உயர்கல்வி வளாகங்களில் சாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளும், அதனால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுத்து தீர்வு காண யுசிஜி விதிகள் கொண்டு வந்ததற்கு எத்தனை எதிர்ப்புகள்..! அது நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் பின்னுள்ள அரசியலை அலசுகிறது இந்தக் கட்டுரை! பாட நூல்களை வாசித்து மாணவர்களை தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதோடு மட்டும் இருந்து விடாமல், சமுதாய மாற்றங்களுக்கான களங்களாகவும் திகழ்பவற்றையே உன்னதமான உயர்கல்வி நிலையங்களாகக் கொண்டாட வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் நெடும் போராட்டத்தின் வெற்றியாகத் தான் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) கடந்த ...
தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது கல்வியைத் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், மத்தியமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கானது. இதற்கு மாற்றாக ‘ வரைவு மக்கள் கல்விக் கொள்கை’ 2025 உருவாக்க, ஒரு வரலாற்று நிகழ்வு பெங்களூரு மாநகரத்தில் நிகழ்ந்தது. அதன் சாராம்சம். இந்திய கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பெங்களூரில் ஜனவரி, 24,2026 அன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இராமையா தொழில் நுட்ப கல்வியகத்தில் கூடினர். அவர்கள் 26 மாநிலங்களின் மக்கள் பாராளுமன்ற பிரதிகள். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் பேரா சுகதேவ் தோரத் ...
இந்திய கல்வித் துறை வரலாற்றுக்கே களங்கமாக ஒரு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கை சார்ந்த பாடத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தி, கல்வித் துறையின் ஜனநாயக கட்டமைப்பை கருவறுக்கும் இந்த மசோதா குறித்த அலசல்; மத்திய அரசு உயர்கல்விக்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாம். அங்கனம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் ...
நண்பர்களே,பொன்னான வாய்ப்பு! போராடிப் பெற்றத் தீர்ப்பு! மண்ணாகிப் போனதுவே.. என் சொல்வது..! சாஸ்திரா சனாதனிகள் உச்சநீதிமன்றம் சென்று ஆக்கிரமித்த நிலத்தை அரசுக்கு தரமறுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டனர்! என்ன நடந்தது..? ஏன் இந்தத் தோல்வி? சாஸ்திரா பல்கலைக் கழகம் 1984 ல் தஞ்சையில் ஆக்கிரமித்த 58.17 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியான 31 ஏக்கர் நிலத்தை நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2018 ல் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அந்த தீர்ப்பை ...
காந்தியடிகள் கல்வி பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்டவர். மெக்காலே கல்வி முறை மீது காந்திக்கு உடன்பாடு இல்லை. தாய்மொழிக் கல்வி, சுற்றுச் சூழல் கல்வி, குடிமைப் பண்புகளை வளர்க்கும் கல்வியை வலியுறுத்தி உள்ளார். காந்தியின் கல்வி சார்ந்த கண்ணோட்டங்கள் இந்த சமூகத்தை மனித நேயமுள்ளதாக கட்டமைக்கும் வல்லமை பெற்றவை; காந்தி ஒழுக்கம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார். ”கல்வியானது, சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டும்” என்கிறார். ‘சுயமரியாதை’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் காந்தி. காந்தி அரசியல் குறித்து பேசியது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ...
கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கும் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டார் பினராய் விஜயன். ஆனால், ”தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதியோம்” என்று சொல்லிக் கொண்டே, பின்வாசல் வழியாக அதை உருவாக்கி வெற்றிகரமாக ஸ்டாலின் செயல்படுத்தும் தந்திரத்தை அவர் விரும்பவில்லை; பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை பெறுவதற்காக கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பால், அது பின்வாங்கப்பட்டது. ஓரு இடதுசாரி கூட்டணி அரசில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியே தடம் புரண்டாலும், அதை சமூகத்தின் நன்மைக்காக ...
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்’ என்பதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களாக்கும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் அக்டோபேர்-17, 2025-ல் நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவுகளை, பாதிப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை; இந்த சட்டம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வழிகோலுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் அறிவித்தார். உண்மையில் கல்வியின் தரம் உயருமா? ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை உத்திரவாதப்படுத்துமா?, அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர், ...
மிகப் பிரம்மாண்டமாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வரோடு, தெலுங்கானா முதல்வரும் கலந்து கொண்டு பேசினார். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். நல்லது. தமிழகத்தின் உண்மையான கல்வி நிலைமை என்னவென்று உள்ளதை உள்ளவாறு பார்ப்போம்; பார்க்கப் பார்க்க நெகிழ்ச்சி தந்தது! மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை தந்தது! நேற்றைய தினம் கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்வைப் பார்த்த பலரின் அனுபவங்களும் இப்படித் தான் இருக்கும்! தைவானில் படிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள்! நியூயார்க்கில் படிக்கும் ஆட்டோ ...
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளான ஆசிரியர் சமூகத்திடம் ஒரு அச்ச உணர்வும், ஆற்றாமையும், நிராதரவாக நிற்கும் மனநிலையும் தென்படுகிறது. சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ள – தர்மத்திற்கே தலை குனிவை தரும் – ஒரவஞ்சனையான இந்த தேர்வின் பின்னுள்ள சூழ்ச்சிகள் குறித்த ஒரு அலசல்; தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்க்கையை ஊசலாட்டதிற்கு தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET ) ...
”ஆகா, நல்ல முயற்சி வரவேற்கலாமே” என்று தான் முதல் பார்வையில் பார்க்கும் போது தோன்றும். குறைந்த கட்டணம்! நல்ல தொழில் நுட்ப வசதிகள்! சர்வதேச தரத்திலான ஊடகப் பயிற்சி! ஆகிய சிறப்பம்சங்கள்…! தமிழ்நாடு அரசு இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் ( Institute of Journalism and Media Studies) ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதில் ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) கற்க வகை செய்யப்பட்டுள்ள விஷயத்தை ...




















