கால்கள் செயல் திறனற்ற ஊனமுற்ற பேராசிரியரைக் கண்டு இவ்வளவு பயப்படுவானேன்..? உரிய காரணங்களின்றி பத்தாண்டுகள் சிறைவாசம்! அவ்வளவு பயங்கரவாதியா இவர்? செய்த குற்றமென்ன..? மனித உரிமை செயற்பாட்டாளராக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமா? அரசின் பதற்றத்திற்கு காரணமென்ன..? பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மும்பை உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 5 வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டது முதல் சக்கர நாற்காலியே கதியாக வளர்ந்த சாய்பாபா தனது விடா முயற்சியாலும், தளராத நம்பிக்கையினாலும் படித்து  தில்லி பல்கலைக்கழக பேராசிரியரானவர். ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ...

சமகாலத்தின் மையப் பிரச்சினையான பெரு நிறுவனங்களின் கனிம வளக் கொள்ளை, தீவிரவாதம், பழங்குடிகளுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சினிமா தான் விடுதலை. வெற்றி மாறன் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்? கதைக் களத்திற்கான தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு, காட்சிகளின் வழியே விரியும் சினிமா மொழி.. ஆகியவற்றில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கலையின் நோக்கம் தான் முக்கியமானது! படத்தின் ஆரம்பமே தமிழர் படை வைத்த வெடி குண்டால் ரயில் கவிழ்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதுவும் இந்தக் காட்சி தேவையின்றி ...

31 வருட நெடிய போராட்டத்திற்கு பிறகு இன்று விடுதலை ஆகி உள்ளேன்! இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகத் தான் இது சாத்தியமானது! எங்கள் 6 பேர் விடுதலைக்கு எத்தனையெத்தனையோ நல்ல உள்ளங்கள் பாடுபட்டன என உணர்ச்சிகரமானார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மே 21, 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதையடுத்து 26 பேர் கைதாயினர்! இதில் முக்கிய குற்றவாளிகளான தனு, சிவராஜன் உள்ளிட்ட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்! ...

அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம் ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர். ”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர். ”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ...

போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்! ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது ...

வீரப்பனின் அண்ணன்,  மாதையன் 33 வருடங்களாக சிறையிலேயே இருந்து 74 வயதில் சமீபத்தில் இறந்து போனார்.இது போல முதுமையையும் நோய்களையும் சுமந்து கொண்டு மரணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடிவதில்லை? சிறைச் சாலைகளில் ஏன் மனித உரிமைகளுக்கு மரியாதை இல்லை? ”மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது”, என்று இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  வந்த போது, மாதையன் தன்னிடம் சொன்னதாக, நீண்டகால சிறைவாசியாக இருந்த ...

31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு! சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு ...