எந்த ஒரு நல்ல விஷயமும் மக்களிடையே வரவேற்பு பெற்று காலூன்றும் போது பேராசைக்காரர்கள் அதை வேகமாக ஆக்கிரமித்து, செய்யக் கூடாதவற்றை செய்து மக்களை குழப்பி விடுகிறார்கள்! இங்கே மலர் மருத்துவத்தின் பெயரால் செய்யப்படும் அலப்பரைகள், மூடத்தனங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறார் மருத்துவர் துர்காதேவி; மலர் மருத்துவத்தின் தாயகம் இங்கிலாந்து. மலர் மருத்துவத்தைப் பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் முதல் முதலில் இவ்வுலகிற்கு கண்டுபிடித்து அறிவித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் எட்வர்ட்  பேட்ச் அவர்கள் தான்! மலர் மருத்துவம் என்பது மனிதர்களோட மனதிற்கான மருத்துவம். என்பதையும், இதை ...

சீரகத்தின் மருத்துவ குணத்துக்கு அளவில்லை! செரிமான கோளாறுகளுக்கு தீர்வு தருவது மட்டுமல்ல, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது..! தோல் அரிப்பு தொடங்கி பல தொற்று நோய்களுக்கும் தீர்வு தரும் அரிய மருத்துவ அம்சங்கள் வரிசை கட்டி நிற்பதால், இது ஆரோக்கிய ரகசியங்கள் புதைந்துள்ள பொக்கிஷமாகும்; ‘பார்ப்பதற்கோ சாது… ஆனால் வெடித்துச் சிதறினால் தீப்பொறி…’ இந்தச் சொற்றொடர் சில வகையான மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது சமையலறையில் அமைதியாக மெளனம் காத்துக்கொண்டிருக்கும் சீரகத்துக்கு நன்குப் பொருந்தும். அதாவது சீரகத்தை மட்டும் கடித்துச் சாப்பிடும் போது, ...

இந்தியாவில் உற்பத்தி விலையைக் காட்டிலும் ஐந்து முதல் ஐம்பது மடங்கு வரையிலும் விலை வைக்கக் கூடிய ஒரே வணிகம் மருந்து, மாத்திரைகள் வர்த்தகம் தான்! இந்த நிலையில் மத்திய அரசு மலிவு விலை மருந்தகம் நடத்துகிறது. மாநில அரசும் மலிவு விலை மக்கள் மருந்தகம் என்று ஆரம்பிக்க உள்ளது. இதன் சாதக,பாதகங்களை பார்ப்போம்; ‘மலிவு விலை மக்கள் மருந்தகம் திட்டம்’ என்பது 2008 வாக்கில் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மருத்து, மத்திரை நிறுவனங்களின் பேராசை மற்றும் மருத்துவத் துறை ...

அறிவியலை எதிர்க்கிறார்களாம்!  பிற்போக்குத்தனமாம். நடவடிக்கை பாயுமாம்! என்னென்ன அச்சுறுத்தல்கள்! வீடுகளில் சுகப் பிரசவம் என்பது பல மேலை நாடுகளில் இயல்பான ஒன்றாகும். இங்கோ கிரிமினல் குற்றம் போல மிரட்டுகிறார்கள்..! வீடுகளில் பிரசவங்கள் ஏன் நடக்கின்றன?எப்படி நடக்கின்றன..? என்ன தான் பிரச்சினை: அறிவியலின் பெயரால்  அதிகார பலத்தைப் பயன்படுத்தி, வீட்டு சுகப் பிரசவங்களை அராஜகமாக ஒடுக்க நினைக்கிறது சுகாதாரத் துறை.  தங்களுக்கு நிகழ்த்தப்படும் ஒரு தீமையில் இருந்து பெண்கள் விலகி நிற்பது எப்படி குற்றமாகும் என்கிறார்கள், இந்தப் பெண்கள்! நமது அதிகாரவர்க்கமோ, ”வீடுகளில் பிரசவம் செய்து ...

தமிழகத்தில் மருத்துவ துறை உச்சகட்ட அவலத்தில் உள்ளது. நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவர்களுக்கு துணை போகும் ஒரு சில மருத்துவர் சங்க தலைவர்களின் யோக்கியதை என்ன? இவர்கள் மருத்துவப் பணியே செய்யாமல் அதிகார மையத்தின் பவர் புரோக்கர்களாக வலம் வருவது எப்படி? சமீபத்தில் கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தையடுத்து நோயளிகளுக்கும், அவர்களோடு வருபவர்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இதனால் அரசு மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள ...

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவினர்களுக்கு அரசு மருத்துவமனைகளே விமோச்சனமாகும். இது உணர்ச்சிகரமாக அணுக வேண்டிய ஒற்றை சம்பவமல்ல! இங்கு மக்கள் சந்திக்க நேரும் துயரங்கள், மருத்துவர்களின் அணுகுமுறை, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையும் உள்ளடக்கியது; அரசு மருத்துவர் கத்திக்குத்தான சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர் அமைப்புகள் யாவரும், ”தாக்கிய இளைஞருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்” எனப் பேசி உள்ளனர். உயிர் காக்கும் ...

அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல;  பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலை வலி போக்கும். அமைதியான தூக்கம் தரும்… போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; பல்களை பாதுகாக்கும், மன மகிழ்ச்சிக்கு  என்று ஒரு  மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும் , அதன் மணத்தை முகர்ந்தாலும் இன்னமும் அது மனதை  மகிழ்விக்கிறது . பூ  என்றாலே மணம் தான், மணம் ...

வேறெப்போதையும் விட தற்போது மருத்துவர்களின் தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.  இன்றைக்கு மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் தழைத்தோங்கின்றன! அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் போதாமைகளால் திணறும் நிலை குறித்த ஒரு அலசல்; மக்கள் மருத்துவராகவும், மகத்தான மக்கள் தலைவராகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தின் மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தை பொறுத்த அளவில் அரசு மருத்துவர்கள் நிலை என்பது கொண்டாட்டத்திற்கு ஆனதாக இல்லாமல், திண்டாட்டத்திற்கானதாக உள்ளது என்பதே நிதர்சனம்! வியாதிகள் ...

அத்தி மரம் ஆன்மீகச் சிறப்பு பெற்றது. அத்தி மரத்தின் காய்,பழம், பட்டை போன்ற அனைத்தும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி மரத்தின் பெருமைகளை பறவைகள் கூட நன்கு அறிந்திருக்கின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க இயலாத ஒன்று அத்திப் பழமாகும்! நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த  கதைப் புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும் ‘1001 இரவுகள்’ என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன முக்கியமானதாகும். அவற்றில் வரும் கதை மாந்தர்கள் அத்திப் பழத்தை மிகவும் ருசித்து  சாப்பிடுவதாக  கதைகளில் வரும். ...

நோய்கள் தாக்க முடியாத கவசமே ஆடா தொடை! பொக்கிஷமான இந்த மூலிகை வீதி ஓரங்களில் தானாக முளைத்துக் கிடக்கிறது. இது இருதயம், இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் சளியாலும், வாய்வினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் மூலிகையாகும். இதன் பயன்களை பார்ப்போமா? “பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை தணிக்காத கோபதர்ற் றாகந் – தணிக்காமை யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால் மேலும் பிணிகளுறுமே” – தேரையர் நோய்கள் உடலில் உண்டாவதற்கான  காரணங்களை தேரையர் இந்தப் பாடல் விவரிக்கிறார். அதிக கோபம் மிக்க தாகம் மாறுபட்ட ...