அரசு பள்ளிகள் பல அடைப்படை வசதிகள் இன்றி அல்லாடிக் கொண்டுள்ளன! ஆனால், இங்கு தமிழக அரசோ, தனியார் பள்ளிகளை போஷிக்கிறது. கல்லா கட்டும் கல்வி வியாபாரிகளான தனியார் பள்ளி முதலாளிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் பாராட்டு விழா! விருதுகள்! இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? கடந்த வியாழக்கிழமை 11/07/2024 அன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பை கூர்ந்து கவனித்தால், அதிர்ச்சி அளிக்கிறது! ஆம், தமிழ்நாடு அரசு  கடந்த கல்வி ஆண்டில், பொதுத் தேர்வில் 10&12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ...

தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ் மண்ணுக்கான கல்வி கொள்கையை வகுப்போம் என்றவர்கள் அறிக்கையை வெளியிடாமல் பம்முவது ஏன்?  குழுவில் உள்ள கல்வியாளர்களுக்கே காட்டப்படாத இறுதி அறிக்கை! பொதுவெளியில் வைக்க தயக்கம் ஏன்?  நீதிபதி ஊடகங்களிடம் பேசப் பயந்து ஓடியது ஏன்? இன்றைக்கு தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து மாநில கல்வி கொள்கைக்கான அறிக்கையை கல்வியாளர்கள் குழு தந்தது! வழக்கமாக இது போன்ற அறிக்கையின் முழு வடிவமோ அல்லது முப்பது பக்கங்கள் கொண்ட சாராம்சமோ ஊடகங்களுக்கு தரப்படும். இவை தரப்படவில்லை. குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து ...

நீட் தேர்வில் எக்கச்சக்க சிக்கல்கள்!  வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், ஊழல், கருணை மதிப்பெண்கள், தேர்வு முடிவுகளில் குளறுபடி..என  அம்பலமாகி வருகின்றது. நீட், க்யூட், நெட் போன்ற தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ  என்பது யார் ஆதாயம் பெற இயங்குகிறது..? இந்த சூதின் வலைப் பின்னல்கள்  குறித்து ஒரு அலசல்; நீட் ஏற்படுத்திய கொதிப்பு அடங்குவதற்குள்,யு.ஜி.சி – நெட் தேர்வு மோசடி அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18 ந்தேதி நடைபெற்ற யு.ஜி.சி – நெட் தேர்வில்  முறைகேடுகள் நடத்திருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததாகக் கூறி, அடுத்த நாளே 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. டார்க் வெப், டெலிகிராம், வாட்சப்  போன்ற செயலிகளில் வினாத்தாள் ரூ5,000 முதல் 10,000 வரை சுமார் 6 லட்சத்திற்கு விற்கப்பட்டது ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளது. மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் , யு.ஜி தேர்வு  மே 15 ந்தேதி முதல் 24 தேதி வரை நாடு முழுவதும் 320 ...

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளை களைவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைகளை இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன.பாஜக எதிர்க்கிறது. கடும் விமர்சனங்களை பெற்றுள்ள பரிந்துரைகள் சரியானது தானா? பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பல பரிந்துரைகள் தந்துள்ளார். அவற்றுள் சில வரவேற்க தக்கன. இன்னும் சில விவாதிக்க வேண்டியன! நாங்குநேரி சம்பவத்தையும், அது போன்ற சம்பவங்களின் சமூகப் பின்புலத்தையும் ...

”இந்தப் பூமிப் பந்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் யார்?” எனக் கேட்டால், பல பெற்றோர்கள் ”தனியார் பள்ளிகளின் பிரின்சிபால்” என்பார்கள்! அடிமைகளை உருவாக்கி பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக  இவை  எப்படியெப்படி நுட்பமாகச் செயல்படுகின்றன எனப் பார்த்தால்.., மக்களின் முட்டாள் தனமே இவர்களின் மூலதனமாகிறது; கல்வி என்பது தனி நபர் வளர்ச்சி, தனி நபர் ஆதாயம் என்பதாகச் சுருக்கி புரிந்து கொண்டதன் வீழ்ச்சியாகத் தான் தனியார் பள்ளிகளின் வளரச்சியாகவும், அதிகரமாகவும் மாறி நிற்கிறது. மாறக, கல்வி என்பது சமூகத்தின் நன்மைக்கானது, தனி நபர் மனதை, குணத்தை மேம்படுத்துவது ...

‘பாமரர்களுக்கு எதற்கு கல்வி? பணம் படைத்தோரின் தேவைக்கே கல்வி’ என்பதே பாஜக அரசின் சித்தாந்தமாகும்! அதை செயல்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை! நீட், கியூட் போன்ற தேர்வுகள்..! உண்மைகளை தோலுரிக்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர்  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: மனித நேயம் சார்ந்த மருத்துவக் கல்வியை சந்தைப்படுத்தி, விற்பனைப் பொருளாக்கி, கல்லா கட்டுவதற்காக பாஜக அரசு செய்த சூழ்ச்சி தான்  “நீட்” ( neet) தேர்வாகும். அதே பாணியில் ப்ளஸ் டூ பிறகான மற்ற மேற்கல்வி படிக்க க்யூட்( ...

சுமார் 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் இடை நிலை ஆசிரியர்கள்!  இப்போதும் அவர்கள் போராட்டம் இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆரம்ப கல்வி என்பது அடிப்படையானது! ஆனால், அந்த ஆரம்ப பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் தமிழக அரசு படு அவல நிலையில் வைத்துள்ளதால் தான் இந்தப் போராட்டங்கள்; தற்போது பதினைந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.‌ தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. அவர்களது  கற்றல் இழப்புகளை எப்படி ஈடு செய்ய போகிறோம்? தமிழ்நாட்டின் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவிர்க்க இயலாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக சிதைத்து வருகின்றன! சென்னை, மதுரை பல்கலைக் கழகங்கள் அரசின் பல்கலைக் கழகங்களில்லையாம்! பல நூறு கோடி வரி விதிப்பார்களாம்..! பல மாதங்கள் சம்பள பாக்கி! தமிழக அரசு மெளனிக்கிறது! உண்மையான பின்னணி என்ன? இது வெறும் நிதி பற்றாக் குறை பிரச்சினை மட்டுமா? நேர்மை பற்றாக்குறையும், நிர்வாக திறனின்மையும் கூடத் தான்! 1990 தொடங்கி அடுத்தடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்களின்  கறைபடிந்த செயல்பாடுகளும், அவர்களோடு கைகோர்த்த கல்வியாளர்களின் பேராசைகளும் ...

சீக்கிய சமூகத்தின் வழிகாட்டியான குரு நானக் அவர்களின் பெயரால் சென்னை வேளச்சேரியில் நடத்தப்படும் குருநானக் கல்லூரி நிர்வாகி மஞ்சித் சிங் நையரும், உயர்கல்வித் துறை அதிகாரி ராவணனும் கூட்டு சேர்ந்து பேராசியர்களிடமும், ஏழை மாணவர்களிடமும் நடத்தும் வசூல் வேட்டைக்கு ஒரு அளவில்லையா…? ஏழை, எளிய குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்வதற்காக சீக்கிய மதத்தினரால் சென்னையில் குரு நானக் கல்லூரி உருவாக்கப்பட்டது.  குருநானக் அவர்களின் உயர்ந்த லட்சியங்களை பின்பற்றி, சீக்கிய பெரியோர்களால் உருவாக்கப்பட்ட குருநானக் கல்லூரி தற்பொழுது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த ...