சென்ற ஞாயிறு மாலை நேரம்..தேனாம்பேட்டை பிரதான பகுதியில் அமைந்திருந்த அலுவலக மேல் மாடியில் அந்த அரங்கநாடகம் துவங்கிய நேரத்தில் உள் நுழைந்தேன். உட்கார இடம் இல்லாமல் நண்பர்களின் துணையுடன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் உள்நுழைந்தேன். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஊடாட்டம் செய்ய வேண்டியது பற்றி படர்ந்து விரிந்து சென்றது ‘உள்ளூரம்’. இது வழக்கமான நாடகம் போல இல்லை, வாழ்க்கையை  நேர்பட பார்க்கத் தரும் ஒரு வாய்ப்பாக இருந்தது. நாடகவியலாளர்அ.மங்கை ஒருங்கிணைப்பில் இந்திய மாணவர் ...

யதார்த்தமான கலைப் பார்வை, சமத்துவ உணர்வு , விளிம்பு நிலை மக்கள் பால் அன்பு , பெண் நிலைவாதம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் போன்ற கருத்தாடல்கள் மீதான நம்பிக்கை கொண்ட ஞானராஜசேகரன் இந்த முறை பெண்ணிலைவாத பார்வையோடு  ஐந்து உணர்வுகள் படத்தை தந்திருக்கிறார். எழுத்தாளர் ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோகமுள் , பாரதி ,பெரியார், ராமானுஜன் படங்களை தந்தவர் என்ற வகையில் இயக்குனர் ஞானராஜசேகரன் மீதான பெரிய எதிர்பார்ப்போடு தான் இந்த படத்தை பார்க்க சென்றோம். ...

எல்லா துறைகளிலும் ஜனநாயக காற்று வீசுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கதவுகளை யெல்லாம் அடைத்து வருகிறது பாஜக அரசு! சமகால சமூக அரசியல் பிரச்சினைகளை சினிமாக்கள் பேச ஆரம்பித்திருப்பது பாஜக அரசை பதை,பதைக்க வைத்துள்ளது. எனவே, சென்சார் போர்டுகளில் எல்லாம் கட்சி ஆட்களைப் போட்டு கடும் நிர்பந்தம் தந்து வருகிறது. அதை எதிர்த்து டிரிபூனல் போய் போராடி மீட்டு வரும் வாய்ப்பை தற்போது காலியாக்கிவிட்டது. திரைப்படச் சான்றிதழ்  மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal)  மத்திய அரசு  கலைத்து விட்டது. தணிக்கை வாரியம்  திரைப்படங்களுக்கு ...

மும்பையில் வாழும் ஐந்து பெண்களின் கதையைப் பேசும் தொடர் Bombay Begums ! இது, நெட்பிளிக்சில்  ஓடிக் கொண்டிருக்கிறது.  வளரிளம்  பெண்ணிலிருந்து, இறுதி மாதவிலக்கை எதிர் நோக்கும் நிலைவரை உள்ள (menopause) பல்வேறு பெண்களின் வாழ்க்கையை இது பேசுகிறது. பாலியல் ஆசை, அதிகாரத்தேடல், சுயகெளரவம், குழந்தை வளர்ப்பு, பாலியல் சீண்டலா என்பதை உணர்ந்து கொள்ளக்கூட முடியாதத் தன்மை .. என பல சம்பவங்கள் இந்தத் தொடரின் ஊடாக வருகிறது. அலான்கிரிதா ஸ்ரீ வத்சவா என்ற (Alankritha Shrivatsava) என்ற பெண் இயக்குநர் இதற்கு வசனம் ...

தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்! இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்!  அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது ...

காவ்ரே பாய்ரே ஆஜ் – காதலின் ஊடாக சமகால அரசியலைப் பேசுகிறது! (Ghavre Baire aaj -வீடும் உலகமும் இன்று). இது ஒரு முக்கோணக் காதல் கதை. மனித நேய விழுமியங்களுடன் பெண்ணிய உணர்வுகளை சொல்லும்  அபர்ணா சென்னின் இந்த அற்புத படைப்பானது கண்ணியமான காதல் எது? கபட வேஷம் தரித்த காதல் எது என்ற புரிதலை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது! இந்தியாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி இந்துத்துவ அரசியலை, அதன் அணுகுமுறைகளை நேர் கொண்ட பார்வையுடன் எதிர்கொள்ளும் அந்த பத்திரிகையாளன் கதாபாத்திரம் பிரமிப்பூட்டுகிறது. ...

