நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆசைகள் நிராசைகள்,விருப்புகள், வெறுப்புகள்,பொறாமைகள், இயலாமைகள்,பாலியல் தவிப்புகள் ஆகியவற்றை துல்லியமாக தன் படைப்புகளில் கொண்டு வந்து அசத்திய மாபெரும் படைப்பாளி தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நடக்கிறது! பேசப்படாத நுண்ணுர்வுகளை மையமாகக் கொண்ட நுட்பமான கதாபாத்திரங்களை தந்தவர் என்ற வகையில் அவர் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்! “இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தால் கடையில  ஒரு தராசை வாங்கிட்டு வாங்க” என்று  சொல்லுவது  ஒரு பழைய பேப்பர்காரர். ...

இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்! ‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி,, இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்!’ என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது! என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் ...

பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம்  பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன! மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து  ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு  வரலாற்று  நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில்  உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. ...

இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார். வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள்  முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை ...

ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை. “ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன். ”ஏன்..?  என்றார். “இல்ல தோழர், முன்பு நீங்கள் ...