இன்றைய மனித குலம் மாத்திரை, மருந்துகளுடன் வாழ்க்கை நடத்துகிறது! ஒவ்வொரு குடும்பத்திலும் மளிகைக்கு ஒரு பட்ஜெட் இருப்பது போல, மெடிக்கலுக்கும் பட்ஜெட் போடுகிறார்கள்! எந்த மருந்து, மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவு உண்டு! மருந்தே உணவாக மாறுவது ஆபத்து! உணவே மருந்தாக இருந்தால் ஏது நோய்? `உணவே மருந்து மருந்தே உணவு’ என்று சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இன்றைய சூழலில் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாது, உயிர் வாழவும் முடியாது என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிப் போய்விட்டது. ...

‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ‘ -மருத்துவம் சார்ந்த இந்தப் பழமொழியின் பொருள், நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக் கொள்ளக் கூடியது முருங்கைக் கீரை  என்பதாகும்!  பற்பல அரும்பெரும் அற்புதங்களை நிகழ்த்தி பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! இந்தக் கீரையை யார் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ அவர் வயதானாலும் கையில் கம்பு, குச்சி ஊன்றாமல் நடந்து செல்வார் என்பதாகும். முருங்கை கீரை தாய்ப்பால் ஊறச் செய்யும், ஆண்மைக் குறை போக்கும்! ஆனால், நம்மில் பலர் இந்தப் பழமொழியை தவறாக புரிந்துகொண்டு, தங்கள் ...

காய்கறிகள், கீரைகளில் மட்டுமல்ல, கிழங்குகளிலும் சத்துகள், மருத்துவ குணங்கள் உள்ளன! பொதுவாக கிழங்குகள் வாய்வுக் கோளாறை ஏற்படுத்தும் என்பதால் வாய்வு, வாதக்கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பார்கள்! சில கிழங்குகளின் சுவையும், மருத்துவ குணங்களும் அபாரமானவை! எல்லோருக்கும் விருப்பமான உணவுகளில் கிழங்கு வகைகளும் நிச்சயம் இடம் பெறும். கருணைக் கிழங்கு; கிழங்குகளில் கருணைக் கிழங்கை மட்டுமே மிக முக்கியமானதாக வள்ளலார் சொல்கிறார். பெயரிலேயே கருணை குடி கொண்டிருக்கிறது! காரணம், மூல நோய் உள்ளவர்களை கருணை காட்டி குணமாக்கும் என்பதால் தான்! கருணைக் கிழங்கில் இரு ...

கொரோனாவுக்குப் பிறகு நம்மில் பலருக்கு புதிது புதிதாக நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. கொரோனா நோய் பாதித்தவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் உடல் நல பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி ஆண்மைக்குறை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் பலர் வியாபார நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறை பிரச்சினைக்காக மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிகிச்சை பெற்றும்கூட தீர்வு கிடைக்காமல் பலர் விழிபிதுங்கி ...

Liver எனப்படும் கல்லீரல், மனித உறுப்புகளில் மிக முக்கியமானது! ஜீரணம் நடைபெறவும், ரத்தம் சுத்திகரிக்கப்படவும் கல்லீரல் அவசியம். இன்றைய தவறான உணவு பழக்கங்களும், மதுபான பயன்பாடும் கல்லீரலை கண்டமாக்கிவிடுகின்றன! எனில், கல்லீரலை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன? கல்லீரலானது செரிமான இயக்கம் நடைபெற பித்தநீரைச் சுரக்கச் செய்கிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இன்று கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிதாகிவிட்டது! இப்படிப்பட்ட கல்லீரலை குடியால் கண்டமாக்கிக் கொண்டவர்களைக் கூட மீட்கலாம் இயற்கை மருத்துவத்தில்! நமது உடலில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்றத்தில் மிக ...

மலச்சிக்கல்… பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாவதை போல, அடிக்கடி சிலருக்கு வயிற்றைக் கலக்கி மலம் கழிக்கும் பிரச்சினை உள்ளது. செரிமானக் கோளாறு மற்றும் குடல் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினையாக இருக்கலாம். இதை இயற்கையான வழிமுறைகளில் எளிதில் சீராக்கலாம்! அடிக்கடி மலம் போவது சில நீண்டகால மற்றும் தீவிர நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாந்தியுடன் கூடிய பேதி, வெறும் நீராக வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ரத்தமும் சீழுமாக மலம் வெளியேறுவது போன்றவை நிகழ்ந்தால் அதுவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க ...

அடிக்கடி பிளட் பிரஷர் உங்களுக்கு எகிறுகிறதா? தலை சுற்றல் மயக்கம் வருகிறதா? சிம்பிளா அதுக்கு ஒரு தீர்வு இருக்கு! உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய முடிந்தாலே போதுமானது! செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? நமது உடலின் இரத்த அழுத்தம் 120க்கு 80 அதாவது சிஸ்டாலிக்120ம் டயஸ்டாலிக் 80ம் இருக்கிறது சமநிலையான இரத்த அழுத்தம் அப்படின்னு சொல்றாங்க. இந்த எண்ணிக்கை உயரும் போது உயர் இரத்த அழுத்தம் அப்படின்னு குறிப்பிடுறாங்க. தீவிரமாக விளையாடும் போதோ அல்லது பரபரப்பாக ...

எந்தவித செலவும் இல்லாமல், மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாப்பிட்டாலே போதும், மஞ்சள் காமாலை விலகிவிடும். மஞ்சள்காமாலை வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பித்தம் அதிகரிக்கும் போது  வரும் இந்த நோய்க்கு கீழாநெல்லி என்ற இந்த மூலிகையைச் சாப்பிட்டாலே போதுமானது! கீழாநெல்லி மூலிகை பற்றி நம்மில் சிலருக்குத் தெரியும்; சிலருக்கு இது தான் என்று அடையாளம் காணத் தெரியாது. ஆனாலும், பலருக்கு அந்தப் பெயர் பரிச்சயமான ஒன்றே. அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கீழாநெல்லி தாவரம் சாலையோரங்கள், வெட்ட வெளிகள், பூங்காக்கள் ...

விரை வீக்கம்… ஆண்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுள் ஒன்று. ஆங்கிலத்தில் இதை  ஹைட்ரோசெல் என்பார்கள். ஆண்களின் விதைப்பை வீங்குவதால் ஏற்படுவது! குழந்தைகளுக்கு கூட வருகிறது. இதற்கு மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரவரே எளிய முறையில் இதிலிருந்து விடுபடலாம். ஆண்களின் விரை அல்லது விதைப்பை என்று சொல்லப்படும் இடத்தைச் சுற்றிலும் ஜவ்வு மாதிரி இருக்கும். பை போன்ற அமைப்பில் காணப்படும் இந்த இடத்தில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினையே விரை வீக்கம் அல்லது விதை வீக்கம் எனப்படுகிறது. இது தவிர, வாய்வுக்கோளாறு காரணமாகவும், மென்மையான ...

கொரோனாவுக்குப் பிறகு பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சொட்டு மூத்திரம், முக்கிக்கொண்டு மலம் கழித்தல், தூக்கமின்மை, வயிறு மந்தம், வயிற்றுவலி என ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். மருத்துவர்களிடம் தீர்வு கேட்டால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிறது. முன்பைப் போல் உடம்பு ஒத்துழைப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் பலரையே பார்க்க முடிகிறது. என்ன சாப்பிட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை என்கிறார்கள். வயது வித்தியாசமில்லாமல் இளம் வயதினர் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி அவர்கள் படும் பாடு சொல்லி மாளவில்லை. `எத்தனையோ டாக்டர்களை பார்த்துவிட்டேன், என்னென்னவோ டானிக், மாத்திரையெல்லாம் ...