மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு ...

கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா ...

மு.கருப்பசாமி, அருப்பு கோட்டை, விருதுநகர் ”கோயில் சொத்துகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்,பெருச்சாளிகளாக பிறப்பார்கள்” என்கிறாரே மதுரை ஆதீனம்? அவர் வாக்கு பலிக்கப்பட்டும். அப்படியே பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாக – கேட்பாரில்லாத சுகபோக வாழ்க்கையை – அனுபவிக்கும் ஆதினங்களுக்கு அடுத்த பிறவி என்ன? என்பதையும் சொன்னால் தேவலாம். ஜி.வெங்கடாச்சலம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாரிதாஸுன் கைது கருத்து சுதந்திரந்திற்கு எதிரானதா? திமுக இதில் பின்வாங்குமா? கருத்து சுதந்திரத்தையும், அவதூறு பரப்பலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. ஒரு இயக்கத்திடம் இருந்து ...