இசைத் துறையில் இணையற்ற சாதனையாளராக இளையராஜா போற்றப்படுகிறார். இசைத்துறையில் ஒரு மகத்தான ஆளுமையே இளையராஜா. ஆனால், அவர் மட்டுமே சாதனையாளரல்ல! அத்துடன் அவரது சாதனைக்கு அடித்தளமிட்ட இசைமேதைகள் பற்பலர். அந்த குருமார்களை நினைவு கூர்வதும் ஒர் கடமையல்லவா?: இளையராஜா பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். ஆனால், அவர் ஒரு கற்பூர புத்தி கொண்டவர். அதனால் தன்னைச் சுற்றிலும் உள்ள கிராமத்து மக்களிடமிருந்தும், தன் காலத்திய இசை மேதைகளிடமிருந்தும் வெளிப்பட்ட இசையை அவர் மிகச் சிறப்பாக ...

தமிழ் சினிமாவின் மகத்தான அடையாளங்களில் ஒன்று கலைத் தாயின் தலைமகன் சிவாஜி வாழ்ந்த வீடான அன்னை இல்லம். தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய சொல்லும் அளவுக்கு உள்ள அந்த இடம் சிவாஜியின் நினைவு இல்லமாக்கப்பட்டு, அவரது சாதனைகளை நினைவூட்டும் கண்காட்சி மற்றும் ஆவணங்களுடன் பராமரிக்கப்படுமா? இதன்  கம்பீரமும், அழகும் மட்டும் இதற்கு காரணமல்ல, கலைத் தாயின் தலை மகனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து, நடமாடிய இடம். அப்படிப்பட்ட அன்னை இல்லத்தை இன்று நீதி மன்றம் ஜப்தி செய்ய ஆணையிட்ட செய்தி தமிழக ...

பிப்ரவரி-23 , 2025 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்த சென்னை பல்கலைக்கழக பவள விழா அரங்கில் ஓர் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன், பறை இசைக் கலைஞர் வேல் முருகன் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதானது, இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழக  பாரம்பரிய நிகழ்த்துக் கலை ஆசான்களுக்கு தரப்பட்ட  பத்மஸ்ரீ விருதுகளாகும். அந்த இரு ஆசான்களையும் கௌரவிக்கும் வகையில் நாடகக் கலைஞர் போதிவனம் பதிப்பக நிறுவனர், நண்பர் கருணா பிரசாத், ஒரு மாபெரும் ...

சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர் குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு புனித பிம்பத்தை கட்டமைத்து, தங்களவராக சித்தரித்தனர். டி.எம்.கிருஷ்ணா பேசிய உண்மை சுடுகிறதா..? ஒரு அலசல்; ”எம்.எஸ். அம்மாவை இழிவாக பேசிவிட்டார், அவரது நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்… ஆகவே, டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது” என  முழங்குகிறார்கள் சிலர்! இவர்கள் நீதிமன்றம் சென்று  ‘இந்தாண்​டுக்கான எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை  பாடகர் ...

சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த ...

தமிழின் முதல் சமூக நாடகமாகவும், திரைப்படமாகவும் கருதப்படும் டம்பாச்சாரி 150 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்ச் சமூகம் சந்தித்த அவலங்களை அப்பட்டமாக தோலுரித்தது. அதன் தாக்கம் முக்கால் நூற்றாண்டு நீடித்தது. டம்பாச்சாரியும், ரத்தக் கண்ணீரும் காட்டும் சமூக  நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன; எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ரத்தக் கண்ணீர் நாடகமும், திரைப்படமும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் வெளியான பிறகும் ஊர்தோறும் ரத்தக் கண்ணீர் நாடகத்தை சுமார் கால் நூற்றாண்டுகள் நடத்தியிருப்பார் எம்.ஆர்.ராதா! ரத்தக் கண்ணீர் நாடகத்தை எழுதியது திருவாருர் தங்கராசு. இவர் ...

இளையராஜா இத்தனை வயதுக்கு பிறகாவது பெருந்தன்மையையும், பக்குவத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அவர் தன் பேராசையால் பெருமளவு நட்பு வட்டாரத்தை இழந்தது போதாதா..? திரை இசை பாடல்களுக்கு முழு உரிமை கோரும் இளையராஜா வழக்கு ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது; பல ஆண்டுகளாக திரை இசை பாடல்களுக்கு இளையராஜா முழு உரிமை கோரும் வழக்கில்  நேற்றைய தினமான ஏப்ரல்-24, 2024 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் கொண்ட அமர்வு கேட்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. “ பாடலின் வரிகள், பாடலைப் பாடும் ...

டி.எம்.கிருஷ்ணாவிற்கான சங்கீத கலாநிதி விருது சர்ச்சையானதில், பெரியார் தான் பார்ப்பன சமூகத்தின் ‘டார்கெட்டாகி’யுள்ளார்! கிருஷ்ணாவை ஆதரித்து பொதுச் சமூகமே வாள் சுழற்றிக் கொண்டுள்ளது. ஆனால், தன்னை முன்னிட்டு, பெரியார் தாக்கப்படுவது குறித்து, தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம்  சாதிப்பதன் பின்னணி இது தான்; கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து தான் பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்திரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ...

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவது சர்ச்சையாகி, பொதுத் தளத்தில் கிருஷ்ணாவிற்கு பேராதரவு ஏற்பட்டுள்ளது! பார்ப்பனர்களில் ஒரு தரப்பே கிருஷ்ணாவை ஆதரிப்பதால், அவர் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பெரியார் தாக்கப்படுவது குறித்து தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம் சாதிப்பது ஏன்? டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து ஊடகங்களில் கடந்த பத்தாண்டுகளாக முற்போக்காளராக அடையாளம் காட்டப்பட்டும், புகழப்பட்டும் வருகிறார்! திராவிட இயக்கத்தாரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் அவரை புகழ்கின்றனர். மீனவர் குப்பத்திற்கு சென்று அவர் கர்நாடக இசை கச்சேரி நடத்தியது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளானது. அதன் விளைவாக, ராமன் ...