விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...

அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை ...

விவசாயத்திற்கு சவாலா காலகட்டத்தில் நாம் உள்ளோம். பழைய காலத்தில் இருந்த பண்ணை அடிமைத்துவத்தை நவீன வடிவில் அமல்படுத்தவே மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டங்களுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கும் மேலாக தலை நகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்! அந்த போராட்டத்திற்கு பகிரங்கமாக சட்டசபையில் ஆதரவு நல்கி, விவசாய பட்ஜெட் தொடங்கப்படுவதற்கு ஒரு தெளிவும்,துணிவும் வேண்டும். அதை நாம் இந்த ஆட்சியாளரகளிடம் பார்க்க முடிந்ததே ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்தகட்டமாக சென்ற அடிமை ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கேடு ...