வேறெப்போதையும் விட தற்போது மருத்துவர்களின் தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.  இன்றைக்கு மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் தழைத்தோங்கின்றன! அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் போதாமைகளால் திணறும் நிலை குறித்த ஒரு அலசல்; மக்கள் மருத்துவராகவும், மகத்தான மக்கள் தலைவராகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தின் மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தை பொறுத்த அளவில் அரசு மருத்துவர்கள் நிலை என்பது கொண்டாட்டத்திற்கு ஆனதாக இல்லாமல், திண்டாட்டத்திற்கானதாக உள்ளது என்பதே நிதர்சனம்! வியாதிகள் ...

அத்தி மரம் ஆன்மீகச் சிறப்பு பெற்றது. அத்தி மரத்தின் காய்,பழம், பட்டை போன்ற அனைத்தும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி மரத்தின் பெருமைகளை பறவைகள் கூட நன்கு அறிந்திருக்கின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க இயலாத ஒன்று அத்திப் பழமாகும்! நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த  கதைப் புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும் ‘1001 இரவுகள்’ என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன முக்கியமானதாகும். அவற்றில் வரும் கதை மாந்தர்கள் அத்திப் பழத்தை மிகவும் ருசித்து  சாப்பிடுவதாக  கதைகளில் வரும். ...

நோய்கள் தாக்க முடியாத கவசமே ஆடா தொடை! பொக்கிஷமான இந்த மூலிகை வீதி ஓரங்களில் தானாக முளைத்துக் கிடக்கிறது. இது இருதயம், இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் சளியாலும், வாய்வினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் மூலிகையாகும். இதன் பயன்களை பார்ப்போமா? “பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை தணிக்காத கோபதர்ற் றாகந் – தணிக்காமை யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால் மேலும் பிணிகளுறுமே” – தேரையர் நோய்கள் உடலில் உண்டாவதற்கான  காரணங்களை தேரையர் இந்தப் பாடல் விவரிக்கிறார். அதிக கோபம் மிக்க தாகம் மாறுபட்ட ...

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். பியூட்டி பார்லர் போகாமலே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் இருந்து தாய்ப் பால் சுரப்பு, பித்த வெடிப்பை சரி செய்தல்.. என ஏகப்பட்ட, வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவது எளிது, பலன்களோ பெரிது; வித்தியாசமான இதன் பேரைக் கேட்டதும், ‘இது அரிசி போன்று இருக்குமோ…’ என்று நினைக்க வேண்டாம்.  இது ஒரு மூலிகையே..! இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என்ற பெயரும் உண்டு. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை ...

அகத்திக் கீரை பயன்பாடு குறைவதால் அனாவசிய நோய்கள் உருவாகின்றன! அகத்திக் கீரையை பல வகைகளில் சமைக்கலாம். இது அகத்தை தூய்மையாக்கி, முகத்தை பொலிவாக்கும். மாத்திரை, மருந்து, மது  உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை தீர்க்கும். மருத்துவ செலவுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்; அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக் கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தியர் நிழலில் மூலிகை கொடிகள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை! அகத்தி என்பது அகத்தியருடன் தொடர்புடையது ...

தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய  வரலாறும், மருத்துவ குணங்களும் பிரமிக்கதக்கவை! பழந்தமிழர் தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!  இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல, பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி!  கிராம்பைத் தெரியாதவர் உண்டோ ? இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும், பெருவாரியாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் ...

கோவிஷீட்டு உற்பத்தியை நிறுத்தி விடுவதாக ‘ஆஸ்டராஜென்கா’ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு இளவயது மரணங்கள் உலகெங்கும் அதிகரித்து, இங்கிலாந்து, இந்திய நீதிமன்றங்களில் தடுப்பூசியின் பாதிப்பு வழக்குகள் குவிந்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலச வேண்டும்; சமீப காலமாக – கொரோனா தடுப்பூசிக்கு பிறகு – இளம் வயது மரணங்களை அதிகம் பார்க்கிறோம். நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் இளையோர் மாரடைப்பிலும், சுவாசம் திணறியும் இறக்கும் போது இதயம் ரணமாகிறது. கொரோனா மற்றும் தடுப்பூசியால் உயிரிழந்தோர் குறித்த தரவுகளை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்துவிட்டது அரசாங்கம். ஆகவே, எவ்வளவு ...

அவுரி உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் நாடு இந்தியா! அவுரி பயிர்களுக்கு பின்னணியில் பல அரிய வரலாற்று செய்திகள் உள்ளன! மனித குலத்திற்கு அளப்பரிய பயன்கள் தரும் அற்புத மூலிகை!  இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும். இன்னும் சொல்வதற்கு எத்தனையோ..! ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய  வந்ததற்கான காரணங்களில் முக்கியமானது ‘இங்கிருந்து சில  ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்கை சாயத்தை தரும் அவுரியைத் தேடித் தான்’ என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் . அப்போது அது இண்டிகோ ...

கொரானாவில் மரணித்தவர்களை விட அதற்கான தடுப்பூசிகளால் இறந்தவர்களும், கடும் பக்கவிளைவுகளை பார்த்தவர்களுமாக உலககெங்கும் செய்திகள்! இனி, மனித இனம் கொரோனா தடுப்பூசிக்கு முன், கொரோனா தடுப்பூசிக்கு பின் என்பதாக இருக்கப் போகிறது. கோவிஷீல்டு பாதிப்புகள் அதிர வைக்கின்றன..! கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயப்படுத்தி போடப்பட்ட பின் பல இளவயது திடீர் மரணங்கள், மாரடைப்பு, பக்கவாதம் என பல பக்க விளைவுகளை உலகம் முழுமையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்தச் சுழலில் இடியென வந்திருக்கிறது, கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான இரத்த உறைதலை ஏற்படுத்துவதோடு, மிக மோசமான ...

தன்னை சுற்றிலுமுள்ள பிரம்மாண்ட இயற்கையின் ஒரு அங்கமே மனிதன்!  யாவற்றையும் தானே ஆள்வதாக மனிதன்  நினைத்தாலும்,  இயற்கையால் தான் அவன் ஆளப்படுகிறான். இயற்கையின் கருணையே மனித வாழ்க்கை. நம் நோய்களுக்கான மருந்துகளை நமக்கு அருகிலேயே உருவாக்கி தரும் இயற்கையின் சூட்சுமங்களை பார்ப்போம்; பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கையின் ரகசியங்களை உணர்தலே ஆகும்.காலம் காலமாக இருப்பதை அது ஏன் என்று தான் அறிவியல் கேட்டு, பதில் பெறுகிறது . ஆப்பிள் என்றுமே காலம் ...