பதின்பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர். தவறான ரோல் மாடல்களை  பின்பற்று கின்றனர். உடல் உழைப்பை குறித்தோ, கடமைகள் குறித்தோ அறியாதவர்களாக வளர்கின்றனர். இவர்களிடம் சுமூகமான உறவைக் கட்டமைப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யலாம்? தினச் செய்திகளில் குறைந்தது 2 செய்திகளாவது வன்முறை, தற்கொலை முயற்சி, திருட்டு, போதை பழக்கம் போன்ற பல குற்றங்களில் மாணவ/மாணவிகள் ஈடுபடும் செய்திகளை பார்க்க முடிகிறது. முக்கியமாக இவர்கள் அனைவருமே வளரிளம் பருவ வயதினராக இருக்கின்றனர். பொதுவாக நாம் எல்லாருமே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.பிறகு வளர்ந்துவிட்ட பெரியவர்களூக்கு முக்கியத்துவம் ...

மலேசிய இந்தியர்களில் 85% தமிழர்களாக உள்ளனர். ஆனால், இந்திய அரசு இங்கு ஏனோ அதிகாரிகளாக தமிழர்களை நியமிப்பதில்லை.தூதரகத்தை நாடும் தமிழர்களை வட இந்திய அதிகாரிகள் அலைக்கழித்தல், அவமானப்படுத்தல் தொடர்கிறது! மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை மலேசியா தமிழர்களிடம் திணிக்க துடிக்கிறார்கள்! மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும் இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் ...

கடும் நிதி நெருக்கடிகள்! பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாத நிலைமையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மூச்சுத் திணறுகிறது! அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது! காரணம் என்ன? யார் பொறுப்பு? தென்தமிழகத்தின் கல்வித்தேடலுக்கு ஒரு கலங்கரை விளக்காக ஒளி வீசிப் புகழ் பெற்ற  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இன்று தடுமாறிக்கொண்டுள்ளது வேதனை. வரலாறு பல படைத்த அன்றைய மதராஸ் பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம் Madras University) நிகராக மதுரையில் தென்தமிழகத்தின் கல்வித்தேவையை முன்னிட்டு 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மதுரை பல்கலை கழகம் பின்னாட்களில் ...

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள்; 7 ‘பள்ளிக் கூடம் சென்றோமா? மாணவர்களுக்கு பாடம் நடத்தினோமா?’ என்ற அளவோடு நிற்பதில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை! சதாசர்வ காலமும் கற்பித்தல் அல்லாத பணிகள் ஏராளமாக தரப்படுகின்றன. இதில் EMIS பதிவேற்றம் என்ற டேட்டா என்ட்ரீஸ், கடும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறது, ஆசிரியர்களை! EMIS( Educational Management Information System)  கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் .  தலைப்பே சொல்கிறது , இது கற்பித்தல் பணி அல்ல , மேலாண்மைப் பணி என்பதை! பள்ளிகளில் ஒரு மாணவர் சேரும் பொழுதே அவருக்கு ...

பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..! ” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து  மரத்தின்  கீழ்தான் ...