப் பேசினார். அதன் பிறகு இது ...
அறிமுகமானது தொடங்கி 11 ஆண்டுகளாக மோசடி புகார்கள் இல்லாமல் நீட் தேர்வு நடந்ததில்லை. ஏன் இத்தனை குளறுபடிகள்? கோச்சிங் சென்டர்களின் ‘பவர் லாபி’ தில்லு முல்லுகளுக்கு தேசிய தேர்வு முகமை ( NTA) உடந்தை! இதன் பின்னணியில் புரளும் ஒரு லட்சம் கோடி கல்வி வணிகத்தின் செல்வாக்கு குறித்த ஒரு அலசல்; இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற்றது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். வழக்கம் போல வினாத்தாள் வெளியானது. அது கைக்கு கிடைத்தவர்கள் முதல் மார்க்குகளை ...
அரசு பள்ளி, கல்லூரிகள் இனி வரும் காலங்களில் இல்லாமல் ஆக்கப்படும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து, பொதுக் கல்வியை காப்பாற்ற, கதி கலங்கிக் கிடக்கும் தமிழகக் கல்விச் சூழலை மீட்டெடுக்கும் அக்கறையை அரசியல் கட்சிகளிடையே விதைக்க அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழக கல்வியாளர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்; தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மாநிலத்தின் கல்விச் சூழல் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தற்போது மாணவர்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், ஆசிரியர்கள் விநியோகிஸ்தர்களாகவும், கல்வி ...
உயர்கல்வி வளாகங்களில் சாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளும், அதனால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுத்து தீர்வு காண யுசிஜி விதிகள் கொண்டு வந்ததற்கு எத்தனை எதிர்ப்புகள்..! அது நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் பின்னுள்ள அரசியலை அலசுகிறது இந்தக் கட்டுரை! பாட நூல்களை வாசித்து மாணவர்களை தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதோடு மட்டும் இருந்து விடாமல், சமுதாய மாற்றங்களுக்கான களங்களாகவும் திகழ்பவற்றையே உன்னதமான உயர்கல்வி நிலையங்களாகக் கொண்டாட வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் நெடும் போராட்டத்தின் வெற்றியாகத் தான் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) கடந்த ...
தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது கல்வியைத் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், மத்தியமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கானது. இதற்கு மாற்றாக ‘ வரைவு மக்கள் கல்விக் கொள்கை’ 2025 உருவாக்க, ஒரு வரலாற்று நிகழ்வு பெங்களூரு மாநகரத்தில் நிகழ்ந்தது. அதன் சாராம்சம். இந்திய கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பெங்களூரில் ஜனவரி, 24,2026 அன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இராமையா தொழில் நுட்ப கல்வியகத்தில் கூடினர். அவர்கள் 26 மாநிலங்களின் மக்கள் பாராளுமன்ற பிரதிகள். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் பேரா சுகதேவ் தோரத் ...
இந்திய கல்வித் துறை வரலாற்றுக்கே களங்கமாக ஒரு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கை சார்ந்த பாடத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தி, கல்வித் துறையின் ஜனநாயக கட்டமைப்பை கருவறுக்கும் இந்த மசோதா குறித்த அலசல்; மத்திய அரசு உயர்கல்விக்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாம். அங்கனம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் ...
நண்பர்களே,பொன்னான வாய்ப்பு! போராடிப் பெற்றத் தீர்ப்பு! மண்ணாகிப் போனதுவே.. என் சொல்வது..! சாஸ்திரா சனாதனிகள் உச்சநீதிமன்றம் சென்று ஆக்கிரமித்த நிலத்தை அரசுக்கு தரமறுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டனர்! என்ன நடந்தது..? ஏன் இந்தத் தோல்வி? சாஸ்திரா பல்கலைக் கழகம் 1984 ல் தஞ்சையில் ஆக்கிரமித்த 58.17 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியான 31 ஏக்கர் நிலத்தை நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2018 ல் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அந்த தீர்ப்பை ...
காந்தியடிகள் கல்வி பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்டவர். மெக்காலே கல்வி முறை மீது காந்திக்கு உடன்பாடு இல்லை. தாய்மொழிக் கல்வி, சுற்றுச் சூழல் கல்வி, குடிமைப் பண்புகளை வளர்க்கும் கல்வியை வலியுறுத்தி உள்ளார். காந்தியின் கல்வி சார்ந்த கண்ணோட்டங்கள் இந்த சமூகத்தை மனித நேயமுள்ளதாக கட்டமைக்கும் வல்லமை பெற்றவை; காந்தி ஒழுக்கம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார். ”கல்வியானது, சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டும்” என்கிறார். ‘சுயமரியாதை’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் காந்தி. காந்தி அரசியல் குறித்து பேசியது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ...
கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கும் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டார் பினராய் விஜயன். ஆனால், ”தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதியோம்” என்று சொல்லிக் கொண்டே, பின்வாசல் வழியாக அதை உருவாக்கி வெற்றிகரமாக ஸ்டாலின் செயல்படுத்தும் தந்திரத்தை அவர் விரும்பவில்லை; பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை பெறுவதற்காக கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பால், அது பின்வாங்கப்பட்டது. ஓரு இடதுசாரி கூட்டணி அரசில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியே தடம் புரண்டாலும், அதை சமூகத்தின் நன்மைக்காக ...

