த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது. சிறந்த திரைப்படத்துக்கெனவும் , கான்ஸ்டபிள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக  கலாபவன் ஷாஜோனுக்கும் கேரள அரசின்  விருதுகளைப் பெற்றுத் தந்தது த்ரிஷ்யம்.    சிறந்த நடிகை (ஆஷா ஷரத்) மற்றும்  சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது. தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகர் (கலாபவன் ஷாஜோன் ) என மூன்று விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் முதல் வரிசையில்போய் அமர்ந்தது த்ரிஷ்யம். அது குறித்து மேலும் சில சுவைக்கும் தகவல்கள்…. ஏறத்தாழ 15 கோடி ரூபாய்க்கு இதன் ரீமேக் உரிமை விற்கப்பட்டதாகச் சொல்லுகிறார்கள்…! 2014 இல் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் மறு ...

சமரசமற்ற ஒளிப்பதிவு மேதை, திரைக்கதையோட்டத்திற்கு அன்னியமாக ஒரு போதும் திசைமாறாத கேமரா அவருடையது! கதைக்கான மைண்ட் செட்டப்போடு, ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்பவர் என்ற வகையில் ஒரு இயக்குனரின் எண்ணத்தை காட்சி வடிவில் கொண்டு வந்து நிறுத்துவதில் தன்னிகரற்றவர்! அந்த வகையில் பாரதிராஜாவின் முதல் ஐந்து படங்களின் வெற்றியில் கேமரா நிபுணர் நிவாஸிற்கும் கணிசமான பங்கிருந்தது! என் பள்ளிக்காலம். ஏதோ ஒரு வார இதழில்  கமலஹாசனிடம் இப்படி ஒரு கேள்வி : ‘ பாலுமகேந்திரா, அசோக்குமார், நிவாஸ். மூன்று ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?” பாலுமகேந்திரா, அசோக்குமார் குறித்து தன் கருத்தை  சொன்ன  கமல், நிவாஸ் குறித்து,              ‘’நோ கமெண்ட்ஸ்’’ என்று பதில் சொல்லியிருந்தார். ...

தகுதிக்கு மீறிய வகையில் தன் பிம்பங்களை கட்டமைத்து வித்தை காட்டும் சினிமா ஹீரோக்கள் மத்தியில் கதாபாத்திரத்திற்குள் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வதற்கு மேலாக எதையும் மிகையாக முயற்சிக்கமாட்டார்! கதாநாயகனுக்குரிய அனைத்து மாயைகளையும் கட்டுடைத்த இயல்பான மனிதன்! இந்த வகையில் தான் விஜய் சேதுபதி மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு கலைஞனாக வலம் வருகிறார் என்று தோன்றுகிறது! பொதுவாக சினிமா என்ற மீடியாவால் பொய்யானவர்கள் நல்லவர்களாகவும், அயோக்கியர்கள் உத்தமர்களாகவும் தோற்றம் பெற்று விடுகின்றனர்! இப்படி அவர்கள் தோற்றம் பெற பத்திரிகைக்காரர்களும் தங்கள் பங்கிற்கு துணை போவார்கள்! அப்படி ...

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து “பாவக் கதைகள்” என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. சாதி கெளரத்திற்காக கொடுர கொலைகளை செய்வதாக காட்சிப்படுத்தப்படும் கதைகளை படமாக்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படம் நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது! ஆனால்,  அவ்வாறு கொலை செய்வதை காட்சிப்படுத்தப்படும் அணுகுமுறையில் இவ்வித பாவச் செயலை செய்வதை நியாயப்படுத்துகிறார்களா? அல்லது குற்றமென ரசிகர்களை உணர வைக்கிறார்களா…? இந்தக் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய தாக்கம் என்ன..? என்பது குறித்து திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன், பீட்டர் துரைராஜிடம் பேசியவை;  ‘பாவக் கதைகள்‘ படம் குறித்து ...