காந்தியடிகள் கல்வி பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்டவர். மெக்காலே கல்வி முறை மீது காந்திக்கு உடன்பாடு இல்லை. தாய்மொழிக் கல்வி, சுற்றுச் சூழல் கல்வி, குடிமைப் பண்புகளை வளர்க்கும் கல்வியை வலியுறுத்தி உள்ளார்.  காந்தியின் கல்வி சார்ந்த கண்ணோட்டங்கள் இந்த சமூகத்தை மனித நேயமுள்ளதாக கட்டமைக்கும் வல்லமை பெற்றவை; காந்தி ஒழுக்கம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார். ”கல்வியானது, சுயமரியாதையோடு வாழச் செய்ய வேண்டும்” என்கிறார். ‘சுயமரியாதை’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் காந்தி. காந்தி அரசியல் குறித்து பேசியது  எல்லாருக்கும் தெரியும். ஆனால் ...

கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கும் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டார் பினராய் விஜயன். ஆனால், ”தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதியோம்” என்று சொல்லிக் கொண்டே, பின்வாசல் வழியாக அதை உருவாக்கி வெற்றிகரமாக ஸ்டாலின் செயல்படுத்தும் தந்திரத்தை அவர் விரும்பவில்லை; பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை பெறுவதற்காக கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பால், அது பின்வாங்கப்பட்டது. ஓரு இடதுசாரி கூட்டணி அரசில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியே தடம் புரண்டாலும், அதை சமூகத்தின் நன்மைக்காக ...

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ‘பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்’ என்பதாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களாக்கும்  மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் அக்டோபேர்-17, 2025-ல் நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவுகளை, பாதிப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை; இந்த சட்டம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வழிகோலுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் அறிவித்தார். உண்மையில் கல்வியின் தரம் உயருமா? ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை உத்திரவாதப்படுத்துமா?, அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர், ...

மிகப் பிரம்மாண்டமாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வரோடு, தெலுங்கானா முதல்வரும் கலந்து கொண்டு பேசினார். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். நல்லது. தமிழகத்தின் உண்மையான கல்வி நிலைமை என்னவென்று உள்ளதை உள்ளவாறு பார்ப்போம்; பார்க்கப் பார்க்க நெகிழ்ச்சி தந்தது! மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை தந்தது! நேற்றைய தினம் கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்வைப் பார்த்த பலரின் அனுபவங்களும் இப்படித் தான் இருக்கும்! தைவானில் படிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள்! நியூயார்க்கில் படிக்கும் ஆட்டோ ...

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளான ஆசிரியர் சமூகத்திடம் ஒரு அச்ச உணர்வும், ஆற்றாமையும், நிராதரவாக நிற்கும் மனநிலையும் தென்படுகிறது. சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி  உள்ள – தர்மத்திற்கே தலை குனிவை தரும் – ஒரவஞ்சனையான இந்த தேர்வின் பின்னுள்ள சூழ்ச்சிகள் குறித்த ஒரு அலசல்; தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்க்கையை ஊசலாட்டதிற்கு தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET )  ...

”ஆகா, நல்ல முயற்சி வரவேற்கலாமே” என்று தான் முதல் பார்வையில் பார்க்கும் போது தோன்றும். குறைந்த கட்டணம்! நல்ல தொழில் நுட்ப வசதிகள்! சர்வதேச தரத்திலான ஊடகப் பயிற்சி! ஆகிய சிறப்பம்சங்கள்…! தமிழ்நாடு அரசு இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் ( Institute of Journalism and Media Studies) ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதில் ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) கற்க வகை செய்யப்பட்டுள்ள விஷயத்தை  ...

கல்வித் துறையில் இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு! தலை சிறந்து விளங்கிய தமிழ்நாட்டை தலை குப்புற வீழ்த்தியே தீருவது என முடிவெடுத்து விட்டார்கள்! அதற்குத் தான் தற்போது செயல் வடிவம் தந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதாவது, வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் பள்ளி படிப்பு படித்த மாணவர்களில் 10 முதல் 15 சதவிகிதமானவர்களே உயர்கல்வி படிக்க வருகின்றனர். ஆனால், தமிழகத்திலோ சுமார் 70 சதவிகித மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அவர்களுக்கு ...

கல்வியாளர்கள் குழு தந்த தமிழ்நாட்டிற்கு என தனித்துவமாக  உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை  என்னவானது..? அதிகாரிகள் எழுதுவதே கல்வி கொள்கையாகுமா? தேசியக் கல்விக் கொள்கையின் தீய அம்சங்களே தீஞ்சுவையாய் தமிழ் பெயர்களில் தமிழகத்திற்கான கல்வி கொள்கையாக தேன் தடவி தரப்பட்டுள்ளதா..?  அலசுகிறார் யோகராஜன்; முன்னுரை : பள்ளிக் கல்வி செயலர் சந்திரமோகனின் (Times of India நாள் 09-08-25) பேட்டி திடுக்கிட வைக்கிறது. ‘அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அளித்த மூன்று பாகங்கள் கொண்ட கல்விக் கொள்கை நீளமான இருந்தது. அதில் பள்ளிக் கல்விக் கொள்கையை ...

பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை சொதப்பல்களா?  இருக்கக் கூடாத அம்சங்கள் இத்தனையா? இது எப்படியெல்லாம் தேசிய கல்விக் கொள்கைக்கு பல விதங்களிலும் ஒத்திசைவாக உள்ளது என்பதை விவரிக்கிறார் கல்வியாளர் ஜவகர் நேசன்; தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக வெளியாகியிருக்கிறது. அதுவும் முழுமையானதாக இல்லை. பகுதி பகுதியாக இருக்கிறது. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை வெளியாவது, இதுவே முதன் முறை. பொதுக் கொள்கைக்குரிய ...

என்ன தான் நடந்திருக்கிறது கல்விக் கொள்கை உருவாக்கத்தில்? பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது என்ற வகையில் ஒரு சாகஸ நாடகம் அரங்கேறியுள்ளது. வெளியிடப்பட்டு இருப்பது சில அறிவிப்புகளாக உள்ளனவே ஒழிய, எங்கே இதில் கல்வி கொள்கை உள்ளது? எனக் கேட்கின்றனர் கல்வியாளர்கள்; தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தடபுடலாக வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கல்வி குறித்த கோட்பாடோ, கொள்கையோ,தெளிவான பார்வையோ எதுவுமின்றி, வெறுமே தற்போதைய ஆட்சி செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த சுய தம்பட்டமே வெளிப்பட்டுள்ளது. ...