அறம் வாசக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்! அறம் நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்து பயணிக்க தொடங்கிவிட்டது! நாள்தோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன! படிக்கும் வாசகர்களால் மேன்மேலும் பகிரப்படுவதன் வாயிலாகவே இந்த வாசகர்தளம் வளர்ந்து கொண்டுள்ளது! வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக அறம் வந்து கொண்டுள்ளது. ஆணவமிக்க அதிகாரமையத்திற்கு எதிரான அறச் சீற்றங்கள் சமரசமற்ற விமர்சனங்கள்! எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படும்,குழப்பமற்ற தெளிவான பார்வை! பாசாங்கில்லாமல் நேர்பட எழுதும் எளிமை! இவையே அறத்தின் இயல்பாக வெளிப்பட்டு வருவதை நீங்கள் உணரலாம்! ‘ஊருக்கு உழைத்திடல் ...
தமிழைப் போன்ற தலைசிறந்த மொழியும் இல்லை தமிழைப் போல அரசியல்படுத்தி, அலட்சியப்படுத்தப்பட்ட மொழியும் உலகில் வேறில்லை! உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றான தமிழை செம்மொழியாக அறிவிக்கவைக்க ஒரு அரசியல் அழுத்தம் தேவைப்பட்டது! அந்த அரசியல் அழுத்தமே இன்றைய அதன் அலட்சியத்திற்கும் காரணமாயிற்று! தமிழை செம்மொழியாக்கியது அதன் தகுதியால் மட்டுமல்ல, அரசியல் அழுத்ததால் தான் அது சாத்தியமாயிற்று என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது! ஆகவே, அது போன்ற அழுத்ததை தெலுங்கு,கன்னட,மலியாளம்,ஒடியா மொழி அரசியல்வாதிகளும் செய்து செம்மொழி அந்தஸ்து பெற்ற அவலம் நடந்தேறியது! செம்மொழிக்கான ஆராய்ச்சி, அதன் சிறப்புகளை ...
இலக்கியம்,அரசியல்,தத்துவம், திரைப்பட ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என சர்வதேச தளத்தில் இயங்கி வருபவர் யமுனா ராஜேந்திரன். ஜெயமோகனின் துவேஷ இலக்கியச் செயல்பாடுகள், பெண் புரட்சியாளர் ரோசா லுக்சம்பர்க், உலக அளவில் இன்றைய கம்யூனிச செயல்பாடுகள், ரஷ்யாவில் நடப்பது என்ன..? இலங்கை நிலவரம் ஆகியவை பற்றி யமுனா ராஜேந்திரன் பீட்டர் துரைராஜிடம் பேசியவை! ஜெயமோகனுக்கு ஆர்எஸ்எஸ் தந்திருக்கும் புராஜக்ட்தான் கம்யூனிஸ்டுகளை அவமானகரமாக விமர்சித்துக் கொண்டேயிருப்பது என்று சொல்கிறீர்கள். அவரை பொன்னீலன், கோவை ஞானி, பவா.செல்லதுரை போன்ற மார்க்சியர்களே தாங்கிப் பிடிக்கிறார்களே? ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் ...
கவிதை மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக் கட்டுரைகள் என்று தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் செயல்பட்டு வருபவர் யமுனா ராஜேந்திரன். உத்தமவில்லன், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரசியல் சினிமா: 16 இயக்குநர்கள் போன்ற 45க்கும் மேலான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் கோயமுத்தூரைச் சார்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இடதுசாரி நிலையில் இருந்து நிகழ்வுகளைக் கறாராக மதிப்பீடு செய்யும் இவரை நேர்காணல் செய்தோம். சர்வதேசப் பண்பாட்டு நிலமைகள், ஜெயமோகன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோரது கருத்தியல், கம்யூனிசத்தின் இன்றைய ...
நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆசைகள் நிராசைகள்,விருப்புகள், வெறுப்புகள்,பொறாமைகள், இயலாமைகள்,பாலியல் தவிப்புகள் ஆகியவற்றை துல்லியமாக தன் படைப்புகளில் கொண்டு வந்து அசத்திய மாபெரும் படைப்பாளி தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நடக்கிறது! பேசப்படாத நுண்ணுர்வுகளை மையமாகக் கொண்ட நுட்பமான கதாபாத்திரங்களை தந்தவர் என்ற வகையில் அவர் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்! “இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தால் கடையில ஒரு தராசை வாங்கிட்டு வாங்க” என்று சொல்லுவது ஒரு பழைய பேப்பர்காரர். ...
இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்! ‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி,, இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்!’ என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது! என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் ...
பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம் பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன! மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. ...
இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார். வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள் முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை ...
ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை. “ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன். ”ஏன்..? என்றார். “இல்ல தோழர், முன்பு நீங்கள் ...



















