தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற பிரபல இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்து தமிழக மெடிக்கல் ஷாப்களிலும் பரவலாக விற்கப்பட்டவையே. தமிழ் நாட்டில் தரக்குறைவாக மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்கி பெருகியுள்ளதற்கு காரணம் என்ன? குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெட்ரோலில் இருந்து கிடைக்கும் ரசாயனமாகும். இது தொழிற்சாலை உபயோகத்திற்கும், பெயிண்ட் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதாகும். இதை இருமல் மருந்தில் ...
சிறுநீரக மாற்று முறை கேட்டை 30 ஆண்டுகளாக செய்யும் இந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவே முடியவில்லை. இதற்கு அரசு நிர்வாக ஒத்துழைப்புகள் தொடர்ந்து கிடைப்பது எப்படி? ஆயிரக்கணக்கில் ஏழைகள் ஏமாந்து கொண்டே உள்ளனர். புரோக்கர்களை நெருக்க முடியவில்லை! அரசியல் செல்வாக்கால் அநீதிகள் தொடர்கின்றன; தமிழகத்தில் உழைத்து வாழும் நெசவாளிகளின் வாழ்க்கை நிலை படுமோசமாக உள்ளது. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டுள்ளது. அரை வயிற்று கஞ்சியுடன் வாழ்க்கை அல்லாடுகிறது. திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் கொடுமையில் ...
இயற்கை கால்நடை மருத்துவ பேராசிரியர் புண்ணியமூர்த்தி நல்ல ஆய்வறிஞர். இவரது ஆய்வுகள் தமிழகம் தாண்டி இந்தியாவின் 30 மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் விதந்தோதப்படுவதோடு கடைபிடிக்கப்படுகின்றன. பல லட்சம் மாடுகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய இவரது சாதனைகள் குறித்த அலசல்; வாய்பேசத் தெரியாத ஜீவன்களான கால் நடைகளுக்கு என்னென்ன நோய்கள் எல்லாம் வருகின்றனவோ, அவற்றை எல்லாம் இயற்கை சார்ந்த அணுகுமுறையில் மிக எளிதாக, அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடிய வழிமுறைகளை இவர் முறையாக ஆய்வு செய்து அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு ...
எந்த ஒரு நல்ல விஷயமும் மக்களிடையே வரவேற்பு பெற்று காலூன்றும் போது பேராசைக்காரர்கள் அதை வேகமாக ஆக்கிரமித்து, செய்யக் கூடாதவற்றை செய்து மக்களை குழப்பி விடுகிறார்கள்! இங்கே மலர் மருத்துவத்தின் பெயரால் செய்யப்படும் அலப்பரைகள், மூடத்தனங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறார் மருத்துவர் துர்காதேவி; மலர் மருத்துவத்தின் தாயகம் இங்கிலாந்து. மலர் மருத்துவத்தைப் பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் முதல் முதலில் இவ்வுலகிற்கு கண்டுபிடித்து அறிவித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் எட்வர்ட் பேட்ச் அவர்கள் தான்! மலர் மருத்துவம் என்பது மனிதர்களோட மனதிற்கான மருத்துவம். என்பதையும், இதை ...
சீரகத்தின் மருத்துவ குணத்துக்கு அளவில்லை! செரிமான கோளாறுகளுக்கு தீர்வு தருவது மட்டுமல்ல, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது..! தோல் அரிப்பு தொடங்கி பல தொற்று நோய்களுக்கும் தீர்வு தரும் அரிய மருத்துவ அம்சங்கள் வரிசை கட்டி நிற்பதால், இது ஆரோக்கிய ரகசியங்கள் புதைந்துள்ள பொக்கிஷமாகும்; ‘பார்ப்பதற்கோ சாது… ஆனால் வெடித்துச் சிதறினால் தீப்பொறி…’ இந்தச் சொற்றொடர் சில வகையான மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது சமையலறையில் அமைதியாக மெளனம் காத்துக்கொண்டிருக்கும் சீரகத்துக்கு நன்குப் பொருந்தும். அதாவது சீரகத்தை மட்டும் கடித்துச் சாப்பிடும் போது, ...
இந்தியாவில் உற்பத்தி விலையைக் காட்டிலும் ஐந்து முதல் ஐம்பது மடங்கு வரையிலும் விலை வைக்கக் கூடிய ஒரே வணிகம் மருந்து, மாத்திரைகள் வர்த்தகம் தான்! இந்த நிலையில் மத்திய அரசு மலிவு விலை மருந்தகம் நடத்துகிறது. மாநில அரசும் மலிவு விலை மக்கள் மருந்தகம் என்று ஆரம்பிக்க உள்ளது. இதன் சாதக,பாதகங்களை பார்ப்போம்; ‘மலிவு விலை மக்கள் மருந்தகம் திட்டம்’ என்பது 2008 வாக்கில் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மருத்து, மத்திரை நிறுவனங்களின் பேராசை மற்றும் மருத்துவத் துறை ...
அறிவியலை எதிர்க்கிறார்களாம்! பிற்போக்குத்தனமாம். நடவடிக்கை பாயுமாம்! என்னென்ன அச்சுறுத்தல்கள்! வீடுகளில் சுகப் பிரசவம் என்பது பல மேலை நாடுகளில் இயல்பான ஒன்றாகும். இங்கோ கிரிமினல் குற்றம் போல மிரட்டுகிறார்கள்..! வீடுகளில் பிரசவங்கள் ஏன் நடக்கின்றன?எப்படி நடக்கின்றன..? என்ன தான் பிரச்சினை: அறிவியலின் பெயரால் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, வீட்டு சுகப் பிரசவங்களை அராஜகமாக ஒடுக்க நினைக்கிறது சுகாதாரத் துறை. தங்களுக்கு நிகழ்த்தப்படும் ஒரு தீமையில் இருந்து பெண்கள் விலகி நிற்பது எப்படி குற்றமாகும் என்கிறார்கள், இந்தப் பெண்கள்! நமது அதிகாரவர்க்கமோ, ”வீடுகளில் பிரசவம் செய்து ...
தமிழகத்தில் மருத்துவ துறை உச்சகட்ட அவலத்தில் உள்ளது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவர்களுக்கு துணை போகும் ஒரு சில மருத்துவர் சங்க தலைவர்களின் யோக்கியதை என்ன? இவர்கள் மருத்துவப் பணியே செய்யாமல் அதிகார மையத்தின் பவர் புரோக்கர்களாக வலம் வருவது எப்படி? சமீபத்தில் கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தையடுத்து நோயளிகளுக்கும், அவர்களோடு வருபவர்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இதனால் அரசு மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள ...
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவினர்களுக்கு அரசு மருத்துவமனைகளே விமோச்சனமாகும். இது உணர்ச்சிகரமாக அணுக வேண்டிய ஒற்றை சம்பவமல்ல! இங்கு மக்கள் சந்திக்க நேரும் துயரங்கள், மருத்துவர்களின் அணுகுமுறை, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையும் உள்ளடக்கியது; அரசு மருத்துவர் கத்திக்குத்தான சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர் அமைப்புகள் யாவரும், ”தாக்கிய இளைஞருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்” எனப் பேசி உள்ளனர். உயிர் காக்கும் ...
அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலை வலி போக்கும். அமைதியான தூக்கம் தரும்… போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; பல்களை பாதுகாக்கும், மன மகிழ்ச்சிக்கு என்று ஒரு மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும் , அதன் மணத்தை முகர்ந்தாலும் இன்னமும் அது மனதை மகிழ்விக்கிறது . பூ என்றாலே மணம் தான், மணம் ...




















