பிளஸ் 2  அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள்  இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது.. மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்கு ஒரு ஆசிரியராக, சமூக ஆய்வாளராக இங்கே நான் பல காரணங்களைச் சொல்ல முடியும். குடும்பச் சூழல்கள், குடும்ப வருவாய்க்காக உழைப்பில் ஈடுபடுதல், பெற்றோரின் அறியாமை, பெற்றோர்களை இழந்திருத்தல், மது, ...

அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளது. ‘இந்தியாவில் உள்ள 22 மொழிகளை இல்லாமலாக்கி, இந்தியை மட்டுமே ஒற்றை ஆதிக்க மொழியாக்கும் முயற்சி எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்பதை  விவாதிக்க தாய்மொழிகளை பாதுகாக்கும் மாநாடு நடக்க உள்ளது! இந்தியா மொழிகளின் தேசம். இந்தியா என்ற இப் பிரதேசம் உண்மையில் உலக நாகரீகத்தின் தொட்டில். 65,000 ஆண்டுகளாக இங்கே பல்வேறு வகையிலான மனிதர்களின் இடப் பெயர்ச்சி நடந்து கொண்டே இருந்துள்ளது.  இதன் காரணமாக எத்தனை, எத்தனையோ அறிவுத் துறைகளும், மொழிகளும், சிந்தனைகளும் ...

கஸ்தூரிரங்கன் குழுவின் தேசிய கல்விக் கொள்கை வரைவு கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதலை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாகவே  தெரிகிறது. சாவித்திரிபாய் பூலே தொடங்கி  ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், அம்பேத்கர்.. உள்ளிட்டோர் கல்வித் தளத்தில் ஆற்றிய பங்கை  மடைமாற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்த ஒரு பார்வை! இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950ல் இயற்றப்பட்டது. சட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது 14ஆவது வயது முடியும் வரை  இலவச கட்டாய கல்வி தர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும் என அரசியலமைப்புச் ...

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வர உள்ளன! இதை இடதுசாரிகளும், தேச பக்த அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன!  ‘இது கல்வி கட்டணங்கள் தாறுமாறாவதற்கும்,  உயர் கல்வி கட்டமைப்பு சீர்குலைவதோடு, இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாக முடியலாம்’ போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன! கல்வியின் பெருமையை உலகறிய உரக்கச் சொன்ன வள்ளுவர் தோன்றிய திருநாட்டில் விரைவில் அயலக உயர் கல்வி நிலையங்கள் வரவிருக்கின்றன. நன்மை தரும் எதுவாக இருப்பினும் வரவேற்பதும், போற்றுவதும் அறிவுடைமையே. ஆனால், இது நன்மை தருமா? என்பதை பார்க்க வேண்டும். இந்திய தேசிய விடுதலை போராளியும், ...

நீட் தேர்வு எதற்காக கொண்டு வரப்பட்டது. யாருடைய நலனுக்காக கொண்டு வரப்பட்டது, ‘நீட் விலக்கு மசோதா’ நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு என்ன காரணம்? நீட் விலக்கு விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டுள்ளது..? அனைத்தையும் மிக எளிமையாக, துல்லியமாக விளக்குகிறார், பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு. தமிழ்நாடு மக்களின் ஐந்து வருடப் போராட்டத்தின் விளைவாக,  மக்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றம்  “நீட்” விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழ்நாடு ஆளுநர், ஐந்து மாத காலத்திற்கு நீட் விலக்கு ...

பாஜக அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் செயல்வடிவமே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் ! ‘தரமான இலவச கல்வி தரக் கூடாது’ என்பதைத் தான் இலைமறைக் காயாக பல திட்டங்களின் வழியே செயல்படுத்து கின்றனர். ..! நம்ம ஸ்கூல் திட்டத்தின்  தலைவராக கல்விச் சேவைக்கு சம்பந்தமில்லாத டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் வேணு சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக உலக சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வ நாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஏன் வருகின்றனர் என்றால் , பாஜக அரசின்  புதிய தேசியக் ...

மூன்று தலைமுறைகள் தமிழ் தெரியாமல் உருவாகியுள்ளன! இளம் தலைமுறையினருக்கு தாய்மொழியே அன்னியமாகி விட்டது. பள்ளிகளில் தமிழை கற்பிக்க தமிழ்நாட்டில் 1968 தொடங்கி, இன்று வரை பல ஆணைகள், சட்டங்கள் போட்டுள்ள போதிலும், கல்வி நிலையங்களில் தமிழ் காணாமல் போன மர்மம் என்ன..? தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்த இயக்கம் திமுக! ஆனால், அப்படி ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கல்விக்கூடங்களில் முன்பு இருந்த தமிழ் ஏன் தற்போது இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது! ...

பள்ளிக்கல்வி சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் தீர்வை -4 அரசு பள்ளிகளை சிறுகச் சிறுக அழித்து தனியாரிடம் கையளிக்கும் திட்டம், தேசியப் பின்னணியை மட்டும் கொண்டதல்ல, இதில் சர்வதேச பின்னணியும் உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் அவல நிலையில் அழிவை நோக்கி நகர்வதும், தனியார் பள்ளிகள் தழைத்தோங்கி செழிப்பதற்கும் என்ன காரணம்? பள்ளிக் கல்வியில் இத்தனை சிக்கல்களின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். ஏன், இந்த சிக்கல்கள் தோன்றின ? இதற்கு தீர்வு எங்கிருக்கிறது? என்று பார்க்க வேண்டும்! 1990 களின் ...

அதிமுக ஆட்சியில் பிளஸ் 2, மற்றும் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவசமாக லேப் – டாப்கள் வழங்கப்பட்டன! திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், புதிய லேப்டாப்களும் தரவில்லை, அதிமுக ஆட்சியில் தேங்கிய 56,000 லேப்டாப்களையும் தரவில்லை. இவற்றை முடக்கி வைத்துள்ளதன் பின்னணி என்ன? தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் செப்டம்பர்  2011 முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. அதிமுக ஆட்சியில் 38 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு ...

பள்ளிக் கல்வி சந்திக்கும் சிக்கல்கள் தீர்வை நோக்கி -3 தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழகத்தில் உட்புகுத்தப்பட்டு விட்டது. அதன் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ்கின்றன! கல்விக்கு இடையூறாக புதுப்புது திட்டங்கள்! சுதந்திரமற்ற நிலையில் ஆசிரியர்கள்! பாதுகாப்பற்ற நிலையில் பள்ளிகள்! அத்துமீறி அதிகாரம் செலுத்தும் அதிகாரிகள்..தீர்வு என்ன? கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதாகக் கூறி, முறைசாரா கல்வித் திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தி வருகிறது இன்றைய தமிழக அரசு. அதன் ஒரு பகுதி தான் இல்லம் தேடிக் கல்வி. மற்றொரு பகுதி தான் எமிஸ். இந்நாட்களில் ஆசிரியர் ...